Skip to main content

ஓர் எழுத்தாளனின் ஆன்மா

வாழ்நாள் முழுவதும்
எந்த அங்கீகாரத்துக்காக
இரவு பகல் பாராமல் உழைத்தேனோ
எந்தவொன்றுக்காக உறங்கும் போதும்
உறங்கிடாமல் ஆசைப்பட்டேனோ
இன்றது இனிதே நடக்கிறது

புரியவில்லை புதிதாக ஒன்றுமில்லை என்றுக்
கண்டுக்கொள்ளாதவர்களலெல்லாம்
இதோ என் திறமையை மெச்சுகிறார்கள்

கவிதையை நீட்டியபோது
இளக்காரமாய் இளித்தவர்கள்
இன்று சொற்களுக்கு
இடையேயுள்ள
இடைவெளியையும்
உற்றுக் கவனிக்கிறார்கள்

எழுத்திலிருக்கும் சிரத்தையின்மையின் சிரத்தையை
மனம்விட்டு சிலாகிக்கிறார்கள்

யதார்த்த சொல்லாடலில் விரிந்திருக்கும்
ரசனையை வியக்கிறார்கள்

நானெழுதிய
வரலாறும் பண்பாடும்
நுட்பமாகக் கையாளப்பட்ட
என் மனதிற்கு மிகவும் நெருக்கமான
அந்த நாவலை
ஆராய்ச்சிப் பாடத்தில் சேர்த்திருக்கிறார்கள்

அரசு விருதும் அறிவித்திருக்கிறார்கள்

பல வருடங்களுக்கு முன்பு
நான் துரத்தியடிக்கப்பட்ட
அதே வளாகத்தில்
இன்னும் சிலநாட்களில்
பாராட்டு விழா ஏற்பாடாகிறதென்று
அறிகிறேன்

ஒருவேளை
போன வாரம் மாரடைப்பு ஏற்பட்டு
நான் இறக்காமல் இருந்திருந்தால்
அப்பாராட்டு விழாவில்
பங்குக் கொண்டிருக்கவே
விரும்புவேன்

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...