Skip to main content

Posts

Showing posts from January, 2022

தானாய் மலரும் கவிதை

குழந்தைகள் வெகு இயல்பாய் இறைக்கிறார்கள் கவிதையை எழுதுவதை நிறுத்திவிட்டுத் தானாய் மலரும் கவிதையை ரசிக்கத் தொடங்கிவிட்டேன் நான் கார்த்திக் பிரகாசம்...

வெற்று புன்னகை

உன்னில்  எனக்கே எனக்கென்று ஓர் இடம் வைத்திருந்தாய்? அது காதலுக்கான இடம் தானென்று சூளுரைக்கவில்லை நான் ஓர் வளர்ப்பு நாயிக்கான இடமாகவோ பூனைக் குட்டிக்கான இடமாகவோ மலரின் இடமாகவோ பேனாவின் இடமாகவோ மது பொத்தலின் இடமாகவோ சிகரெட் துண்டின் இடமாகவோ கூட இருந்திருக்கலாம் அது ஆனால் அடிக்கடி நீயென்னை அழைக்கும் "கண்ணு" காற்று வெளியிடையில் உதடுகள் தீண்டிடாமல் நித்தம் நீ பரப்பிட்ட பேரன்பின் முத்தமில்லையா? நம்மிருவரை மட்டும் சுமந்து செல்லும் இருசக்கர வாகனமல்ல காலம் நீயின்றி என்னால் வாழ இயலும் நானின்றியும் உன்னால் முடியும் மறுப்பதற்கில்லை இருப்பினும் என் பிரியத்தின் இடத்தை பிறிதொன்றால் எளிதாக நிரப்பிடுவேன் என்றாயே அன்று தான் முடிவு செய்தேன் சலனப்படுத்தாத என் அன்பின் இடம் உன்னுள் சமாதியாவதற்குள் வெற்று புன்னகையுடன் விலகிச் செல்வதென்று கார்த்திக் பிரகாசம்...

க்கா

க்கா... க்கா... கிளையில் வந்தமர்ந்தது ஓர் காகம் உறவினர்கள் வருகிறார்களா? விருந்தோம்பும் சூழலில் நானில்லை என்றேன் உந்தன் உறவினர்கள் வருவது எனக்கெப்படி ஐயா தெரியும் திறந்தே கண்டிராத கதவுகளையும் சாளரங்களையுடைய உன் செங்கல் குவி(டி)யலுக்கு நானென்ன காலிங் பெல்லா போன வாரம் தான் பித்ருக்களின் கும்பிடு தேதி முடிந்தது அமாவாசை அடுத்த வாரம் விஷேச நாளும் இன்றில்லை பிறகென்ன.? வயிற்றுடன் வன்மம் பசி பொறுக்குதில்லை பழி தீர்க்க பார்க்கிறது சில பருக்கைகளைத் தூக்கியெறி ஆற்றிக் கொள்கிறேன் இப்போதுதானே சொன்னேன் விருந்தோம்பும் சூழலில் நானில்லை என்று உனக்கும் பொருந்தும் அது மௌனத்துடன் கூரலகு முகத்தைக் கீழ் நோக்கித் திருப்பி பறக்க எத்தனிகையில் சொன்னேன் "கோபித்துக் கொண்டு அடுத்த வாரம் அமாவாசைக்கு வராமல் இருந்திராதே வடை பாயசம் உண்டு" மோனத்தின் திசையறியா மூலையில் தான்தோன்றித்தனமாகத் திரிந்திருக்கையில் உதிர்ந்த ஓர் இலை உடலை உரச விழித்தேன் கண்முன்னே காக்கைக்கான வடை பாயச படையல் காய்ந்த நரகலின் நிறத்தில் நாறிக் கொண்டிருந்தது கார்த்திக் பிரகாசம்...

கவலை

ஏமாந்ததில் இல்லை சுளுவில் நம்பியதில்தான்    பெரும் கவலை கார்த்திக் பிரகாசம்...

இரண்டு மரங்கள்

இறங்கிப் போகாத தன்மானம் சிடுசிடுக்கும் முகத்தில் விரைப்பான மிலிட்டரி மீசை கடுகு பொரியும் தொனியில் கொப்பளிக்கும் கோபம் வெள்ளையைத் தவிர வேறணியாத உடல் அந்த கருத்த உதடுகள் புன்னகைத்துப் பார்த்த சாட்சி இல்லை ஊருக்குள் நாளிதுவரை ஓட்ட பந்தய விளையாட்டில் பேரனிடம் தோற்றுச் சிரிக்கும் தாத்தாவைக் கண்டு இவ்வாறு புறம் பேசின அவரின் வயதையொத்த இரண்டு மரங்கள் கார்த்திக் பிரகாசம்...

விடுபட அல்ல

இசையில்  கவிதையில்  வலியைக்  கொணர்வதும் உணர்வதும் அதிலிருந்து விடுபடுவதற்காக அல்ல விட்டுச் சென்ற காலத்தோடு எட்டி நின்று வேடிக்கை பார்க்க கார்த்திக் பிரகாசம்...

அந்தவொன்றாக

புரிந்திடாதவர்களின் மத்தியில் பிணமாய் வாழும் மனிதன் ஒருவனிடம் உரையாடினேன் சமீபத்தில் பல வருடங்களாகிவிட்டன அவனுக்கு அழுகை வருவது நின்று செவிகள் கிடைக்காமல் செத்தேவிட்டன அவன் எண்ணங்கள் காதல் ~ அன்பு ~ பிரியம் போன்ற சொல்லாடல்கள் மக்கிப் போன கழிவாகி மனதிலோ சாக்கடை துர்நாற்றம் தூங்காமலே விடிந்துவிடும் இரவுகளும் விரக்தியிலேயே வடிந்துவிடும் பகல்களுமே அவனுக்கு வாய்த்தவை எல்லாவற்றையும் உதறிவிட்டுப் பறந்திட வேண்டியதுதானே என்றேன் யாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டுப் பறந்திட எந்தவொன்று தடுக்கிறதோ அதுவாகத்தான் நான் இருக்கிறேன் என்றான் கார்த்திக் பிரகாசம்...

மரணத்துக்கு அருகில்

மாலை ஐந்து மணி. மதுரை இரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸிற்காக காத்திருந்தேன். வழக்கமாக தாமதமாய் வரும் ரயில், அன்று வழக்கத்தை விட தாமதம். மிகவும் பழகிப் போன விஷயம் தான். ஆதலால் குறைபட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. மக்கள் வெள்ளம் நடைமேடையை தொப்பலாய் நனைத்து ஆங்காங்கு குட்டை போல் தேங்கியிருந்தது. தமிழ்நாட்டில் எத்திசையில், எந்த நேரத்தில் நின்றாலும் சென்னைச் செல்லும் கூட்டத்திற்கு மட்டும் குறைச்சலே இருக்காது என தோன்றியது. உடன் யாரும் இல்லாததால், ஓடை நீர் நனைக்காத காட்டுச் செடியை போல ஓரமாய் ஒதுங்கி அமர்ந்து கொண்டேன். பொருத்தமான உத்தேசமறிந்து அரசாங்கம் செயல்படுத்திய அதிமுக்கியத்துவமான திட்டங்களில் முதன்மையானது இரயில் நிலையங்களில் இலவச வைஃபை. சரியான நேரத்திற்கு வந்த பயணிகள் மட்டுமல்லாமல் தாமதமாக வந்த பயணிகளும், இன்னும் வராத இரயிலைக் கோபத்தில் திட்டி, ஒருகட்டத்தில் முற்றிலும் பொறுமையிழந்து அரசாங்கத்தை சபிப்பதை முழுமையாகத் தடுத்துக் கொண்டிருந்தது இந்த இலவச வைஃபை. கூட்டத்தோடு கூட்டமாக நானும் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு முகப்புத்தகத்தில் மேய்ந்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் தோள்பட்டையின்...
நடிகையின் கண்ணீரில் போலியாக வடிகிறது மெய்மை கார்த்திக் பிரகாசம்...
புதிதாய் அடையுமொன்றில் எப்போதோ இழந்ததை இனி ஒருபோதும் அடைய முடியாதொன்றை பாலையில் அவிழ்த்துவிட்ட மேய்ச்சல் மாடு கணக்காய் தேடித் திரியும் மனத்தில் கடும் பாறையாய் உறைந்து கிடக்கும் பருவத்தின் ஓர் பகுதி உடைவதில்லை அது உருகுவதுமில்லை கார்த்திக் பிரகாசம்...