Skip to main content

சாவுக்குச் சமர்ப்பணம்...

ஒரு மனிதன் வாழும் வரையில் அவனது குறைகளை மட்டுமே தேடிக் கண்டுபிடித்து கொண்டாடித் தீர்க்கும் இந்த சமூகம், அதே மனிதன் இறந்த பிறகு அவனது நிறைகளையும் கொஞ்சம் சல்லடையிட்டு கண் திறந்துப் பார்க்கிறது...

இந்த உலகில் அனைவருமே குறையுள்ளவர்கள் தான்...  ஆனால் குறையின் மிகப் பெரிய பலமே ஒருவனின் மற்ற நிறைகளை மறக்க வைப்பதும் மறைத்து வைப்பதும் தான்... அந்த குறைகளையே மறக்க வைத்து ஒருவனின் நிறைகளை வெளியே கொண்டு வருகிறது என்றால் "சாவு" எவ்வளவு உயர்வானது... அந்த வகையில் சாவுக்கு ஒரு பெரிய சலாம் இடலாம் என்று தோன்றுகிறது...

ஆனால் ஒருவனின் நிறைகளை இந்த சமூகம் போற்றுவதற்கு அல்லது மனதார பாராட்டுவதற்கு அவனின் சாவு வரையில் காத்திருக்க  வேண்டுமா என்ன...?

ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சர் வீட்டில் இருக்கும் போது அவருடைய மனைவி சாரதா  தேவி சமையலுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொண்டிருந்தார்... அப்பொழுது சிலவற்றை சல்லடையிலும், சிலவற்றை முறத்திலும் சுத்தபடுத்திக் கொண்டிருந்தார்...
அமைதியாக அதைக் கவனித்துக் கொண்டிருந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதாவிடம், வாழ்க்கையில் நாம் சல்லடையாக இருப்பதை விட முறமாக இருப்பதே உயர்வானது என்றார்..

எவ்வாறு என்று தன் கேள்விப் பார்வையை இராமகிருஷ்ண பரமஹம்சரின் மீது தெளித்தார் சாரதா தேவி அவர்கள்.. அதற்கு அவர் சொன்னார்...

சல்லடை எப்பொழுதுமே கெட்டவற்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு நல்லவற்றை வெளியேத் தள்ளுகிறது... ஆனால் முறமோ கெட்டவற்றை நீக்கி விட்டு நல்லவற்றை மட்டும் தன்னகத்தே வைத்துக் கொள்கிறது...

முறத்தைப் போல நாமும் பிறரின் குறைகளை விட்டுவிட்டு நிறைகளை மட்டும் போற்றுவோம்... வாழும் போதே சகமனிதனைப் பாராட்டுவோம்...      

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...