Skip to main content

Posts

Showing posts from May, 2021

போதுமானதாக

எவ்வித  துயரத்தையும் மறக்க ஓர் கண்ணீர்த் துளியும் எத்துணை கவலைகளையும் கடக்க ஓர் இரவும் போதுமானதாக இருக்கிறது கார்த்திக் பிரகாசம்...

பாவம்

நாங்கள்  ஆக்ஸிஜன் கேட்டோம் மருத்துவமனைகளில் படுக்கை வேண்டினோம் தடுப்பூசியைத் தேடியலைந்தோம் சவங்களை எரித்தகற்றவும் கூட ஏற்பாடு செய்யவில்லை அவர்கள் கார்த்திக் பிரகாசம்...

சூன்யம்

ஊரடங்கின் சூன்யம் தாங்காமல் முன்னிலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து பின் தெருவில் வசிக்கும் என் வீட்டிற்கு வந்தான் நண்பன் வேறு இடம் வெவ்வேறு முகங்கள் சூன்யத்தை தொலைக்கக் குறைந்தபட்ச மாற்றமென நம்பிக்கை சோர்வைப் பூசிய முகங்களில் வழக்கமான விசாரிப்புகள் சுவாரசியம் தராத பேச்சு சுரத்தையில்லாத சிரிப்பு மாற்றி மாற்றி மறுத்துப் போன டிவி ரிமோட் பட்டன்கள் சூன்யத்தில் தொடங்கி சூன்யத்தில் முடிந்த உரையாடல்கள் சர்வ இடத்திலும் சகல முகங்களிலும் விழியில் விழும் வெளியெங்கும் அள்ளியப்பிய சூன்யம் தாளமுடியவில்லை சூன்யம் சுமந்து வந்தவன் சென்றுவிட்டான் சூன்யத்துடனே கார்த்திக் பிரகாசம்...

ஞானம்

விடிந்ததும் முதலில் துணையவளை அமரவைத்து அன்பாகப் பேசி அவளின் கை கால்களைப் பிடித்துவிட்டு ஆசையாக முத்தம் பதியனும் எவ்வளவு நாட்கள் ஆயிற்று வெயில் பட்டு வதங்கிய தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் வேலைக்காரியை வேறு நேற்று இழிச் சொற்களால் ஏசி விட்டேன் அவளிடம் மனம் திறந்த மன்னிப்பு கோர வேண்டும் கௌரவ குறைச்சல் எனக் கைவிட்ட வசதி தொலைத்த பழைய சினேகிதனைச் சந்தித்து பள்ளி வாழ்வை மனம் கோணாமல் அளவளாவ வேண்டும் கூடவே அந்தப் பால்ய காதலையும் அசிங்கம் அநாகரிகமென அறைந்து அடித்தொடுக்கிய மகளை அமைதி செய்து அவள் அறிமுகம் செய்த அவளின் வேற்றுசாதி காதலனை விருந்திற்கு அழைத்து மணநாளை முடிவு செய்ய வேண்டும் என்னென்னமோ திட்டமிட்டதில் கணக்கில் இது விடுபட்டதே சாமர்த்தியமென நினைத்தது சடுதியில் முடிந்துவிட்டதே பலன் தேடிய நாட்களில் நலன் தொலைந்தறிய வில்லையே என்னுடல் எனக்கே சொந்தமில்லாமல் போயிற்றே மனவெளியில் எந்தன் சாயலையொத்த ஒருகுரல் துடித்து ஒப்பாரியது முந்தைய இரவின் கனவிலே நான் இலகுவாக இறந்திருந்தேன் ஈக்கள் மொய்க்க நெடுஞ்சாண்கிடையாக கிடத்தப்பட்டிருந்தது என்னுடல் கார்த்திக் பிரகாசம்...

உதிர்தல்

சபிக்கப்பட்ட மரத்தின்  பழுத்த இலைகள் மூர்ச்சையின்றி உதிர்கின்றன மண்ணில் முன்னமே உதிர்ந்திட்ட இளம் இலைகளின் சவ உரசலொலி உதிர்தலில் முதிர் இளமென்ற வேறுபாடுதான் உண்டோ? கார்த்திக் பிரகாசம்...

