அன்பின்வழிகள் அடைக்கப்படுகின்றன ஆறுதல்கள் அதிகாரத்துக்கு உட்படுகின்றன ஆலோசனைகள் யாவும் சந்தேகத்துக்கு ஆளாகின்றன மௌனங்கள் கேள்வியாக்கப்படுகின்றன எளிமை ஏளனமாக்கப்படுகின்றன அமைதியும் பண்பும் கோழையாக்கப்படுகின்றன செயல்கள் அனைத்தும் நேற்றோடு ஒப்பிடப்படுகின்றன முத்தங்கள் யாவும் மறக்கப்படுகின்றன சுயத்தை மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை அவர்களால் கார்த்திக் பிரகாசம்...