Skip to main content

பிணப் பூக்கள்

நான் ஒரு மலராகப்
பிறந்தேன்
ஏதோ ஒரு
மங்கையின் கூந்தலில்
மணம் பரப்ப வேண்டும்
அது அவள்
மனம் வரை பரவ வேண்டும்
ஏதோ ஒரு காதலன்
என்னைப் பரிமாறி
தன் மனம் பறிபோனதை
அவன் காதலியிடம் சொல்ல  வேண்டும்
சொல்லிய நேரம் அந்தக் காதலி
என்னைப் பார்க்க
அவளின் சிவந்த முகம்
மேலும் சிவக்க வேண்டும்
அழகான நேரத்தில்
ஆசைக்குரியவர்களின் கழுத்தில்
மணமாலையாகத் தொங்க வேண்டும்
மணமானவர்களின் 
மஞ்சத்தில் நிகழும்
முதல் கலவியில் 
என் வாசனையும்
கலந்திருக்க வேண்டும் 
என்று
ஏகப்பட்ட ஆசைகள்

மணமேடையில் மனம் மயங்கவிருக்க 
விரும்பிய நான்
இன்று பிணத்தின் மடியில்
மண்டியிட்டுக் கிடக்கிறேன்

நான் ஒரு மலராகப்
பிறந்தேன்
வாழப் போவது
சில நாட்களே என்றாலும்
வாடிப் போவதற்காக ஒருநாளும்
நான் வருந்தியதில்லை

இன்றும் அதே நறுமணம் தான் 
நல்கிக் கொண்டிருக்கிறேன்
ஆனால் யாருக்கும் இது
சுகமானதாக இருக்கவில்லை
எல்லாரும் என்னைக் கவலையின்
சின்னமாகச் சித்தரிக்கிறார்கள்
கூடைக் கூடையாக 
குப்பையோடு குப்பையாக
கூடாரத்தின் ஓரத்தில் குவித்து வைத்திருக்கிறார்கள்
என்னைத் தலையில் சூடிக் கொள்ள
யாருக்கும் விருப்பமில்லை
பரவாயில்லை ஆனால்
என் தழையில்
ஏறி மிதிக்கிறார்கள் 
சீக்கிரம் வாடிப் போக
பிணத்திடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்
பாவம் அந்தப் பிணம்
என்னச் செய்யும்

யாரோ பிணமானதற்கு
என்னையும் சேர்த்து பிணமாக்கிவிட்டார்கள்
ஏனென்றால் நான் ஒரு
மலராகப் பிறந்தேன்

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...