Skip to main content
   தொழிற்சாலைகளில் மற்றும்  கம்பெனிக்களில் பணியாற்றும் பெரும்பாலானோருக்கு, அந்த வேலை பிடித்திருக்கிறதோ  இல்லையோ, அங்கு அவர்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கு முக்கிய காரணம் அந்த கம்பெனியில் அமைந்த நட்பு வட்டம்.. அந்த நட்பு வட்டம் மட்டும் இல்லாவிட்டால், பெரும்பாலோனோரின் "பணி வாழ்கை" என்பது "பரணில் வைக்கப் பெற்ற கேட்பாரற்று கிடக்கும் பழைய பாத்திரத்தைப் போல தனிமையிலும் வெறுமையிலும்" தான் இருக்கும்.. குடும்ப சூழ்நிலை என்று ஒன்று இருந்தாலும், அந்த நட்பு வட்டம் தான் அவர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..

   அத்தகைய நட்பு வட்டத்தில் இருந்து, அடுத்த வேலை, புது பிசினஸ், கல்யாணம் என்று வெவ்வேறு காரணங்களுக்காக ஒருவர் ஒருவராக விலகும் போது, மீதி இருக்கும் மற்றவர்களுக்குத் தன்னிச்சையான ஒரு ஐயம் தொற்றிக் கொள்ளும்..

    அந்த ஐயம் ".. அவன் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டான். நாம் இன்னும் அப்படியே இருக்கிறோமே...!!!" என்ற ஆதங்கத்தினால் ஏற்படும் ஐயம் அல்ல.. இவர்களால் "நான் இல்லை நீ இல்லை" என்று நகர்ந்துக் கொண்டிருந்த நாட்களை, இனி இவர்கள் இல்லாமல் எப்படி துரத்துவது என்ற பிரிவின் தனிமையை உணர்த்தும் வலியினால் ஏற்படும் ஐயம்.

    ஒவ்வொருவராக விலகிய பின், கடைசியாக இருக்கும் இருவரின் நிலை தான் ரொம்ப பரிதாபம்.. அந்த இருவரின் மனசுக்குள்ளும், "எப்படியாவுது இவனுக்கு முன் இந்த வேலையை விட்டு நாம் சென்று விட வேண்டும்" என்ற எண்ணம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். காரணம் அந்த நட்பு வட்டம் இல்லாததால்...!!! அந்த தனிமையொடு போரிடும் திறன் இல்லாததால்...!!!
   
    அதிலும் ஒருவன் சென்றுவிட்டால் கடைசியாக இருப்பவனின் கதி "அதோகதி" தான். அந்த தருணத்தில் இருந்து அந்த கடைசியானவனுக்கு இதுவரையில் இல்லாத அளவு வேலையின் மீது வெறுப்பு அதிகரிக்கும். தனிமை துரத்தும்.. புதிதாக நண்பர்கள் கிடைப்பார்கள் ஆனால் அதில் மனம் லயிக்காது. வேற வேலை அவசர அவசரமாகத் தேடுவான். அப்பொழுது கூட வேலை தேடுவதற்கு முதற் காரணம் அவன் புரிந்துக் கொண்டிருக்கும் அந்த வேலையின் மீதான வெறுப்பல்ல. அந்த நட்பு வட்டம் தான்...!!! அந்த நட்பு வட்டத்தின் பிரிவு தான்...!!! துரத்திக் கொண்டிருக்கும் அதன் நினைவுகள் தான்...!!!

கார்த்திக் பிரகாசம்... 

   

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...