Skip to main content

Posts

Showing posts from November, 2020

வெள்ளிக்கிழமை இரவு

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் புத்தாண்டிற்கானக் கொண்டாட்டம் மனதிற்கு நெருக்கமானது வெள்ளிக்கிழமை இரவு கவலை அறியாதது அது கனவுகளுக்கானது வெள்ளிக்கிழமை இரவு நிம்மதியோடு வருவது நம்பிக்கையோடு விடிவது வெள்ளிக்கிழமை இரவு ஓய்வளிக்க வருவது உறக்கத்திற்கு ஒத்தாசையாக இருப்பது இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவுக்கு ஆயுள் அதிகம் கார்த்திக் பிரகாசம்...

இரகசியம்

கவிஞனின் இரவுகள்  இரகசியமானவை  அவை ஆந்தையின்  கண்களுடையவை  ஆழ்ந்து உறங்கும்  கனவுகள் கொண்டவை ஆனால் அற்ப நேர உறக்கத்திற்காக ஏங்குபவை  கார்த்திக் பிரகாசம்...

வேடம்

வேளாவேளைக்கு  வேடம் தரிக்கும் வேலையில்  வந்தது சன்மானம்  செத்தது தன்மானம்  கார்த்திக் பிரகாசம்...

வாசனை

கிழிந்து போன  ரூபாய்த் தாள்களில்  அப்பாவின் வாசனை மீந்துப் போன  உணவுப் பண்டங்களில்  அம்மாவின் வாசனை பயனற்றுப் போன  பழைய குப்பைகளிலெல்லாம்  நான் மட்டும் அறிந்த  எந்தன் வாசனை   கார்த்திக் பிரகாசம்...

மீண்டும் அவள் தொட்டிலுக்கு

உறுதியாக மறுத்தாள். ராஜரத்தினத்தின் மறைவிற்குப் பிறகு ராணியம்மாள் வெளியிடங்களுக்கு எங்கும் செல்வதில்லை. இன்று எப்போதும் இல்லாதவனாக மோகன் கட்டாயப்படுத்தினான். "அம்மா. வாம்மா போலாம். உனக்குத் தான் சினிமானா புடிக்கும்ல" அழாத குறையாகக் கெஞ்சினான். "பாட்டி பாட்டி வாங்கப் பாட்டி நாமலாம் ஜாலியா தீபாவளி ஸ்பெசல் சினிமாக்கு போலாம்" அப்பா கெஞ்சுவதைப் பார்த்ததும் அம்முவும் சேர்ந்து கொண்டாள்.. மகனும் பேத்தியும் போட்டிப் போட்டுக் கொண்டு வற்புறுத்தி அழைத்ததும் ராணி அம்மாவினால் மறுக்க முடியவில்லை. ராணி அம்மாளுக்குச் சிறு வயதிலிருந்தே ரஜினி என்றால் உயிர். புதிதாக வெளிவரும் ரஜினியின் அத்தனைப் படங்களையும் தியேட்டரில் பார்த்து விடுவது வழக்கமான வழக்கம். படம் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். படத்தில் ரஜினி இருந்தால் போதும். பார்த்துகிட்டே இருக்கலாம். குடும்பத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளையெல்லாம் கூட ரஜினி படம் வெளியான வருடங்களைக் கொண்டே நினைவில் வைத்திருப்பாள். ராஜரத்தினத்தை முதல் முறையாகக் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் புத்தகத்திற்கு நடுவே ஒளித்து வைத்துப் பார்த்தது ...

பிரதி

ழ'கரத்தை உச்சரிக்கும்  பதற்றம் இருந்தது முதல் கலவியில் ஆர்வமும் ஆசையும் அறியாமையில் மறைந்து அச்சத்தில் ஊறியது காகிதத்திற்கு வலிக்காமல் எழுதுவது சாத்தியமா? கசங்கும் காகிதத்தின் ஓசை வலியின் முனங்கல் வசவா? சுகத்தின் பிதற்றல் மொழியா? தூவலின் சிதறல் துளிகள் எழுத்துரு பெறவில்லை வலி மிகா இடங்களுக்கும் வலி மிகுந்தது அச்சுப் பிழைகளுடன் அச்சானது முதல் பிரதி ஓர் நன்மழை நாளில் காற்றின் சுழலுக்கு அசைந்தாடிய பக்கங்கள் சில உண்மைகளைப் புலப்படுத்தியது மெல்லிய உரசல்களில் மின்சாரம் பாய்ந்த தூவல் தானே பக்கங்களைத் தீண்டியது வார்த்தைகளை வடித்தது வலி மிகும் மிகா இடங்கள் ஒருவாறு வழிக்கு வந்தன வலியும் சுகமும் வேறு வேறில்லை வசவு வசமானது பிதற்றலும் புரிந்தது தீராப் பக்கங்களில் தேடுதல் தொடர்கிறது பிரதி நீள்கிறது கார்த்திக் பிரகாசம்...

மனதை மட்டும்

சமயங்களில் கண்களை இறுக மூடிக் கொள்கிறேன் செவிகளை கரங்களால் அடைக்கச் செய்கிறேன் நாவையும் கூட அடக்கி விடுகிறேன் இருப்பினும் இந்த மனதை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை கார்த்திக் பிரகாசம்...

கவர்ச்சி

கடுகளவும் கவர்ச்சியற்று இருப்பதுவே பெருங் கவர்ச்சியாய் இருக்கிறது கார்த்திக் பிரகாசம்...