Skip to main content

சென்னை புத்தகத் திருவிழா...!!!

'கணினி'யுகமானாலும் காகிதத்தின் மீதான மதிப்பு குறைந்து விடவில்லை.. புத்தகங்களெல்லாம் 'ஆப்'களாக மாறிக் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு காலத்திலும் காகிதப் பூக்கள் மடிந்து விடாமல் இன்னும் மலர்ந்து கொண்டே இருக்கின்றன...

இராயப் பேட்டை YMCA வளாகத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவின் கடைசி நாளான இன்றும், வயது குறைந்த முதியவர்கள் முதல் வயதான இளைஞர்கள் வரை ஏராளமானோர் வருகைப் புரிந்திருந்தனர்...

தங்களுக்குத் தேவையான புத்தகங்களையும், தங்களுக்குப் பிடித்த பதிப்பகங்களையும் ஆவலாய் தே(நா)டினர்...

ஒரு சிறுவன் "பொன்னியின் செல்வன்" புத்தகத்தைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு அரங்குக்குள் கர்வமாகச் சுற்றித் திரிவதைப் பார்க்க முடிந்தது... அவனுடைய கர்வத்தில் கல்கியின் மதிப்பும், தமிழ் மொழியின் செல்வாக்கும், மூளைக்குள் ஒரு நிமிடம் மின்னலைப் பாய்ச்சி சென்றன...

மற்றொருபுறம், வயதான கணவன் மனைவி தம்பதி, வாங்கிய புத்தகங்களைத் தூக்க முடியாமல் தவித்து கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது...

குறிப்பிட்ட பதிப்பகங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது...

புத்தகங்கள் 'ஆப்'களாக வெளி வந்தாலும், புதிய புத்தகத்தின் பக்கங்களில் நிரம்பியோடும் அந்த நறுமணத்தை, நாசிகளின் ஊடாக மூளைக்குள் மூழ்கி, இரத்த ஓட்டத்தைச் சிலிர்க்க வைக்கும் சுகத்தை அந்த 'ஆப்'களினாலோ 'பிடிஎஃப்' களினாலோ ஒருபோதும் அளிக்க முடியாது...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...