Skip to main content

எப்படி புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் விழிகளை உரசவில்லை.  அது ஏனொ தெரியவில்லை ரயிலில் முன்பதிவு இருக்கைக் கிடைக்கும் போதெல்லாம் மட்டும் அவ்வளவு எளிதில் உறக்கம் விழிகளோடு வந்து உறவாட மறுக்கிறது. ஆதலால் வெறுமனே உடலைப் படுக்கையில் கிடத்தியிருந்தேன்.

எதிரமர்வில் ஒரு குழந்தைத் திடிரென வீழென்று அழ ஆரம்பித்தது. அதன் தாய் உடனே எழுந்து குழந்தையின் அழுகையை நிறுத்த சகல முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் குழந்தையிடம் அழுகையை நிறுத்தும் உத்தேசமேதும் தென்படவில்லை.

மற்ற பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததால், தனியாளாகக் குழந்தையைச் சமாதானப்படுத்த தன் முழு சக்தியையும் பயன்படுத்திப் போராடிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்.. சுற்றிலும் படுத்திருந்த ஆண்களிடமிருந்து ஒரு அசைவுமில்லை. மேல் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர் கூட எழுந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் இரண்டு தனியறை தாண்டியிருந்த நாற்பது வயதைக் கடந்த ஒரு பெண் பாதி தூக்கத்தில் எழுந்து வந்தார். அந்தப் பெண்ணிடமிருந்து குழந்தையை வாங்கி ஏதேதோ கொஞ்சினார். விளையாட்டு காட்டினார். குழந்தைப் பாஷையில் பேசினார். ஆறுதல் சொன்னார். வேடிக்கைக் காட்டினார். கடைசியில் குழந்தைச் சமாதானமாகி அழுகையை நிறுத்தியது. இரு படுக்கைகளுக்கு இடையே கட்டப்பட்டிருந்த தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு சிரித்த முகத்துடன் விடைப் பெற்றார் அந்தப் பக்கத்துத் தனியறை பெண்.

அருகாமையிலேயே ஆண்கள் சலனமேயில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கையில் சகப் பெண்ணுக்கு/தாய்க்கு ஆதரவுத் தர இரண்டு தனியறை கடந்திருந்தும், தாயுள்ளம் கொண்ட ஒரு பெண்தான் அழைக்காமலேயே வந்து நிற்கிறார். ஒரு தாயின் கஷ்டம் இன்னொரு தாய்க்குத்தான் தெரியும் போலிருக்கிறது. ஏனென்றால் இச்சம்பவம் நடக்கும்போது நேரம் இரவு மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

கருவைச் சுமப்பதும், குழந்தையைப் பெற்று வளர்த்தெடுப்பதும் தவம்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...