சட்டையற்ற வெற்றுடம்பு
வெளிச்சத்தை உண்ணும் பின்பனிக்கால பேரிருள்
பேச்சரவமற்ற அமைதி
புழுக்கம் தேடும் தனிமை
ஏதுமற்ற ஏதேதோ சிந்தனை
புறவுலகைப் புறக்கணித்து
திசையறியா தொலைவில்
எங்கெங்கோ திரியும்
ஓரிடத்தில் நிற்காத மனம்
கலங்குவதை உணர்ந்திடாத கண்கள்
துடைத்திட எழுந்திடாத கரங்கள்
மனவெளி அலைச்சலில்
மறுத்துப் போன ஆத்மாவின்
சோக கீதம் தான்
இப்பொழுதில் யாவும்
கார்த்திக் பிரகாசம்...
பேச்சரவமற்ற அமைதி
புழுக்கம் தேடும் தனிமை
ஏதுமற்ற ஏதேதோ சிந்தனை
புறவுலகைப் புறக்கணித்து
திசையறியா தொலைவில்
எங்கெங்கோ திரியும்
ஓரிடத்தில் நிற்காத மனம்
கலங்குவதை உணர்ந்திடாத கண்கள்
துடைத்திட எழுந்திடாத கரங்கள்
மனவெளி அலைச்சலில்
மறுத்துப் போன ஆத்மாவின்
சோக கீதம் தான்
இப்பொழுதில் யாவும்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment