வைரமுத்துவின் வழக்கமான நாவல்களில் சற்று அல்ல அல்ல பெரிதும் மாறுபட்ட மகத்தான படைப்பு "மூன்றாம் உலகப் போர்".. புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய கணமே, ஒரு பரபரப்பு மனதைத் தன் வசப்படுத்திக் கொள்கிறது... நெஞ்சத்தின் ஓரத்தில் இதுவரை தோன்றிடாத பயமொன்று மெல்ல கசியத் தொடங்குகிறது... தன் நாவலின் பாத்திரப் படைப்புகளில், எதார்த்தத்தை அள்ளிக் கொட்டும் கவிஞர், இதில் தன் ஆதங்கத்தையும், அறிவியில் அறிவித்துள்ள அச்சங்களையும் சேர்த்து, தான் உண்டாக்கியப் பத்திரங்களின் மூலம் அறைகூவல் விடுத்திருக்கிறார்... விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியாத, அறிய விரும்பாத கருத்தமாயி... அவருக்கு உறுதுணையாக நின்று, தான் கற்ற கல்வி மற்றும் அனுபவம் மூலம் ஊரை மாற்றத் துடிக்கும் அவரின் இளைய மகன் சின்னப்பாண்டி.. ஊரை அடித்து உலையில் போடும் அவரின் மூத்த மகன் முத்துமணி... வேளாண்மை மற்றும் இயற்கை பற்றிய ஆய்வு கட்டுரை மூலம் இந்தியாவிற்கு வரும் எமிலி என்ற அமெரிக்கப் பெண்... சுனாமியில் தாய் தந்தையை இழந்த இஷிமுரா என்ற ஜப்பானிய இளைஞன்.. இவர்கள் தாம் முக்கியப் பாத்திரங்கள்... எமிலி மற்றும் இஷிமுரா பாத்திரங்கள் மூலம் நாம...