Skip to main content
என் நண்பனும் நானும் வெளியில் சென்றிருந்தோம். நாங்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க இரு வேறு குடும்பத்தினர் சந்தித்து கொண்டனர்.. அவர்கள் பேசியதை வைத்து பார்க்கும் போது ஏற்கனவே நன்கு அறிந்தவர்கள் என்பது தெளிவாக தெரிந்தது. வழக்கமான கேள்வி மற்றும் விசாரிப்புகள் முடிந்தவுடன் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளைப் பற்றி பேச ஆரம்பத்தினர். இரு குடும்பத்தினருமே  தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அது இருக்கிறது இது இருக்கிறது  என்று பெருமிதம் அடைந்துக் கொண்டிருந்தனர்.. இறுதியில் பள்ளி கட்டணம் பற்றி ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளிக் கட்டணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் எனக்கும் என் நண்பனுக்கும் தூக்கிவாரிப் போட்டது.

ஒருவர் என்னவென்றால் தன் பிள்ளை படிக்கும் பள்ளியில் தான் கட்டணம் மிகக் குறைவு அதுவும் வெறும் 42000 என்கிறார். அதற்கு  மற்றொருவர் என்னவென்றால் இங்கு 54000 ஆனால் பிள்ளைகளுக்கு சிங்கிங் டான்சிங் ஸ்விம்மிங் என்று அனைத்தும் கற்றுத் தருகிறார்கள் என்கிறார். என் மனதில் "அட பாவிகளா, எங்கப்பா எனக்கு கல்லூரிக்குக் கூட இவளவு செலவு செய்யவில்லையே" என்ற குரல் ஒலித்தது. இருந்தாலும் இவளவு செலவு செய்கிறார்கள் என்றால் கண்டிப்பாக இவர்கள் பிள்ளைகள் 10 அல்லது  12ம் வகுப்பில் படிப்பார்கள் என்று மனதைத் தேத்திக் கொண்டேன் ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை.சில மணி துளிகளில் ஒரு இடி விழுந்தது. ஒருவருடைய  பிள்ளை இப்பொழுது தான் ஒன்றாம் வகுப்பு செல்கிறான் இன்னொருவரின் பிள்ளை இப்பொழுது தான் மூன்றாம் வகுப்பு செல்கிறாள். உடனே நாங்கள் அங்கு இருந்து கிளம்பிவிட்டோம்.

ஆனாலும் நினைப்பெல்லாம் அதைச் சுற்றியே இருந்தது. நம் சமூகத்தில் இது போன்ற அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்க வைத்தால் தான் நமக்கு கௌரவம் என்ற மாயை மேலோங்கி வருவதாக தெரிகிறது. ஆனால் இது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை.

நம் பிள்ளைகளைப் பணக்கார பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாழ்கைக்குத் தேவைப்படும்  நல்ல பண்புகளைக் கற்று தரும் நடுத்தர பள்ளியில் படிக்க வைத்தாலே போதும். அவர்களின் வாழ்க்கைச் சிறப்படையும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...