இன்றைய தலைமுறையினாரால் அதிகம் அறியப்படாத ஒரு பெயர் . அதுவும் ஒரு முதல்வரின் பெயர். சுதந்திர இந்தியாவில் தமிழகத்திற்கான முதல் முதல்வர்.
காந்தியக் கொள்கைகளில் அதிகம் ஈர்ப்புக் கொண்ட ஓமத்தூரார், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். ஆனால் அந்த இரண்டு வருடங்களில் அவர் செய்த சாதனைகள் மற்றும் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு தான் இன்றுவரை தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
காந்தியின் மீது கொண்ட பற்றினால் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டவர். இடையில் தனிக் கட்சி அமைக்க சூழ்நிலை அமைந்தும், மற்ற கட்சிகளில் இணைய பல அழைப்புகள் வந்தும் தான் சார்ந்த கட்சிக்கு எத்தகைய துரோகமும் செய்ய கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று கடைசிவரை காங்கிரஸ்லேயே இருந்தவர். ஆட்சிக் கட்டிலையும்,அதிகாரப் பசியையும் அறவே புறம் தள்ளியவர். நேர்மையையும் எளிமையையும் கண் மூடும் காலம் உயிர் மூச்சாக கொண்டவர்.
நிஸாம் கட்டுப்பாட்டில் தனிக் குட்டி நாடாகத் திகழ்ந்த ஹைதராபாத்தையும், பிரென்ச் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியையும் இந்தியாவுடன் இணைக்க துணிச்சலுடன் அரும்பாடுபட்டவர்.
ஆதி திராவிடர்களுக்கு, "ஆதி திராவிடர் நலத்துறை" எனத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் ஓமந்தூராரே. தமிழர்களின் கட்டடக் கலையைப் பறைசாற்றும் விதமாக, தமிழக அரசாங்கத்தின் சின்னமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தைத் தேர்வு செய்ததும் இவரே.
தமிழகம் கண்டெடுத்த மிகச் சொற்பமான தலைச்சிறந்த அரசியல் தலைவர்களில் முதலமானவர் ஓமந்தூர் பி.ராமசாமி..
கார்த்திக் பிரகாசம்...
ஆம். நம் தமிழ்நாட்டின் தலைச் சிறந்த முதல்வராக கருதப்படும், இன்னும் கொண்டாடப்படும் காமராஜருக்கு முன்பே தமிழகம் கண்டெடுத்த நேர்மையின் சிகரம்.
காந்தியக் கொள்கைகளில் அதிகம் ஈர்ப்புக் கொண்ட ஓமத்தூரார், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். ஆனால் அந்த இரண்டு வருடங்களில் அவர் செய்த சாதனைகள் மற்றும் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு தான் இன்றுவரை தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
காந்தியின் மீது கொண்ட பற்றினால் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டவர். இடையில் தனிக் கட்சி அமைக்க சூழ்நிலை அமைந்தும், மற்ற கட்சிகளில் இணைய பல அழைப்புகள் வந்தும் தான் சார்ந்த கட்சிக்கு எத்தகைய துரோகமும் செய்ய கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று கடைசிவரை காங்கிரஸ்லேயே இருந்தவர். ஆட்சிக் கட்டிலையும்,அதிகாரப் பசியையும் அறவே புறம் தள்ளியவர். நேர்மையையும் எளிமையையும் கண் மூடும் காலம் உயிர் மூச்சாக கொண்டவர்.
நிஸாம் கட்டுப்பாட்டில் தனிக் குட்டி நாடாகத் திகழ்ந்த ஹைதராபாத்தையும், பிரென்ச் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியையும் இந்தியாவுடன் இணைக்க துணிச்சலுடன் அரும்பாடுபட்டவர்.
ஆதி திராவிடர்களுக்கு, "ஆதி திராவிடர் நலத்துறை" எனத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் ஓமந்தூராரே. தமிழர்களின் கட்டடக் கலையைப் பறைசாற்றும் விதமாக, தமிழக அரசாங்கத்தின் சின்னமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தைத் தேர்வு செய்ததும் இவரே.
தமிழகம் கண்டெடுத்த மிகச் சொற்பமான தலைச்சிறந்த அரசியல் தலைவர்களில் முதலமானவர் ஓமந்தூர் பி.ராமசாமி..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment