ஸ்வாட் பள்ளத்தாக்கின் சரித்திர தேவதை. "நான் மலாலா" புத்தகத்தை படித்து முடித்த தருணத்தில் மலாலாவின் நட்பைப் பெற்ற உணர்வு கிடைத்தது. இந்த சிறு வயதில் "பெண் கல்விக்காக" மலாலா கொடுத்த குரல் மிக உயர்வானது. இந்த வயதில் நான் என்னை சுற்றியுள்ள சமுகத்திற்கு என்ன செய்தேன் என்று நினைக்கும் போது தாழ்மையாய் இருக்கிறது. அதே நேரம் போராடுவதற்கு வயது ஒன்றும் அடிப்படை தகுதி இல்லை என்பதை மலாலாவின் இந்த புத்தகம் உணர்த்துகிறது.. தன் குழந்தை தன் வாழ்கையின் நோக்கமாக அல்லது லட்சியமாக ஒரு விடயத்தை தெரிவு செய்ய பெற்றோரின் பங்கு எந்த அளவுக்கு முக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கு மலாலாவின் பெற்றோர்கள் ஒரு உண்மையான உதாரணம்.. ஏனென்றால் இது மலாலாவின் தனிப்பட்ட நோக்கம் மட்டுமல்ல.. அவரது தந்தையின் வாழ்நாள் கனவு.. தந்தையின் வாயிலாக மலாலாவிற்கு ஏற்பட்ட தாகம் தான் இது.. மலாலா பெண் கல்விக்காகவும், உரிமைக்காகவும் மட்டும் குரல் கொடுக்கவில்லை.. ...