Skip to main content

Posts

Showing posts from June, 2015
விதிக்கும் இல்லை விதி விலக்கு...!!! கார்த்திக் பிரகாசம்...
அணை கட்டியும் அடக்க முடியாது சிறு குழந்தையின் அழுகையை...!!! கார்த்திக் பிரகாசம்...
இரயிலில் ஒரு காட்சி... தான் பெற்ற மகளின் மடியில் மீண்டும் ஒரு குழந்தையாய் தன் மகளின் கருவறையை நோக்கி மிதந்து கொண்டிருக்கிறாள் ஒரு தாய்...!!! தான் பெற்றெடுக்கப் போகும் ...
ஒரு பெண்ணை "தீர்க்க சுமங்கலியாய் இரு" என்று வாழ்த்துவதில் கூட ஒரு ஆணின் சுயநலம் ஒளிந்திருக்கிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
   தொழிற்சாலைகளில் மற்றும்  கம்பெனிக்களில் பணியாற்றும் பெரும்பாலானோருக்கு, அந்த வேலை பிடித்திருக்கிறதோ  இல்லையோ, அங்கு அவர்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கு முக்கிய காரணம் அந்த கம்பெனியில் அமைந்த நட்பு வட்டம்.. அந்த நட்பு வட்டம் மட்டும் இல்லாவிட்டால், பெரும்பாலோனோரின் "பணி வாழ்கை" என்பது "பரணில் வைக்கப் பெற்ற கேட்பாரற்று கிடக்கும் பழைய பாத்திரத்தைப் போல தனிமையிலும் வெறுமையிலும்" தான் இருக்கும்.. குடும்ப சூழ்நிலை என்று ஒன்று இருந்தாலும், அந்த நட்பு வட்டம் தான் அவர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..    அத்தகைய நட்பு வட்டத்தில் இருந்து, அடுத்த வேலை, புது பிசினஸ், கல்யாணம் என்று வெவ்வேறு காரணங்களுக்காக ஒருவர் ஒருவராக விலகும் போது, மீதி இருக்கும் மற்றவர்களுக்குத் தன்னிச்சையான ஒரு ஐயம் தொற்றிக் கொள்ளும்..     அந்த ஐயம் ".. அவன் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டான். நாம் இன்னும் அப்படியே இருக்கிறோமே...!!!" என்ற ஆதங்கத்தினால் ஏற்படும் ஐயம் அல்ல.. இவர்களால் "நான் இல்லை நீ இல்லை" என்று நகர்ந்துக் கொண்டிருந்த நாட்களை, இனி இவர்கள் இல்லாமல் எப்படி துரத்துவது என்ற பிரிவி...
மழையைத் தருவதைப் போல பாசாங்கு காட்டிய மேகங்கள் படுத்து உறங்கிவிட்டன போலிருக்கிறது...!!! மழை வரல...!!! கார்த்திக் பிரகாசம்...
நீ முத்தமிட்ட மூச்சு காற்றையெல்லாம் சேர்த்து வைத்தால் இன்னும் இரண்டு ஜென்மங்கள் என் ஜீவன் வாழ்ந்திடும்...!!! கார்த்திக் பிரகாசம்...

அப்பாவுடன் ஒரு நாள்...!!!

அவருக்கு கணித அறிவு இல்லை..!!! ஆனால் கலை அறிவு இருக்கின்றது...!!! அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை...!!! ஆனால் அரசியல் தெரிந்திருக்கிறது...!!! அவருக்கு இணைய தளம் தெரியவில்லை...!!! ஆனால் இயன்றதைக் கொடுக்க தெரிந்திருக்கிறது...!!! அவருக்கு முகநூல் தெரியவில்லை...!!! ஆனால் முயற்சி செய்ய தெரிந்திருக்கிறது...!!! அவருக்கு அறிவியல் பாடம் தெரியவில்லை...!!! ஆனால் அனுபவ பாடம் தெரிந்திருக்கிறது...!!! அவருக்கு கவிதை புரியவில்லை...!!! ஆனால் காசின் அருமை புரிந்திருக்கிறது...!!! அவருக்கு சோகத்தைப் பற்றி கவலையில்லை...!!! ஆனால் சொந்தத்தைப் பற்றி கவலையிருக்கிறது...!!! அவருக்கு மொழிகள் புலப்படவில்லை...!!! ஆனால் என் மௌனம் புலப்படுகிறது...!!! அவருக்கு தேவைகளென்று எதுவுமில்லை...!!! ஆனால் என்  தேவை எதுவென்று அறியாமலில்லை...!!! அவருக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை...!!! ஆனால் என் மீது நம்பிக்கை வைக்காமல் இருந்ததில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

தோழன் தோழி...!!!

   இந்த மண்ணில் ஒவ்வொரு உயிரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆறாம் புலன். ஐம்புலன்கள் உடம்பில் இருக்கு ஆறாவது புலன் உணர்வில் இருக்கு.. பெற்றோர்கள் இல்லாமல் வாழ்வது கூட சாத்தியம்.. ஆனால் நட்பு இல்லாமல் வாழ்க்கையை  வழி நடத்துவது என்பது அசாத்தியம். வாழ்க்கை என்னும் காலச் சக்கரத்தின் அச்சாணி "நட்பு"..   அதிலும் ஆண் பெண் நட்பு என்றால் ஒரு தனி புனிதம். அதில் காதலை தாண்டிய கர்வம் கலந்திருக்கும். அதில் காமத்தை மறந்த ஒரு கண்ணியம் நிறைந்திருக்கும். ஒவ்வொரு தோழனுக்கும் அவனுடைய தோழி ஈன்றெடுக்காத தாயாகிறாள். ஒவ்வொரு தோழிக்கும் அவளுடைய தோழன் பெற்றெடுக்காத தந்தையாகிறான்..   அப்படிப்பட்ட ஒரு தோழன் தோழியின் கதை...    ஏழாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கொண்டிருந்த அவன் எட்டாம் வகுப்பிற்காக அருகாமையில் இருந்த அரசு உதவி பெரும் பள்ளியில் தஞ்சம் புகுந்தான். பள்ளி கரும்பலகையில் இருந்து பக்கத்தில் அமர்ந்திருந்த பையன் வரை அனைத்தும்  விநோதமாகவும் விபரீதமாகவும் இருந்தது அவனுக்கு.. அதுவும் வகுப்பு தலைவர் ஒரு பெண்.. கையில் பிரம்புடன் பார்க்க பயங்கரமாக இருந்தாள்...
சொத்துக்கள் எப்பொழுதும் சொந்தமில்லை...!!! சொந்தங்கள் ஒருபோதும் சொத்தாவதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
அவன் நச்சரித்தான்...!!! அவள் எச்சரித்தாள்...!!! அவன் அன்பாய் நச்சரித்தான்...!!! அவள் அழகாய் எச்சரித்தாள்...!!! அவன் சைகையால் நச்சரித்தான்...!!! அவள் ஜாடையால் எச்சரித்தாள்...!!! அவன் புன்முருவளால் நச்சரித்தான்...!!! அவள் புன்னகையால் எச்சரித்தாள்...!!!  அவன் காதலால் நச்சரித்தான்...!!! அவள் கண்ணியமாக  எச்சரித்தாள்...!!! அவன் பொறுமையிழந்து நச்சரித்தான்... !!! அவள் பொறுப்புணர்வுடன் எச்சரித்தாள் மகன் இன்னும் உறங்கவில்லை என்று...!!! கார்த்திக் பிரகாசம்...
சிறைக்குள் அடைபட்ட சிறை கைதியாக சிறகுகள் இருந்தும் பறக்க முடியாமல் அறைக்குள் அடைபட்ட ஆயுட்கைதியாகி விட்டது காற்றாடி...!!! கார்த்திக் பிரகாசம்...
பெண்ணியத்தின் மொத்த பிம்பமாய் தேவதையின் மறு பிரதியாய் கண்ணெதிரே நீ...!!! என் கரம் பிடிக்க பிறந்தவளை கண்டுவிட்டதாக "கண்கள்" உன் உருவத்தை மனதிற்கு ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கின்றன காதல் அலைவரிசையில்...!!! கண்டுக்கொள்ளாத கடவுளின் மீதும் கணிசம் கரைப் புரண்டது என் கண்களில் உன்னை தோன்ற செய்ததனால்...!!! உன் மூக்குத்தி முனுகல்களும் வளவியின் வஞ்சகமில்லா வருடல்களும் சின்ன கொலுசுகளின் செல்ல சிணுங்கல்களும் என்னுள் ராஜாவும் ரஹ்மானும் ஒன்றாக அமர்ந்து அமைத்தது போன்ற ஓர் உற்சாக மெட்டை உடலுக்குள் உயிராய் உலவவிட்டது...!!! என் காதலுக்காகவும் காதலிக்காகவும் உணர்வுகளில் ஒன்றை கூட ஒதுக்காமல் அந்த உற்சாக மெட்டிற்கு வரிகளை வடித்துக் கொண்டிருக்கின்றன என் இரவுகள்...!!! கார்த்திக் பிரகாசம்...