Skip to main content
     புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "அக்னி பரிட்சை" என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு.சீமான் அவர்களின் பதில்களும்,
கேள்விகளும் மனதுக்குள் ஆழமான தாக்கத்தையும், கேட்பாரில்லாமல் கிடந்த கேள்விகளையும் மனதுக்குள் கேட்டுவிட்டன...

**கல்வியும், மருத்துவமும் தானே மக்களின் மிக முக்கியமான தேவைகள்.
பிறகு ஏன் அரசாங்கம் ஆடு மாடு மிக்சி கிரைண்டர் என்று பொருள்களை
இலவசமாக தருகின்றது ஆனால் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக தரவில்லை...??

**மத உணர்வும், சாதி உணர்வும் நம் மொழி உணர்வை, தமிழன் என்ற இன உணர்வை மறக்கடிக்க வைத்துவிட்டனவா...??

**மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தண்ணீரையே காசு கொடுத்து
வாங்கி குடிக்கும் அளவிற்கு நம் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கிச்
சென்று கொண்டிருக்கிறதா...??

**வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு.. மிக பெருமையான விடயம் தான்..
ஆனால் வந்தவர்கள் வசதியாக வாழ்கின்றனர்; வாழ வைத்தவர்கள் வாடகை
வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரே.. வந்தவர்களையெல்லாம் வாழ
வைத்தது நம் குற்றமல்ல ஆனால் வந்தவர்களையெல்லாம் ஆள வைத்தது
நம் குற்றமோ...??

**ஒருவன் ஓட்டு போட அடிப்படை வயது 18. இந்தியன் குடியியல் தேர்வுக்கு
தகுதி வயது 21. அதே ஒருவன் தேர்வில் வெற்றி பெற்று பொறுப்பு ஏற்று
கொள்ள தகுதி வயது 23.. அந்த ஒருவன் தேர்தல் இயக்குனர் கூட ஆகலாம்
அந்த வயதில். ஆனால் ஒருவன் தேர்தலில் போட்டியிட மட்டும் அடிப்படை
தகுதி வயது 25...!!!

** வேளாண்மையை அரசு தொழிலாக மாற்றி விட்டால் விவசாயம் மீண்டும்
புத்துயிர் பெறுமா..? ஆடு மாடு மேய்ப்பதும் அரசாங்க வேலை அதற்கு
அரசாங்க சம்பளம் என்று அறிவித்து விட்டால் அச்செயலை கேவலமாக
நினைக்கும் பெரும்பான்மையான இளைஞர்களின் எண்ணம் மாறுமா..??

திரு.சீமான் அவர்களின் கருத்துக்களில் இருந்து எழுந்த பல்வேறு கேள்விகள்..

இந்த கேள்விகளும், இன்னும் நிறைய கேள்விகள் இனிவரும்
மாற்றத்திற்கான கேள்விகளா...? மாற்றம் வருமா..? மாற்றம் வந்தாவது
ஏற்றம் ஏற்படுமா..?

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...