பெரியளவில் பக்தி இல்லாவிட்டாலும் முதல்முறை என்பதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது நண்பர்களுடனான திருப்பதி பயணம். அதிகாலையில் தி.நகரில் எங்களின் ஆஸ்தான டீக்கடையின் டீயுடன் பயணத்தைத் தொடங்கினோம்.மூன்றரை மணிநேர ரயில் பயணத்திற்கு பிறகு திருப்பதியை அடைந்தோம்.
நண்பர்களில் ஐந்துபேர் மட்டும் படிக்கட்டில் நடந்து செல்லலாம் என்று முடிவு செய்து மீதியானர்வர்களுக்கு பேருந்து வைத்துவிட்டு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.
அலுப்பரியில் இருந்து மேலே செல்ல மொத்தம் 3550 படிக்கட்டுக்கள். ஒன்பது கிலோமீட்டர் தொலைவு. முதல் 500 படிக்கட்டுக்களை அடைந்ததும் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டோமோ என்று சிறிய கவலை எட்டி பார்த்தது. ஆனால் அடுத்த 500 படிக்கட்டுக்களை கடந்த நேரம் கீழே இறங்கும் போதும் படிக்கட்டுக்களிலேயே இறங்கிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டோம்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது பாரபட்சம் இல்லாமல் படியேறிக் கொண்டிருந்தார்கள். அனைவர் முகத்திலும் ஏதேதோ முணுகல்களாய் வேண்டுதல்களும் கவலைகளும் ஏதொரு திருப்தியும் ஒருசேர கலந்தோடியிருப்பதை காண முடிந்தது. படியேறயேற வழியெங்கிலும் கடைகள். குடிநீர் குழாய்கள். குறிப்பிட்ட இடைவெளிகளில் கழிப்பறைகள். சுத்தமான கழிப்பறைகள். தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள். சாப்பாட்டு மற்றும் தின்பண்ட கடைகளில் நியாமான விலை. ஆதலால் செலவு பார்க்காமல் நிறைய தின்பண்டங்களை சாப்பிடவும், நீர் ஆகாரங்களை கொள்ளவும் முடிந்தது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு படியேறும் சிரமமே தெரியாமல் நடந்தோம். ஓய்வு நேரத்தையும் சேர்த்து நான்கு மணிநேரங்கள் ஆகியிருந்தது. உச்சியை அடையும்போது நண்பர்கள் எல்லோர் முகத்திலும் எதையோ சாதித்த ஒரு திருப்தி.
உச்சியை அடைந்ததும் ஒரு டீயைக் குடித்துவிட்டு முன்பதிவு செய்யப்பட்ட தேவஸ்தான அறைக்குச் சென்றோம். இரண்டு கட்டில் மற்றும் கழிப்பறையுடன் கூடிய நன்கு வசதியான அறை. அந்த அறையின் ஒருநாள் கட்டணம் ஐம்பது ரூபாய். மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
குளித்து முடித்துவிட்டு தரிசனத்திற்கு சென்றோம். இரண்டு மணிநேர காத்திருப்பிருக்கு பிறகு ஏழுமலையனாய் தரிசித்தோம்.
பொதுவாக சாமியை புகைப்படத்தில் பார்ப்பதற்கும் நேரில் கோவிலில் பார்ப்பதற்கும் சிறுசிறு வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் ஏழுமலையானைப் பொறுத்தவரை எந்த வித்தியாசமும் தெரியவில்லை. புகைப்படத்தில் பார்த்தது போலவே தான் இருந்தது கோவிலிலும். தரிசனத்தை முடித்த பிறகு அடுத்த முக்கிய வேலையான சாப்பிட்டிற்காக அன்னதானக் கூடத்திற்கு சென்றோம். சாதம் சாம்பார் பொரியல் ரசம் மோர் என வீட்டிற்கு வந்த விருந்தினரைக் கவனிப்பது போல் அப்படியொரு கவனிப்பு.
இரவு தங்கிவிட்டு காலை மீண்டும் படியிலேயே கீழே இறங்கிவிட்டோம்.
தூய்மையான சுற்றுப்புறங்கள், இலவச குடிநீர், போதுமான அளவில் கழிப்பறைகள், இலவச அன்னதானம், நியாமான விலையில் தின்பண்டங்கள் போன்ற விஷயங்களுக்காகவே திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு ஒரு சபாஷ் போடலாம்..
கார்த்திக் பிரகாசம்...
நண்பர்களில் ஐந்துபேர் மட்டும் படிக்கட்டில் நடந்து செல்லலாம் என்று முடிவு செய்து மீதியானர்வர்களுக்கு பேருந்து வைத்துவிட்டு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.
அலுப்பரியில் இருந்து மேலே செல்ல மொத்தம் 3550 படிக்கட்டுக்கள். ஒன்பது கிலோமீட்டர் தொலைவு. முதல் 500 படிக்கட்டுக்களை அடைந்ததும் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டோமோ என்று சிறிய கவலை எட்டி பார்த்தது. ஆனால் அடுத்த 500 படிக்கட்டுக்களை கடந்த நேரம் கீழே இறங்கும் போதும் படிக்கட்டுக்களிலேயே இறங்கிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டோம்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது பாரபட்சம் இல்லாமல் படியேறிக் கொண்டிருந்தார்கள். அனைவர் முகத்திலும் ஏதேதோ முணுகல்களாய் வேண்டுதல்களும் கவலைகளும் ஏதொரு திருப்தியும் ஒருசேர கலந்தோடியிருப்பதை காண முடிந்தது. படியேறயேற வழியெங்கிலும் கடைகள். குடிநீர் குழாய்கள். குறிப்பிட்ட இடைவெளிகளில் கழிப்பறைகள். சுத்தமான கழிப்பறைகள். தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள். சாப்பாட்டு மற்றும் தின்பண்ட கடைகளில் நியாமான விலை. ஆதலால் செலவு பார்க்காமல் நிறைய தின்பண்டங்களை சாப்பிடவும், நீர் ஆகாரங்களை கொள்ளவும் முடிந்தது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு படியேறும் சிரமமே தெரியாமல் நடந்தோம். ஓய்வு நேரத்தையும் சேர்த்து நான்கு மணிநேரங்கள் ஆகியிருந்தது. உச்சியை அடையும்போது நண்பர்கள் எல்லோர் முகத்திலும் எதையோ சாதித்த ஒரு திருப்தி.
உச்சியை அடைந்ததும் ஒரு டீயைக் குடித்துவிட்டு முன்பதிவு செய்யப்பட்ட தேவஸ்தான அறைக்குச் சென்றோம். இரண்டு கட்டில் மற்றும் கழிப்பறையுடன் கூடிய நன்கு வசதியான அறை. அந்த அறையின் ஒருநாள் கட்டணம் ஐம்பது ரூபாய். மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
குளித்து முடித்துவிட்டு தரிசனத்திற்கு சென்றோம். இரண்டு மணிநேர காத்திருப்பிருக்கு பிறகு ஏழுமலையனாய் தரிசித்தோம்.
பொதுவாக சாமியை புகைப்படத்தில் பார்ப்பதற்கும் நேரில் கோவிலில் பார்ப்பதற்கும் சிறுசிறு வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் ஏழுமலையானைப் பொறுத்தவரை எந்த வித்தியாசமும் தெரியவில்லை. புகைப்படத்தில் பார்த்தது போலவே தான் இருந்தது கோவிலிலும். தரிசனத்தை முடித்த பிறகு அடுத்த முக்கிய வேலையான சாப்பிட்டிற்காக அன்னதானக் கூடத்திற்கு சென்றோம். சாதம் சாம்பார் பொரியல் ரசம் மோர் என வீட்டிற்கு வந்த விருந்தினரைக் கவனிப்பது போல் அப்படியொரு கவனிப்பு.
இரவு தங்கிவிட்டு காலை மீண்டும் படியிலேயே கீழே இறங்கிவிட்டோம்.
தூய்மையான சுற்றுப்புறங்கள், இலவச குடிநீர், போதுமான அளவில் கழிப்பறைகள், இலவச அன்னதானம், நியாமான விலையில் தின்பண்டங்கள் போன்ற விஷயங்களுக்காகவே திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு ஒரு சபாஷ் போடலாம்..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment