Skip to main content
விரும்பி வந்தவள் இல்லை
ஒரு கயவனை நம்பியதால்
விற்கப்பட்டவள்...!!!
உன்னை என் மகள் போல் 
கவனித்து கொள்வேன் என்றான்
அன்று என் நன்றியை கண்ணீரால்
அவனுக்கு காணிக்கையிட்டேன்...!!!
ஆனால் இப்பொழுது தான் புரிகிறது
அவன் சொன்ன மகளின் அர்த்தம்
"விலைமகள்" ...!!!
வந்தவர்களின் கால்களையெல்லாம்
தொட்டு காப்பாற்ற கெஞ்சினேன்...!!!
ஆனால் அவர்களுக்கு
தன் மகளைப் போல்
தன் மனைவியைப் போல்
தன் சகோதரியைப் போல்
தன் தாயைப் போல்
நான் ஒரு பெண்ணாக
தெரியவில்லை
சுகம் தரும் பொருளாகத் தான்
தெரிந்தேன்...!!!
அவர்களுக்கு
விந்தணு
வெளிப்பட்ட பிறகு கிடைக்கும்
சுகம் மட்டுமே தெரிந்ததே தவிர
என் கண்களில் வெளிப்படும்
கண்ணீருக்கான காயங்கள்
தெரியவில்லை...!!!
என்னை விற்ற கயவன்
ஒரு ஆண்மகன்...!!!
என்னை போன்ற அறியாப் பெண்களை
அறிந்து இதை தொழிலாக செய்பவன்
ஒரு ஆண்மகன்...!!!
தினம்தினம் என்னை தேடி வந்து
அலைபவன் ஒரு ஆண்மகன்...!!!
ஆனால் இந்த சமுகம் எனக்கு மட்டும் 
இட்ட பெயர் "விபச்சாரி"...!!!
பெண்களின் உடல் விற்பனை
பொருளல்ல ...!!!
கார்த்திக் பிரகாசம்...

Comments