Skip to main content

Posts

Showing posts from November, 2016

அறிவுப்பசி

அப்பா அம்மா இருவரும் உண்ணும் உண்ணாமல் உயிரைப் பசிக்கு தீனியாயிட்டு மகனைப் படிக்க வைத்தனர். பெற்றோரின் கஷ்டத்தை நன்கு அறிந்து வளர்ந்த பையன். முடிந்த எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பான். மதிப்பெண்கள் அவன் அறிவிடம் மண்டியிட்டு காத்துக் கிடந்தன. ஒருநாள் அவன் பள்ளியில் கட்டுரைப் போட்டி அறிவித்தனர். போட்டியின் தலைப்பாக "அறிவுப்பசி" என்று அறிவிக்கப்பட்டது. அவன் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தான். போட்டி நாள் வந்தது. தன் ஆசையைப் பற்றி நிதானமாக வார்த்தைகள் சிதறாமல் உணர்வுகள் பிறழாமல் கட்டுரையொன்றை வடித்தான். எத்தனையோ மாணவர்கள் பங்கேற்றப் போட்டியில் அனைத்து ஆசிரியர்களும் ஒருதலைபட்சமாக அவனுடைய கட்டுரையைத் தெரிவு செய்தனர். பரிசு வழங்கும் போது மேடையில் அவன் எழுதிய கட்டுரையை ஆசிரியர் ஒருவர் வாசித்தார். "பசியை அத்தியாவசியமாகவும் ருசியை ஆடம்பரமாகவும் கருதும் குடும்பம் என்னுடையது. மூன்று வேளை முழுதாய் சாப்பிடுவது என்பதெல்லாம் எங்களுக்கு கனவில் மட்டுமே சாத்தியம். கனவில்கூட மூன்று வேளை உணவு கிடைக்குமா என்பது பற்றியதுதானே தவிர அதன் ருசியைப் பற்றி இருக்காது. ஏனென்றால் தினசரி சோற...
பி.ஏ வரலாறு படித்து விட்டு குடும்ப கஷ்டத்திற்காக டீக்கடையில் வேலை செய்யும் இளைஞன். தகவல் தொழில் நுட்ப பூங்காக்களுக்கு வெளியில் நின்றுக் கொண்டு கடந்து செல்பவர்களிடம் மட்டுமல்ல திரும்பிக்கூட பார்க்காதவர்களிடமெல்லாம் ஏதாவதொரு கடன் அட்டை அல்லது வங்கிக் கடனுக்கான அட்டையை நீட்டிக் கொண்டு நிற்பவன். மூன்றுவேளை சாப்பாட்டிற்காக பல அடி உயரத்தில் தொங்கி உயிரைப் பணயம் வைத்து கண்ணாடியைத் துடைக்கும் சாமானியன். புல் தரையை இயந்திரம் மூலம் சீர்ப்படுத்திக் குப்பையை கையில் அள்ளிக்கொண்டு செல்லும் பல அக்காக்கள். துடைக்க துடைக்க நடந்து கொண்டே இருக்கும் தரையை மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் பெரியவர். தினமும் இதுபோல இன்னும் பலரைத் தாண்டி தான் வாழ்க்கையின் அன்றாட நாளை நிறைவு செய்ய முடிகிறது. பலருக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. ஆனால் அதற்காக அவர்கள் வாழ்க்கையை வெறுமனே விட்டு விடுவதில்லை. பிடித்த வேலை பிடிக்காத வேலை எளிதான வேலை கடினமான வேலை என்பதையெல்லாம் தாண்டி "பசி" என்ற ஒற்றை அரக்கனிடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள மட்டுமே அன்றாட நாட்களை இத்தகைய வ...
நீ மறுத்துவிட்டதால் மறந்துவிடவில்லை வேண்டாமென்றதால் வெறுத்துவிடவில்லை தூரம் சென்றுவிட்டதால் துறந்துவிடவில்லை தொந்தரவு முடிந்ததென்று தொலைத்துவிடவுமில்லை நீ விருப்பமில்லையென்றதனால் விலகி நிற்கின்றேன் அவ்வளவுதான் நான் காதலிப்பது வேண்டுமானால் எனக்காக இருக்கலாம் ஆனால் இன்று விலகி நிற்பது உனக்காக என்றும் நான் இருக்கின்றேன் என புரிய வைப்பதற்காகவே ஒரே ஒரு சோகம் நான் கொண்ட காதலுக்காக நாம் கொண்ட நட்பை இழக்க வேண்டியதாயிற்று பரவாயில்லை காதலில் இழப்புகள்தான் இருப்பின் அருமையை இருத்தும் மறுப்புகள்தான் காதலின் மாண்பைக் காக்கும் வெறுப்புகள்தான் காதலின் புரிதலைப் பூர்த்திச் செய்யும் தூரங்கள்தான் காதலின் தொலைவைக் குறைக்கும் தொந்தரவுகள்தான் காதலில் துணிச்சலைக் கொடுக்கும் பிரிவுகள்தான் சில சமயங்களில் பிரியத்தை உணர்த்தும் உன்னிடமிருந்து விலகி நிற்கின்றேனே தவிர உன்னை விலக்கி அல்ல... கார்த்திக் பிரகாசம்...

கறுப்புச் சட்டை காதல்

நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ முறை அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளான் ராஜா. ஆனால் ஒருபோதும் பிரியா அதற்கு பதில் அளித்ததே இல்லை. புரிந்தாலும் புரியாதது போல் அப்போதைக்கு சமாளித்து விட்டு வேறு பேச்சுக்கு சென்று விடுவாள். எப்படியோ அவள் தன்னை மறுக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை என்று மனதை தேற்றிக் கொள்வான் ராஜா. என்றோ ஒரு நாள் தன்னை ஏற்றுக் கொள்வாள் தன் காதலைப் புரிந்து கொள்வாள் என்று ராஜாவும் காத்திருந்தான். ராஜா கறுப்புச் சட்டை விரும்பி அணிபவன். பார்க்கும் போதெல்லாம் கறுப்புச் சட்டையையே அணிவதற்காகப் பிரியா அவனைத் திட்டிக் கொண்டே இருப்பாள். ஆனால் அவன் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடுவான். அன்று ராஜாவின் பிறந்தநாள். இருவரும் சந்திப்பதற்காக ஏற்கனவே பேசி இருந்தனர். பிறந்தநாள் அன்றாவது கறுப்புச் சட்டை அணிய வேண்டாம் என்று பிரியா சொல்லி இருந்தாள். ஆனால் ராஜா அதைப் பொருட்படுத்தவில்லை. வழக்கம்போல கறுப்புச் சட்டையை மாட்டிக் கொண்டு இன்று எப்படியாவது அவளது முடிவைக் கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினான் சிரித்த முகமாக நின்றுக் கொண்டிருந்தப் பிரியா, இவன் கறுப்புச்...

"Khoya-Paya"

கேட்பாரற்றுக் கிடக்கும் குழந்தைகளை எங்கேயாவது கண்டால் புகைப்படத்துடன் இத்தளத்தில் http://khoyapaya.gov.in/  பதிவு  செய்யலாம். இதன் மூலம் குழந்தையைத் தொலைத்தவர்கள் இத்தளத்தில் தேடும் போது தங்கள் குழந்தையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கேட்பாரற்றுக் கிடக்கும் குழந்தையைப் பற்றி குறிப்பிடுவதற்கும், தொலைந்த குழந்தையைத் தேடுவதற்கும் இந்தத் தளத்தை பயன்படுத்திக் கொள்ளவும். கார்த்திக் பிரகாசம்
அவளும் நானும் பிரிவும் புரிவும் கார்த்திக் பிரகாசம்
நிர்வாணக் குழந்தையின் குதூகலத்தில் கடந்த காலத்தின் துயரங்களைத் துடைத்து கண்ணீரில் தூக்கிலிட்டாள் அந்த இளம் விதவை தாய்...!!! கார்த்திக் பிரகாசம்...

அவள் நாளை அவனைச் சந்திக்கப் போகிறாள்...

அவனைச் சந்திக்கும் போதெல்லாம் பிய்த்துக் கொண்டு கிளம்பும் கண்ணீர்த் துளிகளுக்கு கணக்கு வழக்கில்லை கட்டிப்பிடிக்கத் துடிக்கும் கரங்களும் அதைக் கட்டுப்படுத்திக் கொல்லும் கண்ணியமும் அவளுக்கொன்றும் கவலையில்லை அஞ்சனத்தையே கண்ணீருக்கு தடுப்பணை ஆக்குவதும் அவனின் விரல் பசிக்கு வெட்கத்தை விருந்தளிப்பதும் அவள் எப்போதும் விரும்பி ஏற்கும் இன்னல்கள் இதோ இந்த இரவு நகர மறுக்கின்றது இதயம் இடைவெளியின்றி இசைக்கின்றது ஏசி அறையின் வெப்பம் வேர்வையை விதைக்கின்றது நகங்களின் உயரம் எச்சிலில் கரைகின்றன விரல்களின் சடக்கைச் சத்தம் அறையின் செவிகளில் செத்து மடிகின்றன கால்கள் நிலத்தை முரட்டுத் தனமாக முத்தமிடுகின்றன முந்திக் கொண்டு வரும் உறக்கம் இன்று பரதேசம் போய்விட்டது அவள் நாளை அவனைச் சந்திக்கப் போகிறாள்... கார்த்திக் பிரகாசம்...
இறந்த காலமெல்லாம் அவளோடு இருந்த காலமென்பதால் அவள் இல்லாத எதிர்காலம் என்னவாகுமோவென்று நிகழ்காலம் நித்தம் நித்தம் நிம்மதியின்றி நகர்கின்றது...!!! கார்த்திக் பிரகாசம்...

தூய்மையான இந்தியா

இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் பயன்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் "ஊழலுக்காக எதிராக நாம் எடுக்கும் முதல் முதல் போராட்டம் இது" என்று கூறியுள்ளார். நள்ளிரவு முதல் நேரடியாகப் பயன்படுத்த முடியாதே தவிர மருத்துவமனைகள், இடுகாடுகள் மற்றும் எரிபொருள் நிலையங்களில் 500, 1000 தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் டிசம்பர் 31 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று இவ்வாறு அமல்படுத்தியதில் பாதகங்கள் பல இருந்தாலும் சில முக்கிய சாதகமான விடயங்களையும் நாம் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் பலர், இப்பொழுது கண்டிப்பாகத் தங்கள் பணத்தை வெளியே எடுத்தே வேண்டும். அவ்வளவு பெரிய தொகையை மாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக வங்கிகளின் மூலம் தான் மாற்ற முடியும். எனவே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு பணங்கள் வங்கிக்கு மாற்றப்படும் போது முறையான வெள்ளை பணமாக மாறும். வரி காட்டாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தகையத் தொகைகளுக்கு அவர்களாகவே முன்வந்து வரிக்...
உணர்வுகளின் முதலீடில்லாமல் உறவுகளின் நிலை தான் என்னவோ..? கார்த்திக் பிரகாசம்...
இன்றைய தினம் இன்றோடு முடிவதற்காக அல்ல...!!! கார்த்திக் பிரகாசம்...

இந்தியாவில் முதல்முறையாக ஆன்லைன் வாக்குப்பதிவு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தேர்தலில் ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராணுவத்தில் பணிபுரிபவர்கள், இடைத்தேர்தலில் ஆன்லைன் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. கார்த்திக் பிரகாசம்...

லஜ்ஜா அவமானம்

இந்தியாவில் 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் பங்களாதேஷத்தில் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொகுப்பு தான் லஜ்ஜா. தஸ்லிமா நஸ்ரினால் எழுதப்பட்டு, கே.ஜி.ஜவர்லால் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உண்மை அல்லது உண்மைக்கு அருகாமையான விடயங்களை கதையின் பாத்திரங்களும் மூலம் பதிமூன்று நாட்களில் முடியும் நாவலாக அமைத்திருக்கிறார் தஸ்லீமா நஸ்ரின். இந்துக்கள் என்ற போர்வையில் ஒரு சிலரால் அல்லது சில அமைப்பால் செய்யப்பட்ட ஒரு செயல், இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள ஒரு தேசத்தில் எந்த அளவுக்கு கொடுமைகளை, மதம் என்ற பெயரில் வக்கிரங்களை அவர்களுக்கு இழைத்துள்ளது என்பதை ஆழமாக விவரிக்கின்றது. மதச்சார்பற்ற நாடு என்று வெளியில் மார்த்தட்டிக் கொண்ட தேசம் (பங்களாதேஷ்), அரசியல் கட்சிகளால் எப்படி இஸ்லாமிய தேசமாக உருமாற்றப்பட்டது அதனால் மற்ற மதத்தினர்(குறிப்பாக இந்துக்கள்) மேற்கொண்ட இடப்பெயர்வு ஆகியவற்றை புள்ளி விவரங்களுடன் பதிவு செய்கின்றது. ஒருங்கிணைந்த வங்காளிகளாக பங்களாதேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களை, சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லீம் இந்து என்று மதமென்ற மண்ணுக்குள் புதைத்து வ...
கவலைக்குக் காந்தத் தன்மை உண்டு.. ஒரு கவலை ஓராயிரம் கவலைகளை ஈர்க்கும் வல்லமையுடையது... கார்த்திக் பிரகாசம்...
அவளும் அவனை காதலித்தாள் அது பொய்யில்லை ஆனால் நிஜமுமில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
மழை நின்று வெகுநேரமாகிவிட்டது இருந்தும் மரத்தடியிலேயே காத்திருக்கிறேன் மரக் கிளைகளின் தூறல் நிற்க...!!! கார்த்திக் பிரகாசம்...