Skip to main content

நடந்து செல்பவர்களின் கதி...?

நேற்று மூன்று கல்லூரி மாணவிகள் பலியான அந்த இடத்தில் அப்படியொரு விபத்து நடந்ததற்கான தடயங்கள் கூட இன்று இல்லை. சிந்திக் கிடந்த மாணவிகளின் ரத்தம், மாநகரத்தின் விறுவிறுப்பில் மிக விரைவாய் உறைந்து போய்விட்டது. சிதறிக் கிடந்த புத்தங்கங்களும் திண்பண்டங்களும் மக்கிய குப்பைகளாகி விட்டன. இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதை அறிந்திருந்தும் எதுவுமே நடக்காதது போல அந்த இடத்தை மிக எளிதாக வாகனங்கள் கடந்து செல்கின்றன.

பரபரப்பான வாழ்க்கையில் தனக்கு நேராத வரை கவனக் குறைவால் ஏற்படும் இதுப் போன்ற விபத்துகளைப் பற்றியும், வாழவே ஆரம்பிக்காமல் இறந்து போன உயிர்களை பற்றியும் நினைத்து பார்க்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இறப்பதற்கு இன்னும் உயிர்கள் நிறைய இருப்பதனால் இறந்து போன உயிர்களைப் பற்றி கவலைப்படவும் யாரும் தயாராயில்லை.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததனால் இத்தகைய விபத்து நேர்ந்தது. கல்லூரிக்கு அருகில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் தான் விபத்து நேரிட்டது என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் கல்லூரிக்கு சரியான இடத்தில் அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தவில்லை எனும் போது கல்லூரி நிர்வாகம் அரசுக்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். பேருந்து நிறுத்தம் அறிவிக்கும் வரை அந்த நிர்வாகம் மாணவிகளின் நலனுக்காகத் தொடர்ந்து போராடியிருக்க வேண்டும்

அதே போல், சாலை என்பது வாகனம் செல்வதற்கு மட்டும் என்றாகி விட்டது. வாகனம் செல்வதற்குத் தான் சாலை என்றால் பின்பு நடந்து செல்பவர்களின் கதி. ஒருபுறம் சாலைகளின் மீது கட்டடங்களின் ஆக்கிரமிப்பு. மறுபுறம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நடைமேடைகள் புறக்கணிப்பு. முக்கியமான சாலைகளில், நடந்து செல்பவர்களுக்கென்று போதிய அளவு இடம் ஒதுக்காதப் போது சாலை பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விடும்.

சாலையில் நடப்பதற்கென்று தனியாக நடைமேடையோ அல்லது மாற்று பாதையோ அமைக்காதவரை இதுப் போன்ற விபத்துக்களைத் தவிர்க்க முடியாது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...