Skip to main content

Posts

Showing posts from September, 2017
ஏன் என்மேல் அளவில்லா அன்பை அருவி போல் அனைத்து நேரமும் கொட்டுகிறாய்..? பதில் என்னவென்று தெளிவாகச் சொல்ல தெரியவில்லை ஒருவேளை நீ கவிதை எழுதுவதனால் கூட இருக்கலாம்..! ச...
பேனாவில் காதலை நிரப்பித் தந்து கவிதை எழுது என்கிறாள்...! எதற்காக என்றால் எனக்காக என்றாள்...! எழுதத் தான் போகிறேன்...! கவிதையில் காதலை...! காதலென்னும் கவியை..! ஆனால் எழுதுபவன...
குழந்தைகள் தொடர்வண்டியில் பாட்டியுடன் அமர்ந்திருக்க வண்டி நகரத் தொடங்கியதும் சிரிப்பு ஒருகண்ணில் ஈற்றீல் ஈரம் மறுகண்ணிலென வேகமெடுக்கும் வரை டாட்டா காட்டிக...
முதல் விருப்பம் முதல் காதல் முதல் கைக்கோர்ப்பு முதல் கவிதை முதல் முத்தம் முதல் உறவு முதல் அணைப்பு முதல் பிரிவு முதல் கண்ணீர் முதல் நீ முதல் நான் முதல் நாம்...!!! கார்த...
இடைவேளையில் வாசலில் வந்து திண்பண்டங்களை விற்கும் அந்த வயதான பாட்டியை இப்பொழுது எந்தப் பள்ளியின் வாசல்களிலும் காண முடிவதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
பிணப் பூக்கள் நான் ஒரு மலராகப் பிறந்தேன் ஏதோ ஒரு மங்கையின் கூந்தலில் மணம் பரப்ப வேண்டும் அது அவள் மனம் வரை பரவ வேண்டும் ஏதோ ஒரு காதலன் என்னைப் பரிமாறி தன் மனம் பறி...
சாலையில் நின்று பெண்ணொருத்தி அழுதுக் கொண்டிருந்தாள் கண்ணீரைத் துடைக்க அவளது கைகள் ஏனோ முன்வரவில்லை அவளைச் சுற்றியிருந்த காற்று ஈரமாகியிருந்தது பெரும்புயலில் சிதைந்த காட்டைப் போல கூந்தல் கலைந்திருந்தது அடைமழையிலும் அழியாத வாசலில் வரைந்த கோலத்தைப் போல நெற்றியில் குங்குமம் நிறைந்திருந்தது நானும் காற்றும் அழுகையை நிறுத்த அவளுக்கு ஆறுதல் அனுப்பினோம் காரிகை மொத்த கண்ணீரையும் இன்றே அழுதுத் தீர்த்துவிட வேண்டுமென்று முடிவுச் செய்துவிட்டாள் போல நானும் காற்றும் தோற்றுக் கொண்டே இருந்தோம் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து நான் கிளம்பிவிட்டேன் ஆனால் தோற்று தோற்று மடியில் சாய்த்து சாய்த்து அவளைத் தொடர்ந்து ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தது அந்தப் பேரமைதியான காற்று...!!! கார்த்திக் பிரகாசம்...
கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது சிந்தனைவாதியாகலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது செத்து கொண்டே சுவாசிக்கலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது சுவாசித்துக் கொண்டிருந்தும் சாகலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது காதல்வயப்படலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது கவிஞனாகலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது மழலையாகலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது மனிதனாகலாம் கார்த்திக் பிரகாசம்...
பல வருட நட்பு இங்கு ஆச்சரியமில்லை ஆனால் பல வருட காதல் இங்கு அதிசயம்... கார்த்திக் பிரகாசம்...
உன்னை நான் பார்ப்பதே அரிதினும் அரிது..! அதையும் மீறி வந்தாலும் ஒருநாள் கூட தங்கமாட்டாய் வந்த வேகத்தில் திசையறிமால் திரும்பிச் சென்றுவிடுவாய்..! இந்தமுறை மட்டுமென்ன இவ்வளவு பாசம் இரண்டு நாட்களாக நிமிடம் அகலாமல் அண்டிக் கிடைக்கிறாயே..! என்மேல் பாசமா இல்லை எப்பொழுதும் இருந்திடாத சென்னையின் இந்த மாறுபட்ட காலநிலையின் மீது காதல் கொண்டுவிட்டாயா..! வெறுமனே கையைக் கொடுத்துச் செல்பவன் இந்தமுறை நகரவிடாமல் கட்டியணைத்துக் கிடக்கிறாயே..! நீ வரும்போதெல்லாம் வெகு சீக்கிரம் விரட்ட நினைப்பவன் இந்தமுறை அதற்கும் சக்தியற்றுக் கிடக்கிறேன்..! இந்த வாரம் நீ வருவாய் என்றறியாமால் சென்ற வாரமே வேறு அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டேன்..! மறுபடியும் விடுப்புக் கேட்டால் வெகுண்டெழுவார்கள்..! அது சரி..!! அஜைல் டெக்னாலஜி பற்றியெல்லாம் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..! என் புலம்பல்கள் ஒருபுறம் இருக்கட்டும் இந்தமுறை உனைநான் எனக்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன்..! ஆம்..! மனதளவிலும் உடலளவிலும் எனக்கும் கொஞ்சம் ஓய்வுத் தேவைப்படுகிறது...! வந்தது வந்துவிட்டாய் ஊசிப் போட்டு உன்னைத் துரத்த விரும்பவில்லை மாத...
சென்று வருகிறேன்...! எனக்கு தேவையானதை நான் தேர்ந்தெடுக்க எனக்கெதற்கு தேவையில்லாத இந்த தேர்வு.! நான் மருத்துவம் கற்க விரும்பியது பணம் காசு சம்பாதிக்க அல்லவே.! மற்ற உ...