Skip to main content

Posts

Showing posts from April, 2019

தற்கொலைக் கனவுகள்

ஒவ்வொரு இரவும் விதவிதமாக தற்கொலைக்கு முயல்வதாய் அவனுக்குக் கனவுகள் வரும் மனதை வேறெதற்கோ திசைத் திருப்பினாலும் அதன் பாதைத் தற்கொலை முற்றத்திற்கே மீண்டும் இட்டுச் செல்லும் தற்கொலைக் கனவைக் கொல்ல முடியாமல் வியர்த்துக் கொட்ட வெடுக்கென்று திடுக்கிட்டு விழித்தெழும்போதெல்லாம் இதயத்தின் படபடப்பில் இதற்குத் தற்கொலையே செய்துக் கொள்ளலாம் என்றுத் தோன்றும் கார்த்திக் பிரகாசம்...

சலிப்புத் தீர்ந்ததடி சகி

எத்தனையோ அடி உயரத்தில் பறக்கிறாள் பிறந்தது முதல் பூட்டியிருந்த அவளுடைய சிறகுகள் ஒருவழியாக தன் திறனறிந்து முதல் முறையாக பறக்கின்றன முகில் கூட்டங்கள் முன்னொதுங்கி நின்று வரவேற்கின்றன இனி காலம் அவளுக்குமானது கார்த்திக் பிரகாசம்...

ஓர் எழுத்தாளனின் ஆன்மா

வாழ்நாள் முழுவதும் எந்த அங்கீகாரத்துக்காக இரவு பகல் பாராமல் உழைத்தேனோ எந்தவொன்றுக்காக உறங்கும் போதும் உறங்கிடாமல் ஆசைப்பட்டேனோ இன்றது இனிதே நடக்கிறது புரியவில்லை புதிதாக ஒன்றுமில்லை என்றுக் கண்டுக்கொள்ளாதவர்களலெல்லாம் இதோ என் திறமையை மெச்சுகிறார்கள் கவிதையை நீட்டியபோது இளக்காரமாய் இளித்தவர்கள் இன்று சொற்களுக்கு இடையேயுள்ள இடைவெளியையும் உற்றுக் கவனிக்கிறார்கள் எழுத்திலிருக்கும் சிரத்தையின்மையின் சிரத்தையை மனம்விட்டு சிலாகிக்கிறார்கள் யதார்த்த சொல்லாடலில் விரிந்திருக்கும் ரசனையை வியக்கிறார்கள் நானெழுதிய வரலாறும் பண்பாடும் நுட்பமாகக் கையாளப்பட்ட என் மனதிற்கு மிகவும் நெருக்கமான அந்த நாவலை ஆராய்ச்சிப் பாடத்தில் சேர்த்திருக்கிறார்கள் அரசு விருதும் அறிவித்திருக்கிறார்கள் பல வருடங்களுக்கு முன்பு நான் துரத்தியடிக்கப்பட்ட அதே வளாகத்தில் இன்னும் சிலநாட்களில் பாராட்டு விழா ஏற்பாடாகிறதென்று அறிகிறேன் ஒருவேளை போன வாரம் மாரடைப்பு ஏற்பட்டு நான் இறக்காமல் இருந்திருந்தால் அப்பாராட்டு விழாவில் பங்குக் கொண்டிருக்கவே விரும்புவேன் கார்த்திக் பிரகாசம்....

காலம்

மாற்றோ மருந்தோ துறவோ அவசியமில்லை யார் இல்லாவிட்டாலும் யாராலும் வாழ இயலும் காலமதைக் கவனித்துக் கொள்ளும் ஏனென்றால் காலமே மாற்று காலமே மருந்து காலமே துறவு கார்த்திக் பிரகாசம்...

தவிப்பு

எத்தனைமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்... மனுசன சாகாடிப்பற உண்டாவுற வலிய விட மனுச நோகடிப்பற உண்டாவுற வலிதான் ஜாஸ்தி பிறகேன் என்னைத் தொடர்ந்து காயப்படுத்தியவாறே இருக்கிறாய்... நான் உன்னைக் காயப்படுத்தவே இல்லை நான் காயப்படுவதாக நினைத்து நீயேதான் உன்னைக் காயப்படுத்திக் கொள்கிறாய்... நீ சொன்னது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்... நீ காயப்படாமல் இருக்கவே தவிக்கிறேன் நீ வேற்றொருவரால் காயப்பட்டாலே என்னால் சகிக்க முடியாது இதில் என்னாலேயே காயப்பட்டால்... அந்தத் தவிப்பே என்னை உருக்குலைக்கிறது இந்த அன்பு தான் எவ்வளவு கொடூர சுகமானது உன் மடியில் என்னைச் சாய்த்துக் கொள்... கார்த்திக் பிரகாசம்...

