Skip to main content

இந்த வார "அம்மா" திட்டம்.

      போன வாரம் "அம்மா உப்பு" திட்டம் என்றால் இந்த வாரம் அதாவது நாளை முதல் "அம்மா மருந்தகங்கள்" தமிழ் நாடெங்கும் ஆரம்பமாம். இன்னும் எது எது "அம்மா" திட்டத்தில் கொண்ட வர போகிறார்களோ தெரியவில்லை.

       கிண்டலுக்குத் தான் எல்லோரும்  ஒரு நாள் தமிழ் நாடும் அம்மா நாடு என்று ஆக்கப்படும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். போகிற போக்கைப் பார்த்தால் அதும் கூடிய சீக்கிரத்தில் நடந்திரும் போலிருக்கிறது.

       பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வரும் போது காமராஜர் அதற்கு அவரது பெயரை வைத்துக் கொள்ளவில்லை.. அத்திட்டத்தை மேம்படுத்திய எம்ஜிஆர் அவர்களும் அவரது பெயரை வைத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த இரு மாமனிதர்களுக்கும் தெரியும் அது மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக செய்யப்படுகிறது அதற்கு தாங்கள் உரிமை கொண்டாட முடியாது என்று. ஆனால் இன்று அவர்களது பெயர்களைச் சொல்லி ஆட்சி செய்பவர்கள் என்னவென்றால் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர்களது பெயரை வைத்துக் கொள்கின்றனர்..

      அரசு மக்களின் முன்னேற்றத்திலும் ஆட்சியிலும் கவனம் செலுத்தாமல் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நன்றன்று. அரசே அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கிறது.. பிறகு அரசே "பாமர மக்களின் நலன் கருதினு" ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டு இது போன்ற இலவச மற்றும் மலிவு விலை திட்டங்களை அளிக்கிறது.. அத்திட்டத்திற்கு அவர்களது பெயர்களையே வைத்துக் கொள்கிறது. அதற்கு பதிலாக தனியார் வசம் கொடுக்காமல் இருந்தால் விலையை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

       ராஜாஜி அவர்கள் சொன்னது போல் "Government is for Governance Not for Business". சரி. அடுத்து என்ன "அம்மா திட்டம்"  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


கார்த்திக் பிரகாசம்..
                                              

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...