Skip to main content

சின்னச் சின்னக் கொலைகள்

அடுத்தமுறை எங்கேயாவது
பார்க்க நேர்ந்தால்
தயைக் கூர்ந்து
என்னைக் கண்டதுண்டமாக
வெட்டி வீசிவிடுங்கள்

மனைவியோடோ
காதலியோடோ அலைபேசியில்
அன்பை முத்தங்களாகவும்
காதலை இதயங்களாகவும்
நீங்கள் பறக்கவிட்டுக் கொண்டிருக்கையில்
நான் உங்களுக்குத் தெரியாமல்
அதை நோட்டமிட்டவாறு இருந்திருக்கிறேன்

நீங்கள் தவறவிட்ட ரூபாய்த் தாள்களை
உங்களிடம் சொல்லாமல்
யாரும் கவனித்திடாத வேளையில்
அதனை என்
சட்டைப் பைக்குள் அமுக்கிவிட்டு
கமுக்கமாக வந்திருக்கிறேன்

பணம் எடுக்க
ஏடிஎம் வாசல் வரிசையில்
நிற்கையில்
உங்கள் கடவு எண்ணைக்
கவனிக்காதவனைப் போல்
நான் நடித்துத் தான் கொண்டிருந்தேன்

அந்த நடைபாதையிலும்
நின்ற இடத்திலும்
நீங்கள் முகம் சுளிக்கும்படி
எச்சிலைக் காறித் துப்பிவிட்டுத்
திரும்பி பார்க்காமல்
சென்றது நானே தான்

வங்கியில் கடன்பட்டும் வட்டி கட்டியும்
வாங்கி நிறுத்தியிருக்கும்
உங்களது புதிய வாகனத்தில் ஆணியால்
வரி வரியாய் இழுத்துவிட்டு
அல்பச் சுகம் காணும் அடியனும் நானே தான்

ஆடை விலகியிருப்பதை அறியாமல்
வேலையில் நீங்கள் கவனமாக இருக்கையில்
திடீரென யாரோ கவனிக்கும் பிரக்ஞை ஏற்பட்டு
உடனே சரி செய்து சுற்றும்முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு "நல்லவேளை யாரும்
கவனிக்கவில்லை" என்று பெருமூச்சு விட்டிருப்பீர்களேயானால்
பாவமான பெண் நீங்கள்
உங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்.
என் கண்ணாடி கண்களில் மாமிசத்தை ருசிக்கும் வெறியுடன் உங்கள் மார்பு பிளவுகளை
மேய்ந்தே இருந்திருக்கிறேன்

இவ்வளவு இடைஞ்சல்களையும்
இன்னும் பல தொல்லைகளையும்
தொடுத்துக் கொண்டேயிருந்தாலும்
எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல்
உங்கள் கண்ணில் பட்டும் படாதவாறு
உலவிக் கொண்டிருக்கிறேன்.
ஒருவேளை நீங்கள் என்னைச் சந்தித்தாலும் கொல்லமாட்டீர்கள்
ஏனென்றால் நீங்களும் என்னைப் போல் தானே
இருக்கிறீர்கள்.?

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...