Skip to main content

இரவு

எழுதியவர்: எலீ வீசல்
மொழிபெயர்ப்பு: ரவி.தி.இளங்கோவன்
வகைமை: சுயசரிதை
வெளியீடு: எதிர் வெளியீடு

இனப்படுகொலைகள் எப்பொழுதுமே ஒரு அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அரசு நேரிடையாகச் செயல்படாமல், முறையாகப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட கும்பலை, வன்முறையாளர்களைப் பயன்படுத்தித் தாக்குதலை, கொலைகளை, வன்புணர்ச்சிகளை நிகழ்த்துகிறது - இனப்படுகொலை கண்காணிப்பு அமைப்பு

சோபா சக்தியின் படைப்புக்களைத் தொடர்ச்சியாக வாசித்து முடித்த சிறு இடைவெளிக்குப் பிறகு வாசிக்கும் போர் மற்றும் இன அழிப்பு குறித்த நாவல் "இரவு".
 
நாஜி ஹிட்லர் படையின் யூத இன அழித்தொழிப்பின் ஒரு பகுதியான "ஆஸ்விட்ச்" வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த பதினைந்து சிறுவனின் சுய சரிதை.
 
யூதர்களின் சொத்துகளைக் கொள்ளையடித்து, அவர்களைப் புழுவிலும் கீழான பிறவிகளாக நடத்திய நாஜிப்படை, அவர்கள் மீது கொஞ்சமும் இரக்கமற்ற குரூரமான சித்ரவதைகளை நிகழ்த்தியிருக்கிறது. வரலாற்றில் நிரந்தரமாகப் படிந்து போன ரத்த கறை.
 
யூதர் என்ற ஒரே காரணத்திற்காக வதைமுகாமில் அடைபட்டு, தங்களுக்கான சவக்குழிகளைத் தாங்களே தோண்டிக் கொண்ட மனிதர்களை நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் பதைபதைக்கிறது. மனிதன் குரூரமானவன். அதிலும் வெறுப்பை அடிப்படை தத்துவமாகக் கொண்டு இயங்குபவன் மிகவும் குரூரமானவன்.
 
வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த அனுபவத்தை யூத இனத்தின் அழிக்க முடியாத துயர சாட்சியத்தை படைத்திருக்கிறார் எலீ வீசல். அதனைச் சிறப்பான முறையில் தமிழாக்கம் செய்துள்ளார். ரவி.தி. இளங்கோவன்.

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...