Skip to main content

Posts

இரக்கமில்லா மழையினால் இறக்கங்களிலெல்லாம் மழை வெள்ளம்...!!! கார்த்திக் பிரகாசம்...
அவள் அப்படியொரு அழகு...!!! அவளுக்கு அவ்வளவு அறிவு...!!! அவள் அழகில் அடங்காத அறிவு தான் உண்டோ...?? அவள் அறிவில் வியக்காத அழகு தான் உண்டோ...?? அவள் அறிவினில் அழகானவள்...!!! அவள் அழகிலும் ஓர் அறிவானவள்...!!! கார்த்திக் பிரகாசம்...
மகனுக்கு அமெரிக்காவில் வேலை... இத்தனை நாளாய் அப்பாவிற்கு ரொம்பத் தான் பெருமை... ஆதலால் தான் என்னவோ, இன்று அவர் இறந்து கிடக்கும் போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட அவரது மகனால் வர இயலவில்லை... தன் மகன் அமெரிக்காவிற்குச் சென்று  வேலை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்ட தந்தை, தான் இறக்கும் போது தன்னோடு மகன் இருக்க வேண்டும் அல்லது தன் இறுதி ஊர்வலத்திற்கு அவன் வர வேண்டுமென்று ஆசைப்படவில்லை போலிருக்கிறது.. தான் பிறந்த போது தன்னை முதல்முறையாக தொட்டிலில் தூக்கிப் போட்ட தந்தையை, அவர் இறந்த போது கடைசியாக சுடுகாட்டில் தூக்கி போட மகனால் முடியவில்லை... மகன் சம்பாதித்து அனுப்பிய பணமெல்லாம் வீட்டில் உள்ள பீரோ முழுவதும் நிறைந்திருக்கின்றன. என்ன..! பாவம்..! அவற்றிற்கு அழத் தெரியவில்லை... மகனோ அமெரிக்காவில் அப்பாவை நினைத்து அழுது கதறுகிறான்.. அவரது பாதங்களை தன் தலையில் வைத்து தொழத் துடிக்கிறான்.. ஆனால் என்ன அவனின் கண்ணீர்த் துளிகளைக் கண்டுக்கொள்ள கூட அங்கு ஆள் இல்லை... உடனடியாக கிளம்ப பதறுகிறான். அவன் நேரம், விமானத்தில் இடம் கிடைக்கவில்லை.. இரண்டு நாட்கள் கழித்துத் தான் கிளம்ப முடியும். மகன் வரும் ...

திருவண்ணாமலை பயணம்...!!!

     முதல் முறையாய் திருவண்ணமலைக்கு நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்தேன்.. இதற்கு முன் சென்றதில்லை என்பதால் கிளம்புவதற்கு முன் இருந்தே கோயிலைப் பற்றியும் மற்றும் கிரிவலம் பற்றியும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே இருந்தன...     காலை 3 30 மணிக்குக் கோயிலை அடைந்ததும் 4 15 க்கு தொடங்கிய கிரிவலத்தை சரியாக 6 30 மணிக்கு முடித்துவிட்டோம்..    கிரிவல பாதை மொத்தம் 14 கிமீ.. வழி நெடுகிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஏராளமான பக்தர்கள், தீபத்தை தரிசித்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தனர்..    கிரிவல பாதை பெரும்பாலும் மரங்களால் சூழ்ந்திருந்ததால் ரம்மியான சூழல் நிலவியது. அதிலும் அங்கு வீசும் காற்றில் நிரம்பியிருந்த மூலிகை மணத்தை, சுவாசிக்க சுவாசிக்க ஒரு புது விதமான புத்துணர்ச்சி உண்டாகியது..    நடக்க நடக்க நீண்டு கொண்டே இருந்த பாதைச் சுற்றி முடிக்கும் வரை ஒரு போதும் அலுப்பை ஏற்படுத்தவில்லை. எப்பொழுது முடியும் என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. மாறாக அது முடிவைத் தேடாத பயணம் போல அமைந்தது..    மொத்தத்தில்...

நவம்பர் 22...

  வேலைத் தேடி அவ்வப்போது வந்து போன நாட்கள் போக, சென்னையில் வேலைக்கென்று சேர்ந்து இன்றோடு முழுதாக மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன..   வேலை முக்கியமா..? இல்லை சம்பளம் முக்கியமா..? என்ற யோசனைக்குக் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல், வேலை தான் முக்கியம் என்று ஒருமனதாக முடிவெடுத்து, நவம்பர் 22,2012 அன்று ரூபாய் 6500 சம்பளத்திற்கு ஒரு சிறிய கம்பெனியில் சேர்ந்த நினைவுகள் மயில் தோகையைப் போல மனதில் விரிகின்றன... கார்த்திக் பிரகாசம்...
சந்தேகத்தின் மீதான அதித நம்பிக்கையும் நம்பிக்கையின் மீதான கடுகளவு சந்தேகமும் கூட தோல்விக்குத் தான் தோள் கொடுக்கும்...!!! கார்த்திக் பிரகாசம்...

சென்னை காதலன்...!!!

வந்தவர்களையெல்லாம் வாழ வைத்து விட்டு அவர்கள் பல பேரின் வாயில் இன்று வசைபட்டுக் கொண்டிருக்கிறாய்...!!! ஏற்கனவே மழையினால் சிதைந்து விட்ட சூழ்நிலையில் ஊட்டி வளர்த்த பலரின் வார்த்தைகளால் இன்னும் சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்..!!! வக்கற்று நின்ற போது வாழ நம்பிகையூட்டி என்னை வாழ்த்தியது நீ மட்டும் தான்...!!! இன்று நீ கலக்கமுற்று நிற்கும் போது உன் மீது வெறுப்பை உமிழ்பவன் நானல்ல...!!! நான் எப்பொழுதும் உன்னை காதலிக்கிறேன்.. ஆம்..!! நான் ஒரு சென்னை காதலன்...!!! கார்த்திக் பிரகாசம்...