சவுக்குமர நிழல் - ஜெயந்த் காய்கிணி தமிழில்: நஞ்சுண்டன் தொகுப்பு: சிவபிரசாத் மறைந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் அவர்களின் மொழிபெயர்ப்பில் சிவபிரசாத் தொகுத்துள்ள “பால் மீசை” தொகுப்பில் இடம் பெற்றுள்ளது கன்னட கவிஞரும், எழுத்தாளருமான 'ஜெயந்த் காய்கிணி' எழுதிய "சவுக்குமர நிழல்" என்னும் சிறுகதை. ஒரு மாதத்திற்கு முன்பு, இன்ன காரணம் என்றதறியாமல் கைதாகி சிறையிலிருக்கும் தன் கணவனை வேறு சிறைக்கு மாற்றுகிறார்கள் என்ற தகவலறிந்து அதிகாலையிலேயே எழுந்து அவனுக்கு மிகவும் பிடித்த அரிசி பாயசத்தோடு அவனது நினைவுகளையும் வேகாத வெயிலில் சுமந்து கொண்டு கால்கடுக்கக் கிளம்புகிறாள் மனைவி நாகம்மா. மலைக்கு அந்தப்பக்கமுள்ள சாலை வழியாகத்தான் காவல்துறை வாகனம் எப்படியும் சிறைக்குச் சென்றாக வேண்டும். கண்ணுக்கெட்டிய தொலைவின் எல்லையில் கானலில் நெளியும் சாலையில் ஒரு கண்ணைத் தைத்துக் கொண்டே நடக்கிறாள். ஊரார் பலரும் அவ்வழியாகக் கடந்து செல்கின்றனர். கேட்பவர்களிடம் ஏதேனுமொரு பொய்யை அங்கிருத்தலுக்கான காரணமாகக் கூறுகிறாள். நற்மனிதரான வாத்தியார் ஒருவர் வருகிறார். அவரிடம் மட்டும் உண்மையை உடைக்கிறாள். “உன்...