Skip to main content

Posts

Showing posts from April, 2020

அவன் கடவுளைக் காப்பாற்றிவிடுவான்

கருவறைக்குள் நுழைந்து விட்டான் அர்ச்சனை செய்ய அல்ல சிலையைத் தொடமுடியாது ஆனால் தீட்டு அவனுக்கல்ல ஈரடி விலகி நின்று தெளித்தான் பால் பன்னீர் புஷ்பங்களை அல்ல கிருமி நாசினியை கவலை வேண்டாம் அவன் உங்கள் கடவுளைக் காப்பாற்றிவிடுவான் கார்த்திக் பிரகாசம்...

உலகமே பூட்டிக் கிடக்கிறது

நுண்உயிரியொன்று  நூதனமாக  துரத்துகிறது  உயிர் பயத்தில்  உலகமே பூட்டிக் கிடக்கிறது  வேலை இல்லை  கடைகள் இல்லை கையில் காசு இல்லை   தூங்கியெழுந்து மூன்றுக்கு ஐந்து வேளைச் சாப்பிட்டு  டிவி பார்த்தும்  நேரம் போகவில்லையென்று  யாரோ புலம்புகிறார்களாம்   நடந்து நடந்து  கால்கள் வலுவிழுந்துவிட்டன  அழுது அழுது  கண்கள் வீங்கிவிட்டன    எல்லா வியாதிகளையும்  எதிர்க்கும் சக்தி  இயல்பாகவே மனித  உடலுக்கு உண்டாம்  இருப்பினும் இந்த  வயிற்றையும் பசியையும் தவிர்க்கும் சக்தி  இல்லையே  நாளையோ  நாளை மறுநாளோ தான் சாவு என்றாலும்  அதுவரையில் உயிரோடிருக்க  இன்று ஒரு வேளையாவது  சாப்பிட வேண்டுமே  கார்த்திக் பிரகாசம்... 

துருப்பிடித்த வார்த்தைகள்

உயிர் போக்கும் வதையாய் உரசி உராய்ந்திட குருதிச் சிந்திடா ஓர் மரண ஒத்திகை தத்ரூபமாய் கங்கையில் கலந்திட்ட சாக்கடையாய் கண்ணீர் அழுகை விசும்பல் வலி காயம் அடியில் அந்தத் துருப்பிடித்த வார்த்தைகள் கார்த்திக் பிரகாசம்...

ஆகாசத்தல ஒரு முத்தம்

பக்கத்துல வந்துட்டதா தெரிஞ்ச மானம் இன்னும் மைல் கணக்கா வெலகி இருக்கு தண்ணில மெதக்குற பஞ்சு மாதிரி மேகமெலாம் அந்தரத்துல மெதக்குது இந்த பிளேன்னு பறக்குதா நீச்சலடிக்குதா கடலும் ஆகாசமும் ஒண்ணு தான பறக்க முடிஞ்ச கடல் ஆகாசம் நீந்த முடிஞ்ச ஆகாசம் கடல் அந்த ஒசரமான ஒசரத்தின் உச்சியில ஆகாசத்தல ஒரு முத்தம் கடலுக்குள்ள மூழ்குறதாட்டம் கண்ணு ரெண்டும் உள்ள சொருவுது மெதந்துகிட்டே பறக்குற திரி இருக்கு ஒதடுங்க ஒத்தியெடுத்த எடமெல்லாம் ஈரமா இனிக்குது ஒடம்பெல்லாம் சில்லு சில்லா சிலிர்க்குது கண்ணாடில எட்டிப்பாத்தா ஒலகமே ஒரு சின்னப் புள்ளியாட்டம் கண்ணுக்குள்ள சிக்குது கார்த்திக் பிரகாசம்...

நிரப்பப்படாத பக்கங்கள்

நிரப்பப்படாத டைரியின் பக்கங்களில்  எழுதப்படாததெல்லாம்   புறக்கணிப்பின் பெரும் வலிகள்  எழுதப்பட்டதெல்லாம்   யதார்த்தத்தின் மிச்ச மீதிகள்  கார்த்திக் பிரகாசம்... 

சாம்பல் நினைவுகள்

"இந்த நாள் இந்தளவிற்கு ஈவிரக்கம் இல்லாமல் விடிந்துவிட்டதே" இறுதித் துடிப்பை இன்றே எட்டிவிடும் உத்வேகத்தில் இதயம் உதறித் துடிக்கிறது. தாங்கவொண்ணா சுமையை வெகுநேரம் தூக்கிச் சுமந்திருந்து இறக்கியது போல் கை கால்கள் நடுங்குகின்றன. வியர்வைத் துளிகள் வேர்த்து விறுவிறுவென்று உடல் முழுதும் விரவுகின்றன. உட்கார முடியவில்லை. அரை மணி நேரத்திற்கு முன்பு தான் ஜிலேபி ரமேஷ் போன் போட்டு சொன்னான். "சங்கர் செத்துட்டான்" என்று.. இன்று விடிந்ததே இவ்வுலகில் சங்கரின் இருப்பை இன்றோடு விலக்கிக் கொள்ள தானா. இதற்கு விடியாமலே இருந்திருக்கலாமே.. 'ஏதோ பொண்ணு விஷயம் போலடா. வீட்லயே தூக்கு மாட்டிக்கிட்டான். கூடவே இருந்த எங்கிட்ட கூட சொல்லாம விட்டுட்டான் பாரேன். தங்கச்சியும் அம்மாவும் கதறாங்க. அவங்க மூஞ்சில முழிக்க முடியலடா. 'ஏப்பா ரமேஷூ. உன்னோட தான எம் மவன் எப்பவும் சுத்திக்கிட்டு இருப்பான். என்னப்பா ஆச்சு'ன்னு அம்மா கேக்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலடா. நடுத்தெருவே சங்கர் வீட்டு முன்னாடி கூடி நின்னு அழுதுட்டு இருக்கு. பாக்கவே கஷ்டமா இருக்கு மச்சான். நீ உடனே கெளம்பி வா...

பெயர் தெரியா பறவை

எங்கிருந்தோ வந்த பெயர் தெரியா பறவை ஒரே ஸ்தாயில் வெகுநேரம் இனிமையான ஓசையை உண்டாக்கியது எங்கும் சுகந்தமான வாசனையை பரப்பிய தொடர் ஓசை இன்னிசையாக மாறிய கணம் நெடுநேரம் நீடிக்குமென்றிருந்த வாசனை சட்டென மறைந்தது காற்று தீண்டாத முதிர் இலைகளைக் கண்ட இளம்கிளையோ பெயர் தெரியா அடுத்த பறவையின் வருகைக்காக அங்கேயே கவர்ச்சியற்று நிற்கிறது கார்த்திக் பிரகாசம்...