சந்திரா வேலைக்குச் செல்ல மிக தாமதமாகிவிட்டது.. ஒரு ஆளாக மகனின் திருமண வேலைகளை செய்து கொண்டிருப்பதால் அன்று எப்பொழுதும் செல்லும் நேரத்தை விட வெகு தாமதமாகி இருந்தது..
பதற்றத்துடன் அவள் வீட்டினுள் நுழையும் போதே ராணியின் கண்களில் பட்டுவிட்டாள்.. ராணியின் வீட்டில் தான் சந்திரா வேலைப் பார்க்கிறாள்..
ஏற்கனவே சந்திராவின் வருகைக்காகக் காத்திருந்த ராணி அவளைப் பார்த்ததும் கோவமாக திட்டினாள்.. தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டு விட்டு சமையல் அறைக்குச் சென்றாள். சந்திரா எப்பொழுதும் தாமதமாக வருபவள் அல்ல.. ஆனாலும் ராணி திட்டியதற்காக அவள் வருந்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த தெருவில் யாருமே வேலை தராத போது ராணி மட்டும் தான் பெரிய மனதோடு அவளுக்கு வேலைத் தந்தாள்..
அதனால் எப்போதுமே சந்திராவிற்கு ராணியின் மீது பற்றும் மரியாதையும் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு ராணி சந்திராவிடம் ஒருபோதும் பரிவு காட்டியதில்லை..
சமையலறைக்குள் சென்ற சந்திராவைப் பின் தொடர்ந்து அன்றைய வேலைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு முடிக்கும்படிச்
சொல்லி காரில் பறந்துவிட்டாள் ராணி.
ராணியின் கடைசி மகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். வீட்டில் கடைசி சுப நிகழ்ச்சி என்பதால் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. பத்து நாட்கள் முன்பே சொந்த பந்தங்கள் வீட்டை அடைத்துக் கொண்டிருந்தனர்.
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ராணியின் வருகைக்காகக் காத்திருந்தாள் சந்திரா.. துணிக் கடைக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தாள் அவள். வெகு நேரமாகியும் ராணி வராததால் அவளின் மகளிடம் சொல்லிவிட்டு சந்திரா கிளம்பினாள்.
ராணியின் வீட்டில் இருந்து கிளம்பிய சந்திரா நேராக துணிக் கடைக்குச் சென்றாள். மகனின் திருமணத்திற்காக தன் முதலாளியான ராணிக்குத் துணி எடுக்க முடிவெடுத்திருந்தாள்.
எதிர்பாராதவிதமாக ராணியும் அதே கடையில் தான் துணி எடுத்துக்
கொண்டிருந்தாள். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் கவனிக்கவில்லை.
ராணி கடைப் பையனிடம் மிக குறைந்த விலையில் ஒரு சேலையைக் காட்டச் சொன்னாள். கடைப் பையனும் சேலையைக் காட்டி விட்டு, இதுவரையில் எல்லா துணிகளையும் அதிக விலையில் எடுத்து விட்டு இதை மட்டும் ஏன் குறைந்த விலையில் எடுக்குறீர்கள் என்று கேட்டான்..
அதற்கு ராணி சொன்னாள், என் மகளுக்கு திருமணம். வீட்டில் எல்லோருக்கும் துணி எடுத்து விட்டேன். ஆனால் என் வீட்டு வேலைக்காரிக்கு துணி எடுக்க மறந்துவிட்டேன். அவளுக்குத் தான் இந்த சேலை என்றாள். கடைப் பையனும் புருவத்தைத் தாழ்த்திக் கொண்டே சேலையை அவளிடம் கொடுத்தான்.. சேலையைப் பெற்று கொண்டு ராணி நகர்ந்தாள்..
ராணியைக் கவனிக்காத சந்திரா, சிறிது நேரத்தில் அந்த இடத்திற்குச் சென்றாள். அதே பையனிடம், இருக்கிறதிலேயே அதிக விலையில் உள்ள சேலைகளைக் காட்டச் சொன்னாள். அந்த பையன் சந்தோசமாக, சேலை யாருக்கு மா.? உங்களுக்கா...? என்ன விசேஷம்..? என்று கேட்டான்.
சந்திரா சிரித்துக் கொண்டே சொன்னாள், "சேலை எனக்கில்லை தம்பி, என் மகனுக்கு திருமணம் முடிவாயிருக்கு. என் முதலாளி அம்மாவிற்கு சேலை எடுத்து வைச்சு அவங்கள கல்யாணத்துக்கு கூப்படனும்னு ஒரு ஆசை" அதான் என்றாள்.
அந்த கடைப் பையனுக்கு சந்திராவின் குணத்தைப் பார்த்து பயங்கர சந்தோஷம். கடைப் பையன் இருவரையும் நினைத்து யோசித்தான்..
பணம் இருப்பவர்களிடமெல்லாம் நல்ல குணம் இருப்பதில்லை.. ஆனால் பணம் இல்லாதவர்களிடம் கூட நல்ல மனமும், முடிந்ததை செய்ய வேண்டும் என்ற குணமும் இருப்பதை உணர்ந்தான்.
தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்து, சேலை எடுத்துக் கொண்டு, சந்திரா தன்னிறைவுடன் சென்றாள்...
கார்த்திக் பிரகாசம்...
பதற்றத்துடன் அவள் வீட்டினுள் நுழையும் போதே ராணியின் கண்களில் பட்டுவிட்டாள்.. ராணியின் வீட்டில் தான் சந்திரா வேலைப் பார்க்கிறாள்..
ஏற்கனவே சந்திராவின் வருகைக்காகக் காத்திருந்த ராணி அவளைப் பார்த்ததும் கோவமாக திட்டினாள்.. தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டு விட்டு சமையல் அறைக்குச் சென்றாள். சந்திரா எப்பொழுதும் தாமதமாக வருபவள் அல்ல.. ஆனாலும் ராணி திட்டியதற்காக அவள் வருந்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த தெருவில் யாருமே வேலை தராத போது ராணி மட்டும் தான் பெரிய மனதோடு அவளுக்கு வேலைத் தந்தாள்..
அதனால் எப்போதுமே சந்திராவிற்கு ராணியின் மீது பற்றும் மரியாதையும் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு ராணி சந்திராவிடம் ஒருபோதும் பரிவு காட்டியதில்லை..
சமையலறைக்குள் சென்ற சந்திராவைப் பின் தொடர்ந்து அன்றைய வேலைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு முடிக்கும்படிச்
சொல்லி காரில் பறந்துவிட்டாள் ராணி.
ராணியின் கடைசி மகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். வீட்டில் கடைசி சுப நிகழ்ச்சி என்பதால் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. பத்து நாட்கள் முன்பே சொந்த பந்தங்கள் வீட்டை அடைத்துக் கொண்டிருந்தனர்.
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ராணியின் வருகைக்காகக் காத்திருந்தாள் சந்திரா.. துணிக் கடைக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தாள் அவள். வெகு நேரமாகியும் ராணி வராததால் அவளின் மகளிடம் சொல்லிவிட்டு சந்திரா கிளம்பினாள்.
ராணியின் வீட்டில் இருந்து கிளம்பிய சந்திரா நேராக துணிக் கடைக்குச் சென்றாள். மகனின் திருமணத்திற்காக தன் முதலாளியான ராணிக்குத் துணி எடுக்க முடிவெடுத்திருந்தாள்.
எதிர்பாராதவிதமாக ராணியும் அதே கடையில் தான் துணி எடுத்துக்
கொண்டிருந்தாள். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் கவனிக்கவில்லை.
ராணி கடைப் பையனிடம் மிக குறைந்த விலையில் ஒரு சேலையைக் காட்டச் சொன்னாள். கடைப் பையனும் சேலையைக் காட்டி விட்டு, இதுவரையில் எல்லா துணிகளையும் அதிக விலையில் எடுத்து விட்டு இதை மட்டும் ஏன் குறைந்த விலையில் எடுக்குறீர்கள் என்று கேட்டான்..
அதற்கு ராணி சொன்னாள், என் மகளுக்கு திருமணம். வீட்டில் எல்லோருக்கும் துணி எடுத்து விட்டேன். ஆனால் என் வீட்டு வேலைக்காரிக்கு துணி எடுக்க மறந்துவிட்டேன். அவளுக்குத் தான் இந்த சேலை என்றாள். கடைப் பையனும் புருவத்தைத் தாழ்த்திக் கொண்டே சேலையை அவளிடம் கொடுத்தான்.. சேலையைப் பெற்று கொண்டு ராணி நகர்ந்தாள்..
ராணியைக் கவனிக்காத சந்திரா, சிறிது நேரத்தில் அந்த இடத்திற்குச் சென்றாள். அதே பையனிடம், இருக்கிறதிலேயே அதிக விலையில் உள்ள சேலைகளைக் காட்டச் சொன்னாள். அந்த பையன் சந்தோசமாக, சேலை யாருக்கு மா.? உங்களுக்கா...? என்ன விசேஷம்..? என்று கேட்டான்.
சந்திரா சிரித்துக் கொண்டே சொன்னாள், "சேலை எனக்கில்லை தம்பி, என் மகனுக்கு திருமணம் முடிவாயிருக்கு. என் முதலாளி அம்மாவிற்கு சேலை எடுத்து வைச்சு அவங்கள கல்யாணத்துக்கு கூப்படனும்னு ஒரு ஆசை" அதான் என்றாள்.
அந்த கடைப் பையனுக்கு சந்திராவின் குணத்தைப் பார்த்து பயங்கர சந்தோஷம். கடைப் பையன் இருவரையும் நினைத்து யோசித்தான்..
பணம் இருப்பவர்களிடமெல்லாம் நல்ல குணம் இருப்பதில்லை.. ஆனால் பணம் இல்லாதவர்களிடம் கூட நல்ல மனமும், முடிந்ததை செய்ய வேண்டும் என்ற குணமும் இருப்பதை உணர்ந்தான்.
தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்து, சேலை எடுத்துக் கொண்டு, சந்திரா தன்னிறைவுடன் சென்றாள்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment