Skip to main content

Posts

Showing posts from January, 2018
காதலை முதலில் நீ சொன்னதாய் தான் ஞாபகம் பிரச்சினைகள் வருமென்றறிந்தும் எனக்கும் உன்மீது காதல் வந்தது மனமொத்து நின்றோம் மதம் குறுக்கிட்டது சாகும்வரை ஒன்றாகத் தா...
" நான் கிளம்புகிறேன் " என்றுச் சொல்லும் அந்தவொரு நிமிடத்திற்காக இரண்டு மணி நேரத்திற்கு முன்பிருந்தே மனதளவில் தயாராகிக் கொண்டிருப்பேன். வீட்டை விட்டு வெளியூருக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டாலும்கூட அவர்கள் கண் கலங்காமல் என்னை ஒருபோதும் வழியனுப்பியதில்லை. அதற்காகவே கிளம்பும் போது பெரும்பாலும் அம்மா அப்பாவின் கண்களைச் சந்திப்பதைத் தவிர்க்கப் போராடுவேன். ஒருவேளை கண்களைப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான். மனது பலவீனப்பட்டு உடைந்து போகும். இமைகள் நனையும். கண்ணீரை மறைக்க முடியாமல் கண்கள் தவிக்கும். " பாத்து போ.. ஒழுங்கா சாப்பிடு.. டீ குடிச்சிகிட்டே சாப்பாட்ட மறந்துட்டு சுத்தாத.. நைட் ரொம்ப நேரம் முழிச்சிகிட்டு இருக்காத.. சாப்புட்டு சீக்கிரம் தூங்கிப் பழகு.. போய்ட்டு போன் பண்ணு " என்று இதழ்களுக்கு ஓய்வளிக்காமல் கன்னங்கள் நனைய பாசவார்த்தைகளால் அணைத்துக் கொண்டே இருப்பாள் அம்மா. மறுபுறம் அப்பா, " கண்ணு, கைல காசு இல்லனா போன் பண்ணு. அக்கௌன்ட்'ல உடனே போட்டுவுடறேன். எப்படிடா அப்பாகிட்ட கேக்கிறதுனு பட்டினியோட கெடக்காத .. என்ன சரியா..?" என்பார். சரிப்பா.....
கோலம்...!!! சேலையைத் தூக்கி லாவகமாக இடுப்பில் செறுகிக் கொண்டு கையில் துடைப்பத்துடன் அம்மா.  நீர் நிரம்பிய வாளியைத் தூக்கிக் கொண்டு பின்னால் நான். அம்மாவும் நானும் கோல...
கருக்கலில் கடற்கரையில் காதலியுடன் கவிஞனவன் நின்றிருந்தான் கண்முன்னே எத்தனைமுறை கண்டாலும் சலிக்காத அழகுக் குன்றிடாத கடல் காதலியை காற்றிடம் ஒப்படைத்துவிட்ட...
மித்ரன் முகத்தைத் தொங்கப் போட்டு கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக நடந்து வந்தான். முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது ஏதோ சரியில்லை என்று. "என்ன பிரச்சனை..?" ராகவி ...

எளிய மனிதர்கள் சூழ் உலகு

எழுபது முதல் எண்பதுக்குள் வயதிருக்கும். ஒல்லியான உருவம். ஒடிசலான கன்னங்கள். சராசரிக்கும் மிகக் குறைவான உயரம்.கண்ணாடியின் உதவியோடு கண்கள் ஆனாலும் கூர்விழிப் பார்வை. தலையையும் மார்பையும் நூலில் கோர்த்து கட்டியது போன்ற கோழிக் கழுத்து. வளைந்திடாத முதுகு. தடியில்லாமல் தடம் பதிக்கும் பாதங்கள். இடுப்பில் காவி வேட்டி. இடுப்பைத்தான் வேட்டி கட்டியிருக்கிறதென்று முழுமனதாக ஒப்புக் கொள்வது கொஞ்சம் கடினம். வேண்டுமானால் வேட்டியென்ற கொசுறுத் துணி இறுக்கிப் பிடிக்க முயன்றுக் கொண்டிருந்த இடத்தை 'இடுப்பு' என்று வைத்துக் கொள்ளலாம். அதே போல் அதை மேல்சட்டை என்று அவ்வளவு எளிதில் அங்கீகரித்துவிட முடியாது. சட்டையாகத் தான் இருக்கும் என்று நாமே அனுமானித்துக் கொள்ள வேண்டும். தினமும் மாலை சரியாக ஆறு மணிக்கு, இருபது முதல் முப்பது பாய்களை ஒற்றை ஆளாக தலையில் சுமந்துக்கொண்டு தி.நகர் அருணா உணவகத்திற்கு அருகில் உள்ள நடைபாதைக்கு வந்துவிடுவார். எவ்வளவு பனி அடித்தாலும் எட்டரை மணி வரை கண்டிப்பாக அமர்ந்திருப்பார். ஒற்றை ஆள் பாய் முதல் மூன்று நான்கு பேர் படுக்கக் கூடிய அளவிலான பாய்களை ரகத்திற்கு ஐந்து முதல் பத்து ...