Skip to main content

Posts

Showing posts from November, 2015
இரக்கமில்லா மழையினால் இறக்கங்களிலெல்லாம் மழை வெள்ளம்...!!! கார்த்திக் பிரகாசம்...
அவள் அப்படியொரு அழகு...!!! அவளுக்கு அவ்வளவு அறிவு...!!! அவள் அழகில் அடங்காத அறிவு தான் உண்டோ...?? அவள் அறிவில் வியக்காத அழகு தான் உண்டோ...?? அவள் அறிவினில் அழகானவள்...!!! அவள் அழகிலும் ஓர் அறிவானவள்...!!! கார்த்திக் பிரகாசம்...
மகனுக்கு அமெரிக்காவில் வேலை... இத்தனை நாளாய் அப்பாவிற்கு ரொம்பத் தான் பெருமை... ஆதலால் தான் என்னவோ, இன்று அவர் இறந்து கிடக்கும் போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட அவரது மகனால் வர இயலவில்லை... தன் மகன் அமெரிக்காவிற்குச் சென்று  வேலை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்ட தந்தை, தான் இறக்கும் போது தன்னோடு மகன் இருக்க வேண்டும் அல்லது தன் இறுதி ஊர்வலத்திற்கு அவன் வர வேண்டுமென்று ஆசைப்படவில்லை போலிருக்கிறது.. தான் பிறந்த போது தன்னை முதல்முறையாக தொட்டிலில் தூக்கிப் போட்ட தந்தையை, அவர் இறந்த போது கடைசியாக சுடுகாட்டில் தூக்கி போட மகனால் முடியவில்லை... மகன் சம்பாதித்து அனுப்பிய பணமெல்லாம் வீட்டில் உள்ள பீரோ முழுவதும் நிறைந்திருக்கின்றன. என்ன..! பாவம்..! அவற்றிற்கு அழத் தெரியவில்லை... மகனோ அமெரிக்காவில் அப்பாவை நினைத்து அழுது கதறுகிறான்.. அவரது பாதங்களை தன் தலையில் வைத்து தொழத் துடிக்கிறான்.. ஆனால் என்ன அவனின் கண்ணீர்த் துளிகளைக் கண்டுக்கொள்ள கூட அங்கு ஆள் இல்லை... உடனடியாக கிளம்ப பதறுகிறான். அவன் நேரம், விமானத்தில் இடம் கிடைக்கவில்லை.. இரண்டு நாட்கள் கழித்துத் தான் கிளம்ப முடியும். மகன் வரும் ...

திருவண்ணாமலை பயணம்...!!!

     முதல் முறையாய் திருவண்ணமலைக்கு நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்தேன்.. இதற்கு முன் சென்றதில்லை என்பதால் கிளம்புவதற்கு முன் இருந்தே கோயிலைப் பற்றியும் மற்றும் கிரிவலம் பற்றியும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே இருந்தன...     காலை 3 30 மணிக்குக் கோயிலை அடைந்ததும் 4 15 க்கு தொடங்கிய கிரிவலத்தை சரியாக 6 30 மணிக்கு முடித்துவிட்டோம்..    கிரிவல பாதை மொத்தம் 14 கிமீ.. வழி நெடுகிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஏராளமான பக்தர்கள், தீபத்தை தரிசித்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தனர்..    கிரிவல பாதை பெரும்பாலும் மரங்களால் சூழ்ந்திருந்ததால் ரம்மியான சூழல் நிலவியது. அதிலும் அங்கு வீசும் காற்றில் நிரம்பியிருந்த மூலிகை மணத்தை, சுவாசிக்க சுவாசிக்க ஒரு புது விதமான புத்துணர்ச்சி உண்டாகியது..    நடக்க நடக்க நீண்டு கொண்டே இருந்த பாதைச் சுற்றி முடிக்கும் வரை ஒரு போதும் அலுப்பை ஏற்படுத்தவில்லை. எப்பொழுது முடியும் என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. மாறாக அது முடிவைத் தேடாத பயணம் போல அமைந்தது..    மொத்தத்தில்...

நவம்பர் 22...

  வேலைத் தேடி அவ்வப்போது வந்து போன நாட்கள் போக, சென்னையில் வேலைக்கென்று சேர்ந்து இன்றோடு முழுதாக மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன..   வேலை முக்கியமா..? இல்லை சம்பளம் முக்கியமா..? என்ற யோசனைக்குக் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல், வேலை தான் முக்கியம் என்று ஒருமனதாக முடிவெடுத்து, நவம்பர் 22,2012 அன்று ரூபாய் 6500 சம்பளத்திற்கு ஒரு சிறிய கம்பெனியில் சேர்ந்த நினைவுகள் மயில் தோகையைப் போல மனதில் விரிகின்றன... கார்த்திக் பிரகாசம்...
சந்தேகத்தின் மீதான அதித நம்பிக்கையும் நம்பிக்கையின் மீதான கடுகளவு சந்தேகமும் கூட தோல்விக்குத் தான் தோள் கொடுக்கும்...!!! கார்த்திக் பிரகாசம்...

சென்னை காதலன்...!!!

வந்தவர்களையெல்லாம் வாழ வைத்து விட்டு அவர்கள் பல பேரின் வாயில் இன்று வசைபட்டுக் கொண்டிருக்கிறாய்...!!! ஏற்கனவே மழையினால் சிதைந்து விட்ட சூழ்நிலையில் ஊட்டி வளர்த்த பலரின் வார்த்தைகளால் இன்னும் சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்..!!! வக்கற்று நின்ற போது வாழ நம்பிகையூட்டி என்னை வாழ்த்தியது நீ மட்டும் தான்...!!! இன்று நீ கலக்கமுற்று நிற்கும் போது உன் மீது வெறுப்பை உமிழ்பவன் நானல்ல...!!! நான் எப்பொழுதும் உன்னை காதலிக்கிறேன்.. ஆம்..!! நான் ஒரு சென்னை காதலன்...!!! கார்த்திக் பிரகாசம்...

முதல் முறை...!!!

முதல் முறை என் தெருவைத் தாண்டிச் சென்றேன்.. உன் சாதி என்னவென்று கேட்டார்கள்...!!! முதல் முறை என் மாவட்டத்தைத் தாண்டிச் சென்றேன்.. உன் மதம் என்னவென்று கேட்டார்கள்...!!! முதல் முறை என் மாநிலத்தைத் தாண்டிச் சென்றேன்.. உன் தாய் மொழி என்னவென்று கேட்டார்கள்...!!! என் நாட்டைத் தாண்டிச் சென்றேன்.. முதன் முறையாக என்னை ""இந்தியன்"" என்று ஒப்புக் கொண்டர்கள்..!!!. ஆங்கில வலைத்தலத்தில் படித்தது... கார்த்திக் பிரகாசம்...
     ரயில் பயணம் எப்பொழுதுமே சில சுவாரசியமான அனுபவங்களை ஏற்படுத்தும்.. அதனாலேயே ரயில் பயணம் என்பது இதுவரையில் சுகமானதாகவே இருந்து கொண்டிருக்கிறது.     இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கொண்ட ரயில் பயணம் கூட பல விதமான அனுபவங்களை ஏற்படுத்தியது.. கூடவே சில தாக்கங்களையும் ஏற்படுத்தியது..     பொதுவாக ரயில் பயணத்தின் போது பல புது மனிதர்களையும், சில வயதான அல்லது சில மாற்றுத்திறனாளிகள் பிச்சைக் கேட்டு வருபவர்களையும் காண நேரிடும்..     ஆனால் அன்று சற்று வித்தியாசனமான முறையில் இருவர் உதவிக் கேட்டு வருவதைக் காண முடிந்தது..     முதலில் ஒரு கர்ப்பமான பெண் தன் இடது கையை வயிற்றில் வைத்தவாறே உதவிக் கேட்டு வந்தார். பயணித்தவர்களில் சிலர் தங்களது சட்டைப் பையில் தீவிர தேடுதல் வேட்டை நிகழ்த்தி சில சில்லறை நாணயங்களைக் கொடுத்தனர். ஒரு சிலர் ஒன்னும் இல்லை என்று பிரக்ஞை செய்து அனுப்பினர்.    அந்த கர்ப்பிணிப் பெண் சென்ற சில மணி நேரங்கள் கழித்து வேறொரு பெண்மணி ஒரு இளம்பெண்ணுடன் உதவிக் கேட்டு வந்தார். தன் மகள் ஒரு ஏழைப் பெண் என்றும், அவளின்...
அப்பாவின் எதிர்பார்ப்பும் மகனின் யதார்த்தமும் என்றுமே ஒன்றிணைய முடியாத ஒரே இலக்கிற்கான ஒரே திசையில் பயணிக்கும் இரு வெவ்வேறு தண்டவாளங்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
    சந்திரா வேலைக்குச் செல்ல மிக  தாமதமாகிவிட்டது..  ஒரு ஆளாக மகனின் திருமண வேலைகளை செய்து கொண்டிருப்பதால் அன்று எப்பொழுதும் செல்லும் நேரத்தை விட வெகு தாமதமாகி இருந்தது..     பதற்றத்துடன் அவள் வீட்டினுள் நுழையும் போதே ராணியின் கண்களில் பட்டுவிட்டாள்.. ராணியின் வீட்டில் தான் சந்திரா வேலைப் பார்க்கிறாள்..     ஏற்கனவே சந்திராவின் வருகைக்காகக் காத்திருந்த ராணி அவளைப் பார்த்ததும் கோவமாக திட்டினாள்.. தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டு விட்டு சமையல் அறைக்குச் சென்றாள். சந்திரா எப்பொழுதும் தாமதமாக வருபவள் அல்ல.. ஆனாலும் ராணி திட்டியதற்காக அவள் வருந்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த தெருவில் யாருமே வேலை தராத போது ராணி மட்டும் தான் பெரிய மனதோடு அவளுக்கு வேலைத் தந்தாள்..    அதனால் எப்போதுமே சந்திராவிற்கு ராணியின் மீது பற்றும் மரியாதையும் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு ராணி சந்திராவிடம் ஒருபோதும் பரிவு காட்டியதில்லை..    சமையலறைக்குள் சென்ற சந்திராவைப் பின் தொடர்ந்து அன்றைய வேலைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு முடிக்கும்படிச் சொல்ல...
வாடகை வீட்டில் வாழ்பவனின் கனவுகளில் கடன் பட்டாவது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை...!!! சொந்தமாக வீடு வாங்கியவனுக்கு ஒரு நாளாவது  கடனில்லாத கனவு வர வேண்டும் என்ற ஆசை...!!! கார்த்திக் பிரகாசம்...
வாழ்க்கையில் தேடி வந்த தோசங்களுக்கிடையில் மனிதன் நாள் தோறும் நாடிச் செல்லும் ஒரே தோஷம் சந்"தோஷம்"...!!! கார்த்திக் பிரகாசம்...