காலத்துக்குமான ஒரு முத்தம்

விரும்பாதவொன்றை வலிந்து பரிசளிக்கும் வன்முறையை நீ பயின்றிருந்த சமயத்திலே தான் மௌனத்தால் வீழ்த்திடும் வித்தையை நன்கு கற்றறிந்தேன் கோபப் பெருக்கில் இடதுபுற கூரலை அனாசியமாக ஒதுக்கிவிட்டு உள்ளறையில் நீ பூட்டிக் கொண்டபோதெல்லாம் பொதி சுமக்கும் கழுதையைப் போல கனத்திருந்தேன் கோடை வெக்கையில் இரவிலும் ஈரம் பிசுக்கு பிசுக்கென மேனியெங்கும் பசை போல் ஒட்ட லேசான இளம் வெயில் சூட்டில் அருவியில் குளிக்கும் சுகத்தை அனுபவித்திருந்தேன் விளம்பர அழுகையால் உணர்ச்சிகளோடு வியாபாரம் செய்ய முனைந்தாயே அன்றைய இரவை மட்டும் தான் இன்றுவரை மறக்க முயன்றவாறிருக்கிறேன் கவனிக்காத காதலும் காலத்துக்குமான ஒரு முத்தமும் சிதிலமடைந்து கிடக்கிறது அவ்விரவின் சவப்பெட்டிக்குள் கார்த்திக் பிரகாசம்...

எப்போதும் பெண்

மதிய நேரம். சூரியனை மறைத்தனுப்பிவிட்டு பெரும் இடி சத்தத்துடன் மடியிலிருந்து அடைமழையை அவிழ்த்தன கருமேகங்கள். 'அழாத' தோளில் தட்டினாள் அன்புக்கரசி. அழுகை நிற்கவில்லை.. தொடர்ந்து தேம்பிக் கொண்டே இருந்தாள் சங்கவி... 'அழாம என்ன ஆச்சுன்னு சொல்லுடி' விசும்பல் குறைவது போலிருந்தது. இன்னும் கொஞ்சம் நகர்ந்து நெருக்கத்தில் அமர்ந்தாள் அன்புக்கரசி. "யார நம்பறதுனே தெரியல அம்மா. உயிருக்கு உயிரா, உண்மையா சொல்லணும்னா அதுக்கும் மேல முக்கியமா நெனைச்ச ஒருத்தன் ஒருமுறை என்கூட படுங்கிறான். ஏதாவது விபரீதம் பண்ணலாம்னு யோசிக்காத அப்றம் உன் உடம்ப ஊரே பாக்கும்னு மெரட்டறான். மழைல நனைஞ்ச ஒருநாள் அவன் ரூம்க்கு போய் நான் ட்ரெஸ் மாத்துனத வீடியோ புடிச்சி வச்சிருக்கானாம். அவன் சொல்ற மாதிரி செய்யலன்னா அந்த வீடியோவ நெட்ல விட்ருவன்னு சொல்றான். ரொம்ப பயமா இருக்கு. அவன எவளோ நம்புனேன் தெரியுமா அம்மா" தோளில் சாய்ந்து மீண்டும் பெரும் தேம்பலோடு அழத் தொடங்கினாள் அம்மாவாக இருந்தாலும் அவள் சங்கவியோடு ஒரு தோழியைப் போலவே இருந்தாள். சங்கவிக்கும் அம்மாதான் முதல் தோழி. அவளின் அத்துணை விஷயங்களும் அம்மாவிற்குத் த...

தாமதம்

அன்றே சொல்லியிருக்க வேண்டும்  தயங்கி நின்றிருக்கக் கூடாது ஆனந்தமாய் பெய்திடும் மழை அடுத்த ஏதாவதொரு நிமிடத்தில் நின்றிடும் என்பதை உணர்ந்திருக்கவில்லை வானவில் அணிந்த உள்ளக் குமிழியை நீ ஊசியால் குத்த உடைந்து போனது என் வானம் வானமற்று இருப்பதை விடக் கொடுமை உன் வாசமற்று இருந்து தொலைப்பது தாமதமாய் சேதி சொல்லும் காலத்திற்குப் பதிலற்று முழிக்கிறது தலைவிதி கார்த்திக் பிரகாசம்...