மதிய நேரம். சூரியனை மறைத்தனுப்பிவிட்டு பெரும் இடி சத்தத்துடன் மடியிலிருந்து அடைமழையை அவிழ்த்தன கருமேகங்கள். 'அழாத' தோளில் தட்டினாள் அன்புக்கரசி. அழுகை நிற்கவில்லை.. தொடர்ந்து தேம்பிக் கொண்டே இருந்தாள் சங்கவி... 'அழாம என்ன ஆச்சுன்னு சொல்லுடி' விசும்பல் குறைவது போலிருந்தது. இன்னும் கொஞ்சம் நகர்ந்து நெருக்கத்தில் அமர்ந்தாள் அன்புக்கரசி. "யார நம்பறதுனே தெரியல அம்மா. உயிருக்கு உயிரா, உண்மையா சொல்லணும்னா அதுக்கும் மேல முக்கியமா நெனைச்ச ஒருத்தன் ஒருமுறை என்கூட படுங்கிறான். ஏதாவது விபரீதம் பண்ணலாம்னு யோசிக்காத அப்றம் உன் உடம்ப ஊரே பாக்கும்னு மெரட்டறான். மழைல நனைஞ்ச ஒருநாள் அவன் ரூம்க்கு போய் நான் ட்ரெஸ் மாத்துனத வீடியோ புடிச்சி வச்சிருக்கானாம். அவன் சொல்ற மாதிரி செய்யலன்னா அந்த வீடியோவ நெட்ல விட்ருவன்னு சொல்றான். ரொம்ப பயமா இருக்கு. அவன எவளோ நம்புனேன் தெரியுமா அம்மா" தோளில் சாய்ந்து மீண்டும் பெரும் தேம்பலோடு அழத் தொடங்கினாள் அம்மாவாக இருந்தாலும் அவள் சங்கவியோடு ஒரு தோழியைப் போலவே இருந்தாள். சங்கவிக்கும் அம்மாதான் முதல் தோழி. அவளின் அத்துணை விஷயங்களும் அம்மாவிற்குத் த...