ஜெயித்ததில் தோற்றவள்

"எல்லாம் நன்றாகப் போகிறது" என்று நம்பிக் கொண்டிருந்தேன். அந்தக் கண்மூடித்தனமான நம்பிக்கையில் எதையுமே நான் உற்றுக் கவனிக்கவில்லை. ஆழ்ந்து யோசிக்கவில்லை. அதனால் நிழலுலகில் கண்மூடித்தனமாகவும் நிஜ வாழ்வில் பார்வையிருந்தும் குருடியாகவுமே வாழ்ந்திருக்கிறேன் - ஏமாந்திருக்கிறேன். கண்களைத் திறக்காமலேயே எதிரிலிருப்பது என்னவொரு ரம்மியமான இயற்கைக் காட்சியென்று பேரானந்தத்தில் குதூகலித்தவாறு திளைத்திருக்கிறேன். அதை அப்படியே ஆழ்மனதிற்கும் கடத்தி அது உருவாக்கி வைத்திருக்கும் மாய சிறைக்குள்ளே சுதந்திர கீதம் பாடிக் கொண்டு சுதந்திர காற்றைச் சுவாசிப்பதாய் நினைத்து எரியூட்டப்பட்ட பிணங்களின் வாடையைச் சுமந்து வரும் சுடுகாட்டுக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆதவனின் வரிகளைப் போல், நம்ப வேண்டியதை விடுத்து நான் நம்ப விரும்புவதை மட்டுமே இத்தனை நாளாய் நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது இப்போது தான் என் புத்திக்கு உரைக்கிறது. இதோ எதிரே மேசையில் இருக்கும் அந்த வெள்ளைத் தாள் எனது ஒரேயொரு கையெழுத்தை எதிர்நோக்கிக் காற்றில் சடசடத்துக் கொண்டிருக்கிறது எப்போதோ நான் வாசித்தக் கவிதையை ஞாபகப்படுத...

அந்தவொரு தருணம்

"தலையில் மல்லிகைப் பூ. கன்னங்களில் ரோஸ் பவுடர். உதட்டில் அடர் நிறத்தில் சாயம். பெரும்பாலும் சிவப்பு அல்லது ரோஸ். கருப்பு நிற ஜாக்கெட். சிவப்புக் கலர் சேலை. கையில் ஒரு ஹேண்ட் பாக்" இந்தக் கோலத்தில் தான் பெரும்பாலும் என்னைப் பார்த்திருப்பீர்களென்று தெரியும். என்னைக் கடக்கும் போதெல்லாம் உங்களின் முகபாவனைகளைக் கவனித்திருக்கிறேன். அது பெரும்பாலும் இந்த இரண்டில் எதுவோவொன்றாக தானிருக்கும். ஒன்று சாக்கடையில் மிதக்கும் செத்த எலியைப் பார்ப்பது போன்ற அருவருப்பான பார்வை. இன்னொன்று தெருவினோரத்திலிருக்கும் குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் பசியால் 'மியாவ் மியாவ்' என்றுக் கத்தியிருக்கும் பூனையைப் பார்ப்பது போன்ற "நான் இரக்கமானவன்" எனும் பார்வை. ஆச்சரியம் என்னவென்றால் இதில் முன்பொரு காலத்தில் என்னுடன் படுத்தவர்களும் உண்டு. யோனியைத் தேடி வந்தவர்களுக்கு முகம் நினைவில் இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை ஆனால் அவர்களின் முகங்களை என்னால் சொல்ல முடியும். என்னுடன் படுத்த ஒவ்வொருவரின் முகத்தையும். சதைப் பிண்டமென - கொடூரமாக அழுத்தி - வெறியுடன் மிதித்து - குரல் வளையை நெறித்து பிராண்டிய அவ...