Skip to main content

Posts

Showing posts from April, 2015
காலம் கடந்து மோகம் கொண்ட இரு மேகங்களின் கடைசி முத்தத்தில் பொழிந்தது மாமழை... கார்த்திக் பிரகாசம்...

அவள் என் தேவதை..

நெற்றியில் நடனம் பயிலும் ஒற்றைமுடி... சிகப்பழகை சிறப்பழகாக்கிக் கொண்டிருக்கும் சிறிய குங்குமம்... கயல் விழிகளை காந்த விழிகளாக்கிக் கொண்டிருக்கும் கண் மை... மூக்கில் மோட்சம் அடைந்திருக்கும் மூக்குத்தி... காதோரத்தில் கானம் பாடும் கம்மல்... வானவில்லை வளைத்துக் கட்டியிருக்கும் வளையல்... இணைப்பிரியா இமைகள் கூட விரதம் இருக்கின்றன இவளை விழிகள் கண்டுக் கொண்டே இருக்க.. இதயம் இரண்டும் பார்வையால் இணைந்தே இருக்க.. கார்த்திக் பிரகாசம்..

விபச்சாரி 80 ரூபாய்..

          போரில் மனைவியை இழந்த கணவன், கணவனையும் தந்தையையும் இழந்த பெண் மற்றும் அம்மாவை பார்க்காத பிள்ளை என்று ஒட்டுமொத்த ஈழத்து மக்களின் ஒருமித்த பிரதிபலிப்பு.        யாழ். தர்மினி பத்மநாபன் என்பவரால் எழுதப்பட்ட இந்த புத்தகம், "ஈழத் தமிழர்களின் ஆசைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் மற்றும் போரினால் அவர்கள் இழந்த வாழ்க்கை என நம்மை ஏகத்துக்கும் கரைய வைக்கின்றது. எல்லாவற்றிக்கும் மேலாக தாய் நாடான தமிழ் நாட்டிலேயே அவர்களை அகதிகள் என்று அடையாளபடுத்துவது எவ்வளவு பெரிய குற்றமென்பதை கன்னத்தில் அறைந்து உணர்த்துகிறது..  கார்த்திக் பிரகாசம்..
ஆண்களின் வாழ்க்கை காதலுக்கு முன் காதலுக்கு பின் என்று பக்குவப்படுகிறது...!!! பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று திருத்தி எழுதப்படுகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
அன்றாடம் தங்குவதற்கு தடமளவு கூட சொந்த இடம் இல்லாமல் தவிக்கிறான் பாமரன்.. அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்க முன்பதிவு செய்தும் தவிக்கிறான் பணக்காரன்.. அதிர்ஷ்டத்தை ...
உன் பார்வைக்காகவே பல நாள் காத்திருந்தவன் நான்...!! உன் காதலுக்காக காலம் முழுதும் கண்மூடித்தனமாக காத்திருப்பேன்..!!! கார்த்திக் பிரகாசம்...
நண்பனிடம் கடன் வாங்கும் போதெல்லாம் அந்த நோட்டில் காந்தி தெரிவதில்லை நண்பனின் முகம் தான் தெரிகிறது... கார்த்திக் பிரகாசம்...
பணத்தினால் சந்தோசத்தை வாங்க முடியாது.. ஆனால் உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.. உருவாக்கிக் கொடுக்கவும் முடியும்.. கார்த்திக் பிரகாசம்..

மறுபடியும்..

திரு.கனகராஜன் என்பவர்களால் எழுதப்பட்ட சிறு கதைகளின் தொகுப்பு.. இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து சிறு கதைகளும் உணர்வுபூர்வமானவை. ஒரு கதையில், மகன்களால் கை விடபட்ட "அப்பத்தா" தன் பேரனிடம் "கடைசிக் காலத்துல அப்பா அம்மாவை நல்லபடியா பாத்துக்கோ" என்று சொல்லும் போது நமக்கும் கண்களில் வலியுடன் கூடிய கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்க்கின்றன. இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு சிறு கதையையும் "குறும்படமாக " எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் எழுகிறது .. மொத்தத்தில் உறவுகளுக்கிடையே இருக்கும் உணர்வுகளுக்குள் ஊடுருவிச் செல்கிறது இந்த புத்தகம்.. கார்த்திக் பிரகாசம்..

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இந் நாள் இன்னொரு விடுமுறைக்கான தினம் அல்ல.. இனி வரப்போகும் தலைமுறைக்கான தினம்.. நாம் தமிழை மறந்தால் உலகம் தமிழனை மறக்கும்.. தமிழை மறவோம் தமிழைப் போற்றுவோம்.. தமிழ் புத...
என்னை கவனிக்க மறுக்கிறாள்.. ஏனோ என் கவனத்தை ஈர்க்கிறாள்... கார்த்திக் பிரகாசம்...
ஒதுக்க நினைக்கும் உறவுகளிடமிருந்து ஒதுங்கி நிற்பதே உகந்தது.. கார்த்திக் பிரகாசம்...
மதிய நேரத்தில் மாநகர பேருந்தில் பயணிப்பது மரண தண்டனைக்குச் சமம்.. கார்த்திக் பிரகாசம்..

யதார்த்தம்...

விரக்தியில் பேசும் அப்பாவையும் வேதனையில் பேசும் அம்மாவையும் என்றுமே ஒரு மகனால் நேருக்கு நேர் எதிர் கொள்ளவே முடிவதில்லை... கார்த்திக் பிரகாசம்...
தலையைக் கோதி நீ கொடுக்கும் ஒற்றை முத்தத்திற்காக ஆயுள் முழுதும் அடிமையாய் உன் மடியில் தவிழ்ந்திருப்பேன் சிறு பிள்ளையாக... கார்த்திக் பிரகாசம்..
பெத்த கடனுக்காக வாங்கிய கடன்களின் வட்டி விகிதம் தான் பெரும்பாலனோரின் கடைசி கால வாழ்க்கை... கார்த்திக் பிரகாசம்...

வெயில்..

விக்கலுக்கும் வியர்வைத் துளிகளுக்கும் இடையே ஏற்படும் எதிரெதிர் சமன்பாடுகளுக்கான ஒரே வினை.. கார்த்திக் பிரகாசம்..
    சமிபத்தில் செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி மனதை மிக பாதிப்பதாக இருந்தது. அதே சமயத்தில் அந்த செய்தி, நம் நாட்டில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை மனதில் ஆழ பதித்து நின்றது.     சிரியாவில் புகைப்படக் கலைஞர் ஒருவர், அகதிகள் முகாமிற்கு புகைப்படங்கள் எடுப்பதற்காக சென்றுள்ளார். எதிரே சிறு பெண் குழந்தை வர, அந்த குழந்தையை புகைப்படம் எடுப்பதற்காக தனது புகைப்படக் கருவியை எடுத்து உயர்த்தியுள்ளார். ஆனால் அந்த குழந்தை அதை துப்பாக்கி என்று தவறாக நினைத்து கொண்டு, இன்று தனக்கு மரணம் நிச்சயம் என்று யூகித்து மரண பயத்தில் தன் கண்களில் நீர்த் தேங்க இரு கைகளையும் உயர்த்தி நின்றுள்ளது. எந்நேரமும் துப்பாக்கிக் குண்டு சத்தமும், கண் எதிரே துப்பாக்கி ஏந்தி செல்பவர்களை ஏந்தி செல்வதைப் பார்த்தப்படியால் அந்த புகைப்படக் கருவியை துப்பாக்கி என்றும், புகைப்படக்காரரை தீவிரவாதி என்றும் நினைத்து பயந்துள்ளது அந்த பிஞ்சு குழந்தை.. கார்த்திக் பிரகாசம்...
தன் கருவை உயிரில் சுமக்கிறாள் தாய்.. தன் உயிரை கருவாய் சுமக்கிறாள் மனைவி.. தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை.. மனைவியை மிஞ்சிய மானுட பிறப்புமில்லை.. தன்னை கருவில் சுமந்...