Skip to main content

Posts

Showing posts from May, 2019

ஏதுமற்ற ஏதோவொன்று

நீ பேசுகிறாய் உன் வார்த்தைகள் வறண்டே ஒலிக்கின்றன நீ பார்க்கிறாய் உன் பார்வையில் பாசாங்கே பரவுகிறது நீ சிரிக்கிறாய் உன் சிரிப்பில் லயிக்கும் ஈரமே இல்லை நீ அருகில் இருக்கிறாய் உன் மனமோ எங்கோ தொலைவிலே திரண்டிக்கிறது மொத்தத்தில் இங்கே நீயில்லை அங்கே நானில்லை கார்த்திக் பிரகாசம்...

எப்பொழுதும் போல

காக்காவும் புறாவும் ஒரே கிளையில் ஒன்றாக அமர்ந்திருக்கின்றன மரம் தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது எப்பொழுதும் போல கார்த்திக் பிரகாசம்...

தனிப்பெரும் துணை

எதைப் பற்றியும் யாரைக் குறித்தும் கவலைப்படாத நாட்கள் அவை. காலையில் சீக்கிரம் எழுவதென்பது எப்போதுமே நடக்காத ஒன்று. தூக்கம் தெளிந்து நானாக எழும் வேளையே காலை. "அந்த"க் காலை வேளையில் சட்டைப் பையில் நோட்டாக இருந்தால் ஒரு பொட்டலம் பட்டச் சோறு. சில்லறையாக இருந்தால் ஒரு டீ இரண்டு சால்ட் பிஸ்கட். அதுதான் அன்றைய நாளுக்கான ஆகாரம். அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு நண்பர்கள் யாராவது அலுவலகத்திலிருந்து வரும்வரை காத்திருக்க வேண்டும். பணம் தர முகம் சுளிக்காத நண்பனாயிருந்தால் உரிமையுடன் கூடுதலாக ஒரு ஆம்லேட் இல்லையென்றால் நாலு இட்லி மட்டும். வேலைத் தேடி வேலைத் தேடி அலுத்திருந்தது. இல்லாத உடம்பு இன்னும் இத்துப் போகத் தொடங்கியது. தாடியைத் தடவிக் கொள்வதிலும், சுயஇன்பம் காண்பதிலுமே பெரும்பாலான பகல் பொழுதுகள் கரைந்தன. 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே', "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது" பாடல் வரிகள் சோகத்தின் வடிகாலாகவும் அதே வேளையில் புது தெம்பைத் தருவதாகவும் இருந்தன. கடல் பேரன்பு. கடலலை பெரும் தத்துவ ஆறுதல். சென்னையில் வசிப்பதில் மிக முக்கியமா...

உயிரிழந்த புத்தகங்கள்

விற்காமல் தேங்கிக் கிடக்கும் அந்தக் கவிதைப் புத்தகங்களில் ஓராயிரத்தியொரு காதல்களும் ஒடுக்கிச் சிதைத்த பெருவலிகளும் ஏங்கிக் கிடந்த ஏக்கங்களும் தூக்கியெறிந்த பிரிவுகளும் முதுகுடைத்த துரோகங்களும் பகீர ஆளில்லா இன்பங்களும் கலைஞனின் குமுறல்களும் உணர்வற்று தூசி அழுக்குகள் உருமாற்றிய சவ அட்டைகளால் மூடப்பட்டு முகமிழந்த நிரந்தர அநாதையாய்க் கிடக்கின்றன கார்த்திக் பிரகாசம்...

கோபம் அந்நியம்

அதீத கோபத்தில் இருக்கும் போது அந்நிய மொழியில் திட்ட ஆரம்பித்து விடுகிறாள் நல்லாதாய் போய்விடுகிறது எனக்கு ஒன்றுமே புரிவதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

ஆண்மை

நீ ஆண்மையென நினைக்கிறதானவொன்று உன் "குறி"யில் இல்லை அதனை நிரூபிக்க வேண்டிய இடம் என் "யோனி"யும் இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

இந்த முறையும்

வருகைக்காக வாசலை பார்த்திருந்திருந்தார்கள் அம்மாவும் அப்பாவும் "இந்த முறையும் வர முடியவில்லை" என்ற கடுதாசி தான் வந்தது... கார்த்திக் பிரகாசம்...

காமத்தோடு கைக்கோர்த்து

காமம் கடந்த காதல் தான் உன்னதமானதென்று காமத்தைக் காதலிலிருந்து கரைத்தொதுக்க எண்ணுகிறார்கள் சிலர் புரியவில்லை காதலில் காமத்தை ஏன் கடக்க வேண்டும் கண்ணே...! இந்து மதத்தில் இருந்து சாதியை விலக்க முடியுமா...? காமத்தைக் கடப்பது காதலிலிருந்து விலகுவது என்றுதானே பொருள் பிறகேன் காதலைத் தெய்வத் தன்மையோடு போற்றும் அதே நேரத்தில் காமத்தை ஒதுக்கி ஓரம்கட்டி வைக்க வேண்டும் உள்ளபடிக்கு சொல்கிறேன் காமத்தைக் கடக்கும் காதல் நமக்கு வேண்டாம் கண்ணே... வா...!!! காமத்தோடு கைக்கோர்த்தவாறே காதலிப்போம்...!!! கார்த்திக் பிரகாசம்...

கவிதையென்று

கவிதையென்று நான் சொல்லவில்லை வாசித்தவர்கள் வாசித்ததில் வாழ்ந்தவர்கள் வாழ்ந்ததை ரசித்தவர்கள் ரசித்தததை உச்சி முகர்ந்து அனுபவித்தவர்கள் அவ்வரிகளைக் கவிதையென்று அழைத்தனர்...!!! கார்த்திக் பிரகாசம்...