பயணம் மனிதர்களால் நிரம்பும் போது தொலைவானது நினைவுகளால் நிரப்பப்படுகிறது..
சென்னையிலிருந்து நண்பர்களுடன் கன்னியாகுமரி பயணம் தொடங்கியதில் இருந்து பரிச்சியமில்லாத பழகாத பல முகங்கள் தங்கள் நினைவுகளைக் கண்ணாடியில் விழுந்த பிம்பத்தைப் போல எளிதாக பதித்துச் சென்றனர்.
தென்காசி பேருந்து நிலையத்தில் குற்றாலம் செல்வதற்கானப் பேருந்தைக் காட்டிய சாயம் போன வெள்ளை வேட்டிக்காரர். பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஐந்தருவிக்கு ஓயாமல் பேசிக் கொண்டே அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர். அங்கிருந்து காசி விசுவநாதர் கோவிலுக்கு கூட்டிச் சென்ற இன்னொரு ஆட்டோ ஓட்டுநர். அதிக நபர்களை அமரவைத்து சென்றதால் ஓட்டுநரிடம் கைப்பேசியையும் ஓட்டுநர் உரிமத்தையும் பிடுங்கி "தினக்கூலிகளிடம் மட்டும் தன் கடமையை செவ்வனே செய்யும்" தோரணைக் கொண்ட காவலர். அந்த பரிதாப நிலைமையிலும் எங்களை நல்லன்புடனும் சிரித்த முகத்துடனும் வழியனுப்பிய அந்த ஓட்டுநரை மறக்கவே முடியாது.
இலவச சிற்றுண்டி தான் என்றாலும்கூட சொந்த பந்ததைக் கவனிப்பது போல் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்ட "அந்த ஹோட்டலின் கடைநிலை ஊழியர்" என்று பட்டியலும் கண்ட மனிதர்களின் எண்ணிக்கையும் நீண்டுக் கொண்டே செல்கிறது.
இவற்றுக்கெல்லாம் உச்சமாக ரயிலில் சந்தித்த அறுபது வயதைக் கடந்த தம்பதி. திருநெல்வேலியில் ஏறினார்கள். அறுபது வயதைக் கடந்திருந்தும் நேற்றுதான் திருமணமானது போல் அவர்களுக்குள் அப்படியொரு அன்னோன்யம். அந்த ஐயா அந்த அம்மாவிற்கு இட்லி சாம்பாரை தட்டில் எடுத்து கொடுக்கிறார். அந்த அம்மா ஐயாவின் கலைந்திருக்கும் முடிகளை கோதிவிடுகிறார். உடனே அவர் தன்னுடைய மெல்லிய உடலை கூச்சத்தால் நெளிக்கிறார்.
அவர்களது பேச்சின் மணம், நிலத்தை முத்தமிட்ட முதல் மழைத்துளியின் பரவசத்தை சற்றே பின்னுக்கு தள்ளியதாய்த் தோன்றியது. ஒவ்வொரு வார்த்தையிலும் அக்கறை. எங்கள் முகங்களில் தங்கள் பேரனையும், பேச்சினினில் அண்ணன் மகனையும், பாவனையில் பக்கத்துக்கு வீட்டு பண்ணையார் மகனையும் அடையாளப்படுத்தி தொடர்புபடுத்தினர்.
ஆங்காங்கே வந்த ஆங்கிலத்தையும் அரசியலையும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை. நிகழும் அரசியல் மாற்றங்களைக் கண்டு மனம் குழம்புவதனால், படித்து மட்டும் நம்மால் என்ன செய்துவிட முடியும் என்ற ஏமாற்ற இயலாமை எண்ணத்தால் இத்தனை நாள் பின்பற்றி வந்த ஜூனியர் விகடனையும், நக்கீரனையும் இனி படிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறியது அவர்கள் அரசியல் அறிவின் ஆழத்தை அணிந்துரைத்தது. பொதுவாக எட்டரை மணிக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கம் கொண்ட அவர்கள் நாங்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக பத்து மணிவரை உறங்காமல் இடம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை ஐந்து மணிக்கு தாம்பரத்தில் இறங்கும் போது எங்களை எழுப்பிவிட்டு, "தென்காசி பக்கம் வந்தா அப்டியே நம்ம வீட்டுக்கு வாங்க" என்று சொல்லிவிட்டு சிரித்த முகத்துடன் இறங்கினர். நான் அவர்களின் பெயரைக் கேட்கவில்லை. அவர்களும் என் பெயரைக் கடைசிவரை கேட்கவில்லை. ஆனால் அவர்களின் வார்த்தைகளில் அன்பு இறையோடி இருந்தது. கண்களில் கலங்கம் இல்லாத பாசத்தைக் காண முடிந்தது. ஆதலால் அவர்களது பெயரையும் விலாசத்தையும் கேட்டு அதைக் கெடுத்துவிட விரும்பவில்லை.
பெயர் தெரியாத அன்பு பாசத்தையெல்லாம் காண்பது அரிதினும் அரிது.
பயணம் என்பது தொலைவைக் கடப்பது அல்ல. தொலைவை நிரைப்பது. எதைக் கொண்டு நிரப்புகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது. பயணம் மனிதர்களால் நிரம்பும் போது தொலைவானது நினைவுகளால் நிரப்பப்படுகிறது..
கார்த்திக் பிரகாசம்...
சென்னையிலிருந்து நண்பர்களுடன் கன்னியாகுமரி பயணம் தொடங்கியதில் இருந்து பரிச்சியமில்லாத பழகாத பல முகங்கள் தங்கள் நினைவுகளைக் கண்ணாடியில் விழுந்த பிம்பத்தைப் போல எளிதாக பதித்துச் சென்றனர்.
தென்காசி பேருந்து நிலையத்தில் குற்றாலம் செல்வதற்கானப் பேருந்தைக் காட்டிய சாயம் போன வெள்ளை வேட்டிக்காரர். பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஐந்தருவிக்கு ஓயாமல் பேசிக் கொண்டே அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர். அங்கிருந்து காசி விசுவநாதர் கோவிலுக்கு கூட்டிச் சென்ற இன்னொரு ஆட்டோ ஓட்டுநர். அதிக நபர்களை அமரவைத்து சென்றதால் ஓட்டுநரிடம் கைப்பேசியையும் ஓட்டுநர் உரிமத்தையும் பிடுங்கி "தினக்கூலிகளிடம் மட்டும் தன் கடமையை செவ்வனே செய்யும்" தோரணைக் கொண்ட காவலர். அந்த பரிதாப நிலைமையிலும் எங்களை நல்லன்புடனும் சிரித்த முகத்துடனும் வழியனுப்பிய அந்த ஓட்டுநரை மறக்கவே முடியாது.
இலவச சிற்றுண்டி தான் என்றாலும்கூட சொந்த பந்ததைக் கவனிப்பது போல் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்ட "அந்த ஹோட்டலின் கடைநிலை ஊழியர்" என்று பட்டியலும் கண்ட மனிதர்களின் எண்ணிக்கையும் நீண்டுக் கொண்டே செல்கிறது.
இவற்றுக்கெல்லாம் உச்சமாக ரயிலில் சந்தித்த அறுபது வயதைக் கடந்த தம்பதி. திருநெல்வேலியில் ஏறினார்கள். அறுபது வயதைக் கடந்திருந்தும் நேற்றுதான் திருமணமானது போல் அவர்களுக்குள் அப்படியொரு அன்னோன்யம். அந்த ஐயா அந்த அம்மாவிற்கு இட்லி சாம்பாரை தட்டில் எடுத்து கொடுக்கிறார். அந்த அம்மா ஐயாவின் கலைந்திருக்கும் முடிகளை கோதிவிடுகிறார். உடனே அவர் தன்னுடைய மெல்லிய உடலை கூச்சத்தால் நெளிக்கிறார்.
அவர்களது பேச்சின் மணம், நிலத்தை முத்தமிட்ட முதல் மழைத்துளியின் பரவசத்தை சற்றே பின்னுக்கு தள்ளியதாய்த் தோன்றியது. ஒவ்வொரு வார்த்தையிலும் அக்கறை. எங்கள் முகங்களில் தங்கள் பேரனையும், பேச்சினினில் அண்ணன் மகனையும், பாவனையில் பக்கத்துக்கு வீட்டு பண்ணையார் மகனையும் அடையாளப்படுத்தி தொடர்புபடுத்தினர்.
ஆங்காங்கே வந்த ஆங்கிலத்தையும் அரசியலையும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை. நிகழும் அரசியல் மாற்றங்களைக் கண்டு மனம் குழம்புவதனால், படித்து மட்டும் நம்மால் என்ன செய்துவிட முடியும் என்ற ஏமாற்ற இயலாமை எண்ணத்தால் இத்தனை நாள் பின்பற்றி வந்த ஜூனியர் விகடனையும், நக்கீரனையும் இனி படிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறியது அவர்கள் அரசியல் அறிவின் ஆழத்தை அணிந்துரைத்தது. பொதுவாக எட்டரை மணிக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கம் கொண்ட அவர்கள் நாங்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக பத்து மணிவரை உறங்காமல் இடம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை ஐந்து மணிக்கு தாம்பரத்தில் இறங்கும் போது எங்களை எழுப்பிவிட்டு, "தென்காசி பக்கம் வந்தா அப்டியே நம்ம வீட்டுக்கு வாங்க" என்று சொல்லிவிட்டு சிரித்த முகத்துடன் இறங்கினர். நான் அவர்களின் பெயரைக் கேட்கவில்லை. அவர்களும் என் பெயரைக் கடைசிவரை கேட்கவில்லை. ஆனால் அவர்களின் வார்த்தைகளில் அன்பு இறையோடி இருந்தது. கண்களில் கலங்கம் இல்லாத பாசத்தைக் காண முடிந்தது. ஆதலால் அவர்களது பெயரையும் விலாசத்தையும் கேட்டு அதைக் கெடுத்துவிட விரும்பவில்லை.
பெயர் தெரியாத அன்பு பாசத்தையெல்லாம் காண்பது அரிதினும் அரிது.
பயணம் என்பது தொலைவைக் கடப்பது அல்ல. தொலைவை நிரைப்பது. எதைக் கொண்டு நிரப்புகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது. பயணம் மனிதர்களால் நிரம்பும் போது தொலைவானது நினைவுகளால் நிரப்பப்படுகிறது..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment