நண்பனின் குழந்தைக்கு மூன்று வயது கூட முழுதாக முடியவில்லை. ஆனால் அவன் இப்பொழுதே ஒரு பெருங்கவலையில் ஆழ்ந்துவிட்டான். அதற்கான காரணம் போன வாரம் ஊரில் கொஞ்சம் செல்வாக்கான பள்ளிக்கு, தன் குழந்தையின் பள்ளிச் சேர்க்கைக்காக விசாரிக்க சென்றிருக்கிறான். அவர்கள் அந்த மூன்று வயது குழந்தையிடம் நேர்காணலை நடத்தி முடித்துவிட்டு தங்கள் பள்ளியின் மிகக் குறைவான கட்டணத்தைப் பற்றி விவரித்திருக்கின்றனர். கட்டணத்தைக் கேட்டுவிட்டு நண்பன் ஆடிவிட்டான். ப்ரீ.கேஜிக்கு கட்டணம் முப்பத்தைந்தாயிரமாம். மேலும் சுற்று வட்டாரத்திலேயே அந்த பள்ளியின்தான் கட்டணம் மிக குறைவாம்.
போகிற போக்கை பார்த்தால் பட்டப் படிப்பிற்கல்ல பள்ளிப் படிப்பிற்கே தவிடு திங்க வேண்டும் போலிருக்கிறதே என்று புலம்ப ஆரம்பித்துவிட்டான். அவனின் மனைவிக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் இந்தக் கட்டண விவரத்தைக் கேட்டதில் இருந்து அந்த ஆசையை அடியோடு விட்டுவிட்டாளாம். பெற்ற இந்த "குழந்தையை மட்டுமாவது ஒழுங்காகப் படிக்க வைத்தால் போதும்" என்று சலித்துக் கொள்கிறாளாம்.
இன்னும் "ஒருவருடம் கழித்து குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டால் உனக்கு எந்த பாரமும் இருக்காது. உன் மனைவியின் ஆசைப்படி இன்னோரு குழந்தையையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாமே" என்றேன்.
அரசுப் பள்ளியில் படித்தால் நல்ல பழக்கங்கள் வராது. சேர்க்கை சரியில்லாமல் போய்விடும்.வாழ்க்கைத் தடம் மாற வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள். ஆங்கில அறிவு அறவே இருக்காது.வேலைக் கிடைப்பது கடினம். வேலைக் கிடைக்காவிட்டால் சரியான வரன் அமையாது. இது எல்லாவற்றிக்கும் மேலாக அரசுப் பள்ளியில் படிக்க வைத்தால் நம் அந்தஸ்த்து என்னாவது என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போய் கடைசியில் விடாப்பிடியாக மறுத்துவிட்டான்.
கடன் வாங்கி சொத்தை அழித்து நிம்மதியை விற்றாவது தனியார் பள்ளியில் படிக்க வைப்பனே தவிர அரசுப் பள்ளியில் சேர்க்க மாட்டேன் என்று உறுதியாக நிற்கிறான்.
இன்றைய தலைமுறை சமூக அந்தஸ்தை மூச்சுக் காற்றாக சுவாசிக்கும் கலாச்சாரத்தில் சீராக சுவாசிப்பதைப் போல் வெளியே காட்டிக் கொண்டு உண்மையில் சுவாசிக்க முடியாமல் உள்ளே திணறிக் கொண்டிருக்கிறது.
போலி அந்தஸ்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் சொந்தங்களிடமும் பெருமைக்காட்டி கொள்வதற்காகவும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளின் வாசல்களில் விடிவதற்கு முன்னே போய் நிற்கும் நிலை மாறும் வரை இது போன்ற பகல் கொள்ளைகளை தடுக்கவே முடியாது.
போலி அந்தஸ்தும், நுகர்வு கலாச்சாரமும் இன்றைய தலைமுறையின் பொருளாதாரத்தைத் திக்கற்ற வழியில் செலுத்திக் கொண்டிருக்கிறது.
கார்த்திக் பிரகாசம்...
போகிற போக்கை பார்த்தால் பட்டப் படிப்பிற்கல்ல பள்ளிப் படிப்பிற்கே தவிடு திங்க வேண்டும் போலிருக்கிறதே என்று புலம்ப ஆரம்பித்துவிட்டான். அவனின் மனைவிக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் இந்தக் கட்டண விவரத்தைக் கேட்டதில் இருந்து அந்த ஆசையை அடியோடு விட்டுவிட்டாளாம். பெற்ற இந்த "குழந்தையை மட்டுமாவது ஒழுங்காகப் படிக்க வைத்தால் போதும்" என்று சலித்துக் கொள்கிறாளாம்.
இன்னும் "ஒருவருடம் கழித்து குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டால் உனக்கு எந்த பாரமும் இருக்காது. உன் மனைவியின் ஆசைப்படி இன்னோரு குழந்தையையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாமே" என்றேன்.
அரசுப் பள்ளியில் படித்தால் நல்ல பழக்கங்கள் வராது. சேர்க்கை சரியில்லாமல் போய்விடும்.வாழ்க்கைத் தடம் மாற வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள். ஆங்கில அறிவு அறவே இருக்காது.வேலைக் கிடைப்பது கடினம். வேலைக் கிடைக்காவிட்டால் சரியான வரன் அமையாது. இது எல்லாவற்றிக்கும் மேலாக அரசுப் பள்ளியில் படிக்க வைத்தால் நம் அந்தஸ்த்து என்னாவது என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போய் கடைசியில் விடாப்பிடியாக மறுத்துவிட்டான்.
கடன் வாங்கி சொத்தை அழித்து நிம்மதியை விற்றாவது தனியார் பள்ளியில் படிக்க வைப்பனே தவிர அரசுப் பள்ளியில் சேர்க்க மாட்டேன் என்று உறுதியாக நிற்கிறான்.
இன்றைய தலைமுறை சமூக அந்தஸ்தை மூச்சுக் காற்றாக சுவாசிக்கும் கலாச்சாரத்தில் சீராக சுவாசிப்பதைப் போல் வெளியே காட்டிக் கொண்டு உண்மையில் சுவாசிக்க முடியாமல் உள்ளே திணறிக் கொண்டிருக்கிறது.
போலி அந்தஸ்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் சொந்தங்களிடமும் பெருமைக்காட்டி கொள்வதற்காகவும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளின் வாசல்களில் விடிவதற்கு முன்னே போய் நிற்கும் நிலை மாறும் வரை இது போன்ற பகல் கொள்ளைகளை தடுக்கவே முடியாது.
போலி அந்தஸ்தும், நுகர்வு கலாச்சாரமும் இன்றைய தலைமுறையின் பொருளாதாரத்தைத் திக்கற்ற வழியில் செலுத்திக் கொண்டிருக்கிறது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment