Skip to main content

காதல்

      காதல்: வார்த்தைகளால் மட்டும் முழு உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலாத ஒரு உணர்வு. வார்த்தைகளுக்கு வறட்சியை  ஏற்படுத்திவிட்டு நினைவுகளில் வெள்ளத்தை உண்டாக்கும் உறவு. ஒரு கட்டத்தில் வார்த்தைகள் மௌனமாகி கண்களை  உயிர்த்தெழுந்து பேச வைக்கும் மாயாஜாலம்.

     காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் தன் காதலனுடன்/காதலியுடன் பல ஆண்டுக் காலம் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்று படித்த ஒரு செய்தி பல ஆண்டுக்காலம்  ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் தான் காதல் என்றில்லை என்பதை உணர வைத்தது. இன்னும் 10 மணி நேரம் தான் உயிர் வாழ்வான் என தெரிந்தும் தன் காதலனைக் கரம் பிடித்த ஒரு காதலி.

      உடல்நிலை சரியில்லாமல் மருத்துமனையில் இருக்கும் தன் காதலன் இன்னும் 10 மணி நேரத்தில் இறக்கப் போகிறான் என்ற துக்கச் செய்தியை மருத்துவர்கள் வாயிலாக அறிந்தவுடன் உறவினர்களின் எதிர்ப்பையும் அறிவுரையையும் மீறி மருத்துவமனையிலேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தப் பெண் படுத்தப்படுக்கையில்  இருக்கும் தன் காதலனை கரம் பிடித்துள்ளால். உறவினர்களும் கண்ணீருடன் ஆசிர்வாதம் செய்துள்ளனர்.. இதில் இன்னும் சோகம் என்னவென்றால் மணமான  10 நிமிடத்தில் அந்த காதலன் இறந்துவிட்டான்.

      திருமணம் செய்துக் கொண்டு பல ஆண்டுக்காலம் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் தான் காதல் வாழ்கிறது என்றில்லை. அப்பொழுது தான் காதல் வெற்றி பெற்றது என்றும் அர்த்தம் இல்லை. தன் காதலன்/ காதலி நினைவுகளை சுமந்துக் கொண்டு இருந்தாலே அந்த காதலும் வாழ்ந்துக் கொண்டே இருக்கும். அதுவும் வெற்றி பெற்ற காதலே.. 

கார்த்திக் பிரகாசம்..

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...