Skip to main content

Posts

Showing posts from October, 2016
முகநூலில் சமூக ஆர்வலர் ஒருவரின் பெயரில் இயங்கும் பக்கமொன்றில் புகைப்படத்துடன் ஒரு கேள்வி. ஐஸ்லாண்டில், ஊழல் செய்யும் அதிகாரிகளின் புகைப்படங்கள் கழிவறைகளில் தொங்கவிடப்படும். இந்தியாவிலும் இதை பின்தொடரலாமா.? என்று அதில் வினவப்பட்டிருந்தது. நல்ல யோசனை தான். ஆனால் அதில் ஒரு சட்டச் சிக்கல். அத்தனை கழிவறைகள் இந்தியாவில் இருந்தால் நம் மக்கள் ஏன் இன்னும் அவசரத்துக்கு வெட்டவெளியிலும் மறைவிலும் இருளிலும் ஒதுங்க போகிறார்கள்.. கார்த்திக் பிரகாசம்...
நேற்று முதல் நகரத்தில் குவிந்து கிடக்கும் பலவூர் மனிதக் குப்பைகளை ஊர் வாரியாகப் பிரித்து இரவுபகல் பாராமல் புறநகரில் கொண்டு குவித்துக் கொண்டிருக்கின்றன சென்ன...
தோள்கள் உராய்ந்து விரல்கள் விரதம் விடுத்து கால்கள் கனமிழந்து திசைத் தெரியா வழியில் எதையும் தொலைக்காமல் எதையோ தேடிக் கொண்டிருந்த மாலைப் பொழுதில் கண்களைக் கண்டு பிரிவொன்று நேர்ந்தால் பிணமாகி விடுவேன் என்றாள்.. காதலை மட்டும் காட்டடி கல்லறையிலும் உன் கண்ணீர்த் தடங்களை என் இதழ்கள் உலர வைக்கும் என்றான்... கார்த்திக் பிரகாசம்...

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

இன்றைய தலைமுறையினாரால் அதிகம் அறியப்படாத ஒரு பெயர் . அதுவும் ஒரு முதல்வரின் பெயர். சுதந்திர இந்தியாவில் தமிழகத்திற்கான முதல் முதல்வர். ஆம். நம் தமிழ்நாட்டின் தலைச் சிறந்த முதல்வராக கருதப்படும், இன்னும் கொண்டாடப்படும் காமராஜருக்கு முன்பே தமிழகம் கண்டெடுத்த நேர்மையின் சிகரம். காந்தியக் கொள்கைகளில் அதிகம் ஈர்ப்புக் கொண்ட ஓமத்தூரார், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். ஆனால் அந்த இரண்டு வருடங்களில் அவர் செய்த சாதனைகள் மற்றும் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு தான் இன்றுவரை தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காந்தியின் மீது கொண்ட பற்றினால் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டவர். இடையில் தனிக் கட்சி அமைக்க சூழ்நிலை அமைந்தும், மற்ற கட்சிகளில் இணைய பல அழைப்புகள் வந்தும் தான் சார்ந்த கட்சிக்கு எத்தகைய துரோகமும் செய்ய கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று கடைசிவரை காங்கிரஸ்லேயே இருந்தவர். ஆட்சிக் கட்டிலையும்,அதிகாரப் பசியையும் அறவே புறம் தள்ளியவர். நேர்மையையும் எளிமையையும் கண் மூடும் காலம் உயிர் மூச்சாக கொண்டவர். நிஸாம் கட்டுப்பாட்ட...
சாக்கடையில் குப்பைகளும் சாலைகளில் நாமும் பெரிய வித்தியாசமில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துக்களுக்கான கட்டணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை(17/10/2016) அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 50% க்கும் மேல் அதிகமாக உள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கும்படி ஒரு தொலைப்பேசி எண்(044-32000090) குறிப்பிடப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கட்டணமே 50% க்கு அதிகமாக உள்ள நிலையில், "ரெட் பஸ்" போன்ற முன்பதிவு செய்யும் இணைய தளங்களில் கட்டணம் 100%ஐத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தீபாவளி நாள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் மேலும் உயர வாய்ப்பு அதிகமுள்ளது. ஒருவேளை எங்கேயாவது மறைமுகமாகவோ அல்லது ஒரு சிலரோ தவறு செய்தால் அதைக் கண்டிக்க புகார் அளிக்கலாம். எல்லாருக்கும் தெரிந்தே பகிரங்கமாக இப்படியொரு பகல் கொள்ளை நடக்கும் போது யாரிடம் புகார் செய்ய முடியும். ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்தே இது நடக்கிறது பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போயிட்டு வர மட்டும் 1500 முதல் 2000 செலவாகும் என...
வெட்டிய மரத்தில் செய்த ஜன்னல்களும் கதவுகளும் வீட்டில் திறந்தே கிடக்கின்றன ஆனால் காற்று தான் வரவில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
செல்லம்மாள் கல்லூரி நிறுத்தத்தில் இப்பொழுது அனைத்து பேருந்துகளும் நின்றுச் செல்கின்றன. அதுமட்டுமில்லாமல் பிரேத்யேகமாக நிறுத்தத்தில் ஓரிரு ஆய்வாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. இது எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சாதாரண பேருந்து நிறுத்தத்திற்கு மூன்று மாணவிகளின் உயிர்க் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் ஒருநாளும் மறந்து விடக்கூடாது... கார்த்திக் பிரகாசம்...
சிலருக்கு இறப்பில் விடிவு காலம் சிலருக்கு சிலர் இறப்பதினால் விடிவு காலம்...!!! கார்த்திக் பிரகாசம்...
நீண்ட நாட்கள் கழித்து அப்பாவுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கிறேன். நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில், டிராவிட் கங்குலி கும்ப்ளே என வீரர்களின் பெயர்கள...

நடந்து செல்பவர்களின் கதி...?

நேற்று மூன்று கல்லூரி மாணவிகள் பலியான அந்த இடத்தில் அப்படியொரு விபத்து நடந்ததற்கான தடயங்கள் கூட இன்று இல்லை. சிந்திக் கிடந்த மாணவிகளின் ரத்தம், மாநகரத்தின் விறுவிறுப்பில் மிக விரைவாய் உறைந்து போய்விட்டது. சிதறிக் கிடந்த புத்தங்கங்களும் திண்பண்டங்களும் மக்கிய குப்பைகளாகி விட்டன. இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதை அறிந்திருந்தும் எதுவுமே நடக்காதது போல அந்த இடத்தை மிக எளிதாக வாகனங்கள் கடந்து செல்கின்றன. பரபரப்பான வாழ்க்கையில் தனக்கு நேராத வரை கவனக் குறைவால் ஏற்படும் இதுப் போன்ற விபத்துகளைப் பற்றியும், வாழவே ஆரம்பிக்காமல் இறந்து போன உயிர்களை பற்றியும் நினைத்து பார்க்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இறப்பதற்கு இன்னும் உயிர்கள் நிறைய இருப்பதனால் இறந்து போன உயிர்களைப் பற்றி கவலைப்படவும் யாரும் தயாராயில்லை. வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததனால் இத்தகைய விபத்து நேர்ந்தது. கல்லூரிக்கு அருகில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் தான் விபத்து நேரிட்டது என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் கல்லூரிக்கு சரியான இடத்தில் அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் பேருந்து...

விடியா இரவு...

அனலாய்த் தகித்துக் கொண்டிருந்த அந்த வெப்பப் போர்வைக்குள் அவன் அவளது ஆண்மையில் அடங்கியும் அடக்கியும் அவள் அவனது பெண்மையில் அடைந்தும் அடையாமலும் விடியா இரவிலோர் முடியா பயணம்... கார்த்திக் பிரகாசம்...
விதைகள் வேறானாலும் வேர்களில் வேறுபாடில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
அடுத்தவன் குறையை சுட்டிக் காட்டுவதிலும் குத்திக் காட்டுவதிலும் தான் மனிதனுக்கான வேறுபாடு அடங்கியுள்ளது...!!! கார்த்திக் பிரகாசம்...
உணர்வுகள் ஒரு உயிர்க்கொல்லி...!!! கார்த்திக் பிரகாசம்...
"ஜிப்ஸி" ராஜு முருகனின் "ஜிப்ஸி" நூலைப் படித்து முடித்த நேரம், ஒரு நாடோடியாய் வாழ மனம் நாட்டம் கொள்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் வேதனையுடன் வெளிப்படுத்துகின்றன. நாம் பார்க்க மறுத்த/மறந்த பல நாடோடிக் குழுக்களின் முகங்களை உண்மை பிசகாமல், அலங்கார வார்தைகளால் உணர்வுகளை அசிங்கப்படுத்தாமல் அவர்களின் வாழ்க்கையை அவர்களினூடே வாழ்ந்து நம்மையும் அவர்களோடு வாழ வைத்திருக்கிறார். அன்றாட வாழ்க்கையில் நாம் மிக எளிதாகக் கடந்துச் செல்லும் சர்க்கஸ் மனிதர்கள், ரோட்டில் கயிறு மேல் நடந்து வித்தை காட்டுபவர்கள், இரவு நேரத்தில் தெருக்களில் குறி சொல்லிச் செல்லும் குடுகுடுப்பைக்காரர்கள், ராமர் கிருஷ்ணர் அனுமர் என சாமி வேடமிட்டு தெருவில் காசுக் கேட்டு வருபவர்கள் மற்றும் சவுக்கால் தன்னை அடித்துக் கொள்பவர்கள் என நாம் சிறிதும் நினைத்துப் பார்க்காத மனிதர்களைப் பற்றியெல்லாம் நெஞ்சத்தில் நெகிழ வைக்கிறது. இந்தப் புத்தகத்தை படித்தப் பின், கண்டிப்பாக மேற்கூறிய மனிதர்களை நாம் எளிதாக கடந்து சென்று விட முடியாது.. கார்த்திக் பிரகாசம்... ...
மனிதன் பசியைப் பணமாக்கவும் கல்வியைக் காசாக்கவும் கற்றதே மனித நேயத்தின் மிகப்பெரிய வீழ்ச்சி...!!! கார்த்திக் பிரகாசம்...
புதிதாக பார்க்கும் ஒவ்வொரு முகமும் ஏதாவதொரு பழைய முகத்தை நியாபகப்படுத்தி விடுகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...

சர்க்கஸ்...

கோமாளியாய் நடிப்பவனைப் பார்த்து ஆயிரம் கோமாளிகள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள் தானுமொரு கோமாளியென்று அறிந்தும் அறியாமலே...!!! கார்த்திக் பிரகாசம்...
பலருக்கு சாகும்வரை தெரிவதில்லை வாழவில்லையென்று...!!! கார்த்திக் பிரகாசம்...