Skip to main content
தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துக்களுக்கான கட்டணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை(17/10/2016) அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 50% க்கும் மேல் அதிகமாக உள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கும்படி ஒரு தொலைப்பேசி எண்(044-32000090) குறிப்பிடப்பட்டுள்ளது

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கட்டணமே 50% க்கு அதிகமாக உள்ள நிலையில், "ரெட் பஸ்" போன்ற முன்பதிவு செய்யும் இணைய தளங்களில் கட்டணம் 100%ஐத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தீபாவளி நாள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் மேலும் உயர வாய்ப்பு அதிகமுள்ளது.

ஒருவேளை எங்கேயாவது மறைமுகமாகவோ அல்லது ஒரு சிலரோ தவறு செய்தால் அதைக் கண்டிக்க புகார் அளிக்கலாம். எல்லாருக்கும் தெரிந்தே பகிரங்கமாக இப்படியொரு பகல் கொள்ளை நடக்கும் போது யாரிடம் புகார் செய்ய முடியும். ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்தே இது நடக்கிறது

பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போயிட்டு வர மட்டும் 1500 முதல் 2000 செலவாகும் என்ற நிலையில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த 8000, 10000 என சம்பாதிக்கும் சாமானியனியர்களின் பரிதாப நிலையினைக் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்.

புனலைப் போன்ற சென்னையில், அதன் அகன்ற பகுதியில் தனது வாழ்க்கையை லட்சக்கணக்கானோர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுப் போன்ற பண்டிகை அல்லது முக்கியமான நாட்களில், அதேப் புனல் மையப்பகுதிக்கு கீழ் குறுகும் போது அதற்குள் திணிக்கப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

அந்த நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகியே ஒவ்வொரு முறையும் வெளியே வர முடிகிறது. ஆனால் ஒரேடியாக வெளியேற முடிவதில்லை.

வந்தாரை வாழ வைக்கும் சென்னை, வாழ வைப்பதற்கான நன்றிக்கடனை சாமானியர்களிடமிருந்து எதிர்பார்க்கிறதோ இல்லையோ, சமயத்தில் இதுப் போன்ற வியாபாரிகளாலும் பண முதலாளிகளாலும் சென்னையின் பேரில், அது சாமானியர்களிடமிருந்து உறிஞ்சப்படுகிறது.

கார்த்திக் பிரகாசம்...



Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...