ஒரு காலத்தில் நான் மனிதனாக இருந்தேன் சமூகத்தின் கீதையில் ~ பைபிளில் ~ குரானில் வரையறுக்கப்பட்ட நன்னடத்தைகள் அனைத்தும் என்னிலடக்கம் - தன் நெருங்கிய கூட்டாளிகளை வாழ்வானது அறிமுகப்படுத்திடும் வரை அநீதி ~ காயம் ~ சூழ்ச்சி ~ துரோகம் ~ துயரம் ~ வலி ~ பிரிவு ~ வீழ்ச்சி மனிதத்தின் மலிவான கீறல்களில் இறக்கும் முன்னே இரையாக சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தேன் சாத்தனாக கார்த்திக் பிரகாசம்...