Skip to main content

சுண்டல் விற்பவருக்குள் சூப்பர் ஸ்டார்...

அடித்தட்டு மக்களின் மனதில் அவ்வளவு எளிதில் யாராலும் நுழைந்துவிட முடியாது. அப்படியே நுழைந்துவிட்டாலும் அன்றாட காட்சிகளின் மனதில் நீடித்து நிற்பதொன்றும் எளிதான காரியமல்ல.அந்தக் குடுப்பனை அனைவருக்கும் கிட்டாது.

குற்றால ஐந்தருவியில் ஒரு ஓரமாக ஒழுகிக் கொண்டிருந்த நீரோடையில் உடலை நனைத்துக் கொண்டிருந்த போது மிதிவண்டியை தள்ளிக் கொண்டு "சுண்டல் விற்பவர்" அங்கே குழுமியிருந்த சிறு சிறு குழுக்களிடையே அலைந்து கொண்டிருந்தார்.

கையில் ரஜினி காந்தின் படத்தை பச்சைக் குத்தியிருந்தார்.குளித்து முடித்தபின் மெதுவாக பேச்சு கொடுத்த போது, "எங்க இருந்து வரீங்க" என்றார்.

சென்னை" என்றோம்.

சென்னையில "பாட்ஷா படம்" ரிலீஸ் ஆயிருக்கா. படம் எப்பிடி போகுது. "எனக்கு ரஜினி'னா உசுரு. சாவறதுக்குள்ள ஒரு தடவையாவது அந்த மனுஷன பாத்துடனும். அதான் என்னோட ஆச" என்று இடைவெளியே இல்லாமல் வார்த்தைகளை உணர்ச்சிகளோடு கொட்டிவிட்டு கிளம்பினார்.

மூப்பானாலும், காலங்கள் கண்காணா தூரத்திற்கு சென்றாலும் அடித்தட்டு மக்களை இழுத்து வைத்திருக்கும் காந்த சக்திக்கு இன்னும் அந்த மனிதனிடமிருந்து விலகிக் கொள்ள மனம் ஒப்பவில்லை போலும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...