Skip to main content
கல்யாண பந்தலில்
எச்சில் இலைக்காகக் 
காத்திருக்கும் பிச்சைக்காரனைப் போல
உறக்கத்திற்கு ஏங்கித்
தழுவும் இமைகளைப் பூட்டினால்
வேலை முடிந்து வெறுங்கையுடன் 
வீட்டிற்கு வரும் அப்பாவைப் போல
உறக்கமற்று வந்த
இரக்கமற்ற இருளாய் கவிழ்கிறது
இரவு
உறக்கம் இல்லா சாக்கிலோ
சீராய் அடுக்கி வைத்த 
நினைவடுக்கைக்
கலைத்துப் போட்டு பிறாண்ட தொடங்குகிறது
கூரிய நகங்கள் கொண்ட
பூனை மனது

இருள் ஓர் ஆசுவாசம்
இரவு ஓர் நிம்மதி
உறக்கம் ஓர் பெரும் ஆறுதல்

முற்றுப் பெறாத இக்கவிதையைப் போலவே
உறக்கத்தைக் களவாடிய
இந்த இரவும்
நீ...............ள்கிறது

Comments