Skip to main content
உன்னை
நான்
பார்ப்பதே
அரிதினும் அரிது..!
அதையும் மீறி வந்தாலும்
ஒருநாள் கூட
தங்கமாட்டாய்
வந்த வேகத்தில்
திசையறிமால் திரும்பிச்
சென்றுவிடுவாய்..!
இந்தமுறை மட்டுமென்ன
இவ்வளவு பாசம்
இரண்டு நாட்களாக
நிமிடம் அகலாமல்
அண்டிக் கிடைக்கிறாயே..!
என்மேல் பாசமா
இல்லை
எப்பொழுதும்
இருந்திடாத
சென்னையின் இந்த மாறுபட்ட
காலநிலையின் மீது
காதல்
கொண்டுவிட்டாயா..!
வெறுமனே கையைக்
கொடுத்துச் செல்பவன்
இந்தமுறை நகரவிடாமல்
கட்டியணைத்துக்
கிடக்கிறாயே..!
நீ வரும்போதெல்லாம்
வெகு சீக்கிரம்
விரட்ட நினைப்பவன்
இந்தமுறை
அதற்கும் சக்தியற்றுக் கிடக்கிறேன்..!
இந்த வாரம்
நீ வருவாய் என்றறியாமால்
சென்ற வாரமே வேறு
அலுவலகத்திற்கு
இரண்டு நாட்கள்
விடுப்பு எடுத்துவிட்டேன்..!
மறுபடியும் விடுப்புக் கேட்டால்
வெகுண்டெழுவார்கள்..!
அது சரி..!!
அஜைல் டெக்னாலஜி பற்றியெல்லாம்
உனக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை..!
என் புலம்பல்கள் ஒருபுறம் இருக்கட்டும்
இந்தமுறை உனைநான் எனக்காகப்
பயன்படுத்திக் கொள்கிறேன்..!
ஆம்..!
மனதளவிலும்
உடலளவிலும்
எனக்கும்
கொஞ்சம் ஓய்வுத் தேவைப்படுகிறது...!
வந்தது வந்துவிட்டாய்
ஊசிப் போட்டு உன்னைத்
துரத்த விரும்பவில்லை
மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்...!
ஆனால்
நாளை இரவுக்குள்
நீ எனைவிட்டுச் சென்றுவிடவேண்டும்...!
உன் மீதான
நம்பிக்கையின் பேரில்
இந்த இரவுப் பயணத்தை
கசந்தே துவங்குகிறேன்...!
காய்ச்சலே.!
காலையில்
கண் விழிப்பதற்குள்
என்னைவிட்டு
கசிந்துவிடு.!

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...