மனுசங்க, சாதாரணமாகப் பாத்துப் பேசிக்கிட்டுப் போறாவங்களாக மட்டுமில்ல, அதுக்கு மேலேயும் ஒவ்வொருத்தனும் அந்தரங்கமான ஆழ அகலங்களையும், மறைவிடங்களையும், இருட்டு மூலை முடுக்குகளையும் கொண்டிருக்கிறான் என்பதைச் சிலுவை படிச்ச ஆங்கில இலக்கியங்கள் அவனுக்கு உணர்த்தின. நம்மளப் பத்தி நமக்குள்ள அபிப்ராயந்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது.
அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு., முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்... நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும் நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும் பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை... நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது... என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்... நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...
Comments
Post a Comment