Skip to main content
காதுகள் அசையாமல்
வாலது ஆடாமல்
கண்ணது இமைக்காமல் 
அலங்கரிக்கப்பட்ட அட்டை யானையொன்று
கோவில் வாசலில் 
வருபவர்களை வெறிக்கிறது 
உள்ளிருக்கும் சிலையைப் போலவே
ஜீவனற்று

இருப்பினும்
யானை அட்டையானதில் ஓர் ஆறுதல் 
யாரிடமும் 
பிச்சையெடுக்க வேண்டிய 
அவசியமில்லை 

எவரும் 
அதை‌ வைத்து
பிச்சையெடுக்கவும் வாய்ப்பில்லை

Comments