எச்சிலாய் வார்த்தைகளைத்
துப்பி விடுகிறார்கள்
எளிதில் உலர்வதில்லை
வார்த்தைகள்
எச்சில் போல்
ஆயிரம் கத்தி குத்தல்களின்
பலம் கொண்டவை
உடைந்த கண்ணாடிச் சில்லுகளின்
கூர்மையை ஒத்தவை
'ஒரு வார்த்தையில் என்ன குடியா முழுகிவிட்டது'
என்று மீனைப் போல
நழுவிட முடியாது
உடல் முழுதும் காதுகள் கொண்ட மனிதனுக்கு
வார்த்தைகள் தான் எல்லாம்
வார்த்தைகள் தான் வாழ்க்கை
கார்த்திக் பிரகாசம்...
துப்பி விடுகிறார்கள்
எளிதில் உலர்வதில்லை
வார்த்தைகள்
எச்சில் போல்
ஆயிரம் கத்தி குத்தல்களின்
பலம் கொண்டவை
உடைந்த கண்ணாடிச் சில்லுகளின்
கூர்மையை ஒத்தவை
'ஒரு வார்த்தையில் என்ன குடியா முழுகிவிட்டது'
என்று மீனைப் போல
நழுவிட முடியாது
உடல் முழுதும் காதுகள் கொண்ட மனிதனுக்கு
வார்த்தைகள் தான் எல்லாம்
வார்த்தைகள் தான் வாழ்க்கை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment