Skip to main content

""தாயும் மனைவியும்""

    வெகு நாட்களாக ஒரு சந்தேகம் கடவுள் ஏன் கருவறையை பெண்களுக்கு வைத்தான் என்று..! பிறகு தான் தோன்றியது கடவுள் கண்டிப்பாக ஆணாக  இருக்கக் கூடும். அதனால் தான் இந்த உயிர் பெரும் வலியை நம்மால் தாங்க இயலாது என்று பெண்களுக்கு வைத்திருப்பான். ஏனென்றால் இந்த உயிர் பெரும் வலியே சில நேரங்களில் உயிர் எடுக்கும் வழியாக மாறக்கூடும். ஆனால் பெண்கள் இந்த உயிர் ஈயும் வலியைக் கூட சுகமாகத் தான் நினைக்கின்றனர்.

    தான் கருவுறும் போது  அந்த தாய் பெரும் சந்தோசத்திருக்கு அளவே இல்லை. கருவுற்ற கணம் முதலே தன் கண் மணிக்காக அந்த தாய் இழக்கும் சின்ன சின்ன விஷயங்களும் அதனால் பெரும் வலிகளும் எண்ணிலடகங்காதவை.கரு வளர வளர உடளவில் ஏற்படும் சிரமங்களால் உண்டாகும் கண்ணீரைக் கூட குழந்தைப் பெறப் போகும் நினைவுகளால் ஆனந்த கண்ணீராய் மாற்றுபவள். குழந்தைப் பெற போகும் தருணத்தில் உண்டாகும் வலிகளைக் கூட வெளியே சொல்லாமல் தன் குழந்தைக்காகத்  தானே என்று எண்ணி பெருமை அடைவாள். ஒவ்வொரு தாயும் தன் குழந்தைப் பிறவி எடுக்க அவள் தன் வாழ்வின் மறு பிறவி எடுக்கிறாள் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

    எங்கிருந்தோ ஒரு ஆணின் வாழ்க்கையை நிம்மதியானதாகவும்  ஒளிமயமானதாக்கவும் வரும் தேவதை மனைவி. கணவனிடம் உண்மையான அன்பை தவிர வேற எதையும் எதிர்ப் பார்க்காத பெரும்பான்மை மனது உடையவள்.வாழ்வின் அணைத்துக் கட்டங்களிலும்  கணவனுக்கு முதுகெலும்பாக இருப்பவள். அன்பை அள்ளித் தெளிக்கும் கொடையாளி. ஒவ்வொரு ஆணின் உண்மையான தோழி. எந்நேரமும் கணவனையும் குழந்தையையும் பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநலவாதி.

    இந்த உலகில் யாரை நாம் மறந்தாலும் மறவாமல் போற்றப்பட வேண்டிய இரு ஜீவன்கள் தாய் மற்றும் மனைவி. நமக்கு வாழ்கையில்  பிறப்பால் மதிப்பால் அடையாளம் கொடுக்கும் இரு உயிர்கள். ஒரு தாய்ச் சொன்னால் தான் அவன் மகன் அதே போல தன் மனைவி மனது வைத்தால் தான் அவன் ஆண் மகன். இந்த இரண்டு பெண் மணிகளுக்கும் நாம் என்ன செய்தாலும் ஈடாகது. அதனால் உயிர் உள்ளவரை அவர்களுக்கு மரியாதையுடன் அன்பு செலுத்தி வணங்குவோம்.

"""என்னை சுமந்தவளுக்கும் என் உயிரை சுமப்பவளுக்கும்"""

கார்த்திக் பிரகாசம்..  
    

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...