Skip to main content

Posts

Showing posts from June, 2017
என்னுடைய காதலோடு எனக்கு கிடைக்காத அவளுடைய காதலையும் கூட்டி அதை அவள் மீதே கொட்டிட வேண்டும்...!!! கார்த்திக் பிரகாசம்
உறவுகளும் பயணத்தைப் போல தான் சுகமான பகிர்தல்கள் சம்பந்தமில்லா பிரச்சினைகள் அலைபாயும் தேடல்கள் திட்டமிட்ட தவிர்ப்புகள் அணுகமுடியா தவிப்புகள் காற்று மட்டும் அறிந்த கண்ணீர்த் துளிகள் உதடுகள் மட்டும் உணர்ந்த புன்னகைகள் ஏதேதோ எண்ணங்கள் ஏகப்பட்ட கற்பனைகள் ஆக்கிரமிக்கப்பட்ட நினைவுகள் மனதை நெருடும் தருணங்கள் ஆனால் பயணம் என்பதே என்றோ ஒருநாள் முடிந்திட தானே முடிவிலா பயணமென்று இவ்வுலகில் ஏதேனும் உண்டா என்ன...!!! கார்த்திக் பிரகாசம்...
திருமணம் நிச்சயமானவர்களுக்கு சென்னைத் தரும் முதல் சவால் "வாடகை வீடு". சென்னையில் பத்தாயிரத்துக்குள் ஒரு வீட்டைப் பிடிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. வாடகையைத் தாண்டி பராமரிப்புக் கட்டணம், தனி மின் கட்டணம், தண்ணீர்த் தொட்டி சுத்தம் செய்ய கட்டணம், செக்யூரிட்டி கட்டணம் என்று வீட்டு வாடகைக்கான மாத பட்ஜெட் மட்டும் மொத்த சம்பளத்தில் முக்கால்வாசியை முழுங்கிக் கொண்டு நிற்கும். திருமணமாகும் வரை கோடம்பாக்கம்,வடபழனி, கிண்டி, நுங்கம்பாக்கம், தி.நகர், திருவான்மியூர் என்று நகரின் பளிச்சிடும் பருந்து கண்களின் பார்வைக்குள் குடியிருப்பவர்களெல்லாம் திருமணமானதும் மடிப்பாக்கம்,பள்ளிக்கரணை, மேடவாக்கம், குன்றத்தூர் மற்றும் கீழ்கட்டளை போன்ற மாநகரத்தின் கண்மறைவான பகுதிகளில்(இப்போதைக்கு) ஒதுங்கிக் கொள்கின்றனர். வாடகைக்குப் பயந்து "நகரம் என்று ஒத்துக்கொள்ளவே முடியாத நகரத்தின் ஏதோரு மூலையில்" வசித்துக் கொண்டு, வீட்டிற்கும் வேலைப் பார்க்கும் இடத்திற்கும் இடையே உள்ள பல மைல் தொலைவை பாதி தூரம் பேருந்து பாதி தூரம் மின்சார ரயில் அல்லது பாதி தூரம் இருசக்கர வாகனம்" என்று நடுத்தரவர்க்கம் ஓய்வறியா ந...

பிளாஸ்டிக் மனிதன்

அரிசி சக்கரை முட்டை எல்லாம் பிளாஸ்டிக்மயம்...!!! பணத்திற்காக மனிதனின் மனமும் மக்கா பிளாஸ்டிக்காக மாறி விட்டதோ.? பிளாஸ்டிக் அரிசியைத் தின்று பிளாஸ்டிக் சக்கரையில் தேநீர்க் குடித்து பிளாஸ்டிக் முட்டையை உண்டு பிளாஸ்டிக் மனித இனமொன்று உருவாகிவிடுமோ.? நாளை மனித இனத்தையும் மக்கும் வகை மக்கா வகையென தரம் பிரிக்க நேரிடுமோ.? தரம் பிரிப்பவன் உடலும் உறுப்புகளும் பிளாஸ்டிக்கால் ஆன பிளாஸ்டிக் மனிதனாக இருப்பானோ.? கார்த்திக் பிரகாசம்...
இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பது இழவை விடத் துக்கமானது...!!! கார்த்திக் பிரகாசம்...
வெகுநேரமாக நின்றுக் கொண்டிருக்கும் வேளையில் இருக்கைக் கிடைத்தாலே மனம் குதூகலமாகிவிடும் அதிலும் ஜன்னலோர இருக்கையே கிடைத்துவிட்டால் சொல்லவா வேண்டும்...! பெரும்பாலானோர் கிண்டியில் இறங்கிவிட்டதால் இருக்கைக் கிடைத்தது. எனக்கு முன்வரிசையில் இருந்த ஜன்னலோர இருக்கையில் சிறுவன் வந்து உட்கார்ந்தான். ஜன்னலோர இருக்கைக் கிடைத்துவிட்டதால் அவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. எதையெதையோ காட்டி அப்பாவிடம் கதைச் சொல்கிறான். பார்வையை விசிறி கட்டிடங்களைப் பின்னே தூக்கியெறிகிறான். கைகளைக் கத்தியாக்கி வெளிச்சங்களை வெட்டி வீசுகிறான்.எட்டிப் பார்த்து கார்களுக்கு டாடா சொல்கிறான். கண்ட காட்சிகளையெல்லாம் கண்களில் விழுங்குகிறான். அவனின் கற்பனைத் திறன்களை காற்றில் நிறைக்கிறான்.காற்றைத் தாகம் தீரக் குடிக்கிறான்.பிறகு அள்ளிப் பூசிக் கொள்கிறான்.அவ்வப்போது அவன் கண்கள் விரிகின்றன. கைகள் நீள்கின்றன. கேசங்கள் நேசம் கொள்கின்றன. கால்கள் குதூகலிக்கின்றன.அந்தச் சிறுவன் தன் குடும்பத்துடன் சிஐடி நகரில் இறங்கிய வேளையில் நான் சிறுவனாகியது போலொரு உணர்வு உடலெங்கும் பரவியிருந்தது. ஜன்னலோர இருக்கைக்கு ஏதோ சக்தி இருக்குமோ என்றுக்கூட தோன்றி...
கொடுத்தாலும் மகிழ்ச்சி கிடைத்தாலும் மகிழ்ச்சி கொடுக்கக் கொடுக்கக் கிடைக்கக் கிடைக்க  நீளும்  அம் மகிழ்ச்சி கொடுத்துக் கிடைக்காவிட்டாலும் ஏமாற்றமில்லை கிடைத்துக் கொடுக்காவிட்டாலும் துன்பமில்லை போதுமென்ற பதம் ஒருபொழுதும் இல்லை முத்தம்...!!! கார்த்திக் பிரகாசம்...

கான் புக்ஸ்...

மூர் மார்க்கெட்டின் முகப்பிலேயே காற்று வெளியில் ஆக்கிரமிக்காத அடக்கமான இடத்தில் ஒருபுறம் தமிழ்ப் புத்தகங்களாலும், மறுபுறம் ஆங்கிலப் புத்தகங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தலை நிமிர்ந்து நிற்கிறது "கான் புக்ஸ் கடை". வாஜித் அண்ணன் சிரித்த முகத்துடன் வாசலில் நின்று வரவேற்கிறார். கடையின் முக்கால்வாசி பகுதியை ஆங்கிலப் புத்தகங்களே ஆக்கிரமித்திருந்தாலும் ஓரளவுக்குக் கணிசமான தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கின்றன. கேட்கும் தமிழ்ப் புத்தகம் தற்சமயம் இல்லாவிட்டாலும் கைக்குக் கிடைத்தவுடன் கண்டிப்பாக அழைப்பதாக உறுதியளிக்கிறார். பெரிய பெரிய கடைகளே புத்தகத்தில் என்ன லாபம் கிடைக்கிறதென்று கழிவுவிலைக் கொடுக்காத நிலையில், எல்லா தமிழ்ப் புத்தகங்களையும் பத்து சதவீதக் கழிவு விலையில் கொடுக்கிறார் வாஜித் அண்ணன். ஏனோ அந்த மனிதனைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. அவர் பேசிய விதம். கேட்ட புத்தகம் இல்லையென்றாலும் பக்கத்தில் இரண்டு மூன்று கடைகளில் விசாரிக்க அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை. வேறு சில நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய முறை.கடை மூடும் நேரத்தில் சென்ற போதிலும் கனிவான பேச்சு என்று மனமெங்கும் நிறைந்...