Skip to main content

Posts

முகநூலில் சமூக ஆர்வலர் ஒருவரின் பெயரில் இயங்கும் பக்கமொன்றில் புகைப்படத்துடன் ஒரு கேள்வி. ஐஸ்லாண்டில், ஊழல் செய்யும் அதிகாரிகளின் புகைப்படங்கள் கழிவறைகளில் தொங்கவிடப்படும். இந்தியாவிலும் இதை பின்தொடரலாமா.? என்று அதில் வினவப்பட்டிருந்தது. நல்ல யோசனை தான். ஆனால் அதில் ஒரு சட்டச் சிக்கல். அத்தனை கழிவறைகள் இந்தியாவில் இருந்தால் நம் மக்கள் ஏன் இன்னும் அவசரத்துக்கு வெட்டவெளியிலும் மறைவிலும் இருளிலும் ஒதுங்க போகிறார்கள்.. கார்த்திக் பிரகாசம்...
நேற்று முதல் நகரத்தில் குவிந்து கிடக்கும் பலவூர் மனிதக் குப்பைகளை ஊர் வாரியாகப் பிரித்து இரவுபகல் பாராமல் புறநகரில் கொண்டு குவித்துக் கொண்டிருக்கின்றன சென்ன...
தோள்கள் உராய்ந்து விரல்கள் விரதம் விடுத்து கால்கள் கனமிழந்து திசைத் தெரியா வழியில் எதையும் தொலைக்காமல் எதையோ தேடிக் கொண்டிருந்த மாலைப் பொழுதில் கண்களைக் கண்டு பிரிவொன்று நேர்ந்தால் பிணமாகி விடுவேன் என்றாள்.. காதலை மட்டும் காட்டடி கல்லறையிலும் உன் கண்ணீர்த் தடங்களை என் இதழ்கள் உலர வைக்கும் என்றான்... கார்த்திக் பிரகாசம்...

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

இன்றைய தலைமுறையினாரால் அதிகம் அறியப்படாத ஒரு பெயர் . அதுவும் ஒரு முதல்வரின் பெயர். சுதந்திர இந்தியாவில் தமிழகத்திற்கான முதல் முதல்வர். ஆம். நம் தமிழ்நாட்டின் தலைச் சிறந்த முதல்வராக கருதப்படும், இன்னும் கொண்டாடப்படும் காமராஜருக்கு முன்பே தமிழகம் கண்டெடுத்த நேர்மையின் சிகரம். காந்தியக் கொள்கைகளில் அதிகம் ஈர்ப்புக் கொண்ட ஓமத்தூரார், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். ஆனால் அந்த இரண்டு வருடங்களில் அவர் செய்த சாதனைகள் மற்றும் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு தான் இன்றுவரை தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காந்தியின் மீது கொண்ட பற்றினால் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டவர். இடையில் தனிக் கட்சி அமைக்க சூழ்நிலை அமைந்தும், மற்ற கட்சிகளில் இணைய பல அழைப்புகள் வந்தும் தான் சார்ந்த கட்சிக்கு எத்தகைய துரோகமும் செய்ய கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று கடைசிவரை காங்கிரஸ்லேயே இருந்தவர். ஆட்சிக் கட்டிலையும்,அதிகாரப் பசியையும் அறவே புறம் தள்ளியவர். நேர்மையையும் எளிமையையும் கண் மூடும் காலம் உயிர் மூச்சாக கொண்டவர். நிஸாம் கட்டுப்பாட்ட...
சாக்கடையில் குப்பைகளும் சாலைகளில் நாமும் பெரிய வித்தியாசமில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துக்களுக்கான கட்டணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை(17/10/2016) அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 50% க்கும் மேல் அதிகமாக உள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கும்படி ஒரு தொலைப்பேசி எண்(044-32000090) குறிப்பிடப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கட்டணமே 50% க்கு அதிகமாக உள்ள நிலையில், "ரெட் பஸ்" போன்ற முன்பதிவு செய்யும் இணைய தளங்களில் கட்டணம் 100%ஐத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தீபாவளி நாள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் மேலும் உயர வாய்ப்பு அதிகமுள்ளது. ஒருவேளை எங்கேயாவது மறைமுகமாகவோ அல்லது ஒரு சிலரோ தவறு செய்தால் அதைக் கண்டிக்க புகார் அளிக்கலாம். எல்லாருக்கும் தெரிந்தே பகிரங்கமாக இப்படியொரு பகல் கொள்ளை நடக்கும் போது யாரிடம் புகார் செய்ய முடியும். ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்தே இது நடக்கிறது பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போயிட்டு வர மட்டும் 1500 முதல் 2000 செலவாகும் என...
வெட்டிய மரத்தில் செய்த ஜன்னல்களும் கதவுகளும் வீட்டில் திறந்தே கிடக்கின்றன ஆனால் காற்று தான் வரவில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...