Skip to main content

Posts

எழுத்து...

எழுதும் போது ஓர் அர்த்தத்தைக் கொடுக்கிறது எழுதிய பின் பல அர்த்தங்களைச் சேர்க்கிறது.. கார்த்திக் பிரகாசம்..
செத்து பிழைக்க நானொன்றும் மரணிக்கவில்லை பிழைத்து சாக நான் இன்னும் ஜனிக்கவே இல்லை கார்த்திக் பிரகாசம்...

காதல்

சிலருக்கு வரம் சிலருக்கு சாபம் சிலருக்கோ வரமாய் வந்த சாபம்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஊர்களிலுள்ள "நியாய விலைக் கடை"களில் "நியாயம்" என்பது பெயரளவில்தான் நிற்கிறது மற்றபடி "நியாயம்" என்பது விலையில் மட்டும்தானே தவிர தரத்தில் அல்ல. போகிற போக்கை பார்த்தால் அதுவும் இனிமேல் இருக்காது போலிருக்கிறது. "நியாயம்" நாட்டில் காணக் கிடைக்கும் அறிய விடயமாகி விடுமோ என்ற அச்சம் அதிகமாகிறது. ஆனால் நமக்கு "நியாய விலைக் கடைகள் தேவையில்லை. "நியாய விலை நியாய தரம்" கொண்ட கடைகளே தேவை. "நியாயம்" நாட்டில் நிலையாக நிலைக்கட்டும்... கார்த்திக் பிரகாசம்...
எங்கு எவர் செவிகளிலும் கேட்பொறியொன்று கூடுதல் உடல் உறுப்பாகியிருக்கிறது. இன்று விரல்நுனியில் எந்த பாடலை வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கேட்கலாம். ஆனால் சொந்த ஊரில் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்லும் போது பேருந்தில் இசைக்கும் இளையராஜாவின் பாடலில் ஆசைகள் கஷ்டங்கள் உறவுகள் நினைவுகள் ஏக்கங்கள் நெஞ்சை சற்றுக் கூடுதலாக அலைக்கழிக்கும். டீக்கடையில் ஓடும் தேவா பாடல்கள் வழக்கத்தை விட அதிகமானத் துள்ளலை உண்டாக்கும். ஊடல் பொழுதுகளில் யுவனின் இசை ஆறுதலை வஞ்சமில்லாமல் அளிக்கும். கூடல் காலங்களில் ரஹ்மானின் ராகம் காதலை கொஞ்சம் உயர்த்தி பிடிக்கும்.கேட்கும் இடத்தை பொறுத்து இசையின் சுவையும் மாறுபடும். எதிர்பாராத பொழுது தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ வெகுநாட்களுக்கு பிறகு கேட்கும் நமக்கு பிடித்த பாடல் பால்ய கால பரவசங்களை கண்முன் கொண்டு வந்து மயிர்க் கூச்செரிய செய்யும். இதயமும் கொஞ்சம் இடைவெளி விட்டு துடிக்கும். அந்த இடைவெளியை கீதங்கள் நிறைக்கும். மாய நினைவுகள் மனதை மயக்கும். "ஒலியும் ஒளியும்" "கோடை பண்பலை" யென்று பாடல்களுக்காக காத்திருந்த காலம் இப்பொழுதில்ல...
விரைவு ரயிலில் சென்றால் விரைவாக வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்குச் சென்று விடலாமென்று தங்கள் உயிரை பணயம் வைத்து தொங்கி கொண்டு செல்பவர்களின் கவனத்திற்கு.. பரங்கி மலையில் மூன்று உயிர்கள் பரிதாபமாக நேற்று பலியாகி உள்ளன. அதிக கூட்டத்தினால் தொங்கி கொண்டு பயணம் செய்தவர்களில் ஒருவரின் பயணப்பை எதிரே வந்த மின் கம்பத்தில் மாட்டிக் கொள்ள கண் இமைக்கும் நேரத்தில் ஏழு பேர் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்துவிட்டனர். நான்கு பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண் அயரும் நேரத்திலும் கவனமாக இருக்க வேண்டிய காலம். கூட்ட நெரிசலில் நெருக்கியடித்து படிக்கட்டின் விளிம்பில் நின்று பயணம் மேற்கொள்ள முனையும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் வீட்டில் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பெற்றோரைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும், தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை பற்றியும் சிந்திக்கவும். ரயில்வே நிர்வாகமும் ஒரு பெட்டியில் பயணிக்க வேண்டிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டும். தானியங்கி கதவுகளை அனைத்து வகையான ரயில்களிலும் ...
இலக்கங்களை மட்டும் இலக்காகிக் கொண்ட வாழ்க்கைப் பந்தயத்தில் இடறி விழுந்த சகமனிதனைத் தூக்கிவிட கரம் நீட்டாமல்,எழுந்து கால் ஊன்ற கால அவகாசம் அளிக்காமல், இடம் தடம் தெரியாமல் ஏறிமிதித்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் தோற்றவர்கள் யாரும் இல்லை. ஜெயித்தவர்கள் என்று எவரும் இல்லை. கார்த்திக் பிரகாசம